எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தேர்தல் முடியும் வரை டெல்லியில் சி.பி.ஐ. விசாரணைக்கு நேரில் ஆஜர் ஆக விலக்கு அளிக்க வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.
தேர்தல் நேரத்தில் அடிக்கடி டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை செல்வதால் தமிழகத்தில் தேர்தல் பரப்புரை செய்ய முடியவில்லை என்றும் ஆகவே தேர்தல் முடியும் வரை நேரில் ஆஜர் ஆவதற்கு தடை விதிக்க நடிகர் விஜய் நீதிமன்றம் செல்ல உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராகும்படி சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், தேர்தல் பரப்புரை மற்றும் அரசியல் பணிகளைக் காரணம்காட்டி, நேரில் ஆஜராவதிலிருந்து 15 நாட்கள் விலக்கு அளிக்க வேண்டும் என்று விஜய் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது. ஒருவேளை சி.பி.ஐ. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து, தொடர்ந்து சம்மன் அனுப்பினால், விஜய் நீதிமன்றத்தை அணுகி தேர்தல் முடியும் வரை நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அல்லது சம்மனை நிறுத்தி வைக்கக் கோரி மனு தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு கரூரில் நடந்த தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் விஜய் இரண்டு முறை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


