எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து, மக்கள் மனுக்களை அளிப்பதற்கு, மனுக்கள் பெறப்படும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டு, தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டன. இதனால், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்த போஸ்டர்கள், பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, பொதுமக்கள் அவர்களது கோரிக்கை மனுக்களை தபால் மூலமாகமும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் வரவேற்பு பகுதியில் வைக்கப்பட்டுள்ள மக்கள் குறைதீர்வு மனுக்கள் பெறும் பெட்டியில் மனுக்களை செலுத்தும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து கலெக்டர் அலுவலகங்களில் மக்கள் குறைதீர்க்கும் மனுக்கள் பெறப்படும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
மனுக்களை அளிக்க வரும் பொதுமக்கள், அவர்களது மனுக்களை அந்தப் பெட்டியில் இட்டுச் செல்லலாம். அதற்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு புகார் பெட்டி நிறைந்தவுடன், அவற்றை மாவட்ட கலெக்டர்அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். இந்தப் பெட்டியில் பெறப்படும் மனுக்களை அதிகாரிகள் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


