எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ச் சிறுகதையின் தடங்கள் என்ற புத்தகத்துக்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றாக சாகித்திய அகாடமி விருது கருதப்படுகிறது. நாட்டின் அதிகாரப்பூர்வமான 24 மொழிகளில், கவிதை, சிறுகதை, நாவல், இலக்கிய ஆய்வு படைப்புகளில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அந்தந்த மொழிகளில் எழுத்தாளர்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். முன்னதாக 2025-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்தது.
ஆனால், விருதுகளை இறுதி செய்வதில் இழுபறி நீடித்ததால் அந்த நிகழ்ச்சி கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால், செய்தியாளர்களுடனான சந்திப்பையும் சாகித்திய அகாடமி நிர்வாகிகள் ரத்து செய்திருந்தனர். இந்நிலையில் சாகித்திய அகாடமி, அதிகாரப்பூர்வமாக விருது பட்டியலை வெளியிட்டுள்ளது. 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழில் 2024-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருதை, திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908 (ஆய்வு நூல்) புத்தகத்துக்காக எழுத்தாளர் ஆ.இரா. வேங்கடாசலபதி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


