Idhayam Matrimony

தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

திங்கட்கிழமை, 16 மார்ச் 2026      தமிழகம்
Mdu-High-Court 2023-04-06

மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஆ.குமாரபுரத்தை சேர்ந்த வக்கீல் மாரீஸ்வரி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் பிளஸ்-2 மாணவி கடந்த 10-ந்தேதி மாயமான நிலையில், 11-ந்தேதி உடலில் படுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார். மாணவி கொலை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், விசாரணையை முறையாக நடத்தவும் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட வேண்டும், மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், இந்த கொலை வழக்கின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதியை நியமிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். 

வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட் பிளஸ்-2 மாணவி கொலை சம்பவம் குறித்து அறிவியல் பூர்வமான விசாரணையை நடத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதிராமன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி வாதிடுகையில், குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது என்றார்.

இதற்கிடையே மாணவியின் பெற்றோர் சார்பில் ஆஜரான வக்கீல், மாணவி இறப்பு விவகாரத்தில் போலீசார் மெத்தனமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அப்போது நீதிபதிகள் இந்த விவகாரத்தை பொருத்த அளவில் காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்கும் பட்சத்தில் சம்பந்தமில்லாத நபர்களை கைது செய்து விடுவார்கள் என்றனர்.

பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அவர்களுடைய வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவாக போலீசார் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் மாணவி கொல்லப்பட்ட வழக்கை விசாரிக்க போலீஸ் டி.எஸ்.பி. சுந்தரபாண்டியனை விசாரணை அதிகாரியாக நியமிக்கிறோம். இந்த விசாரணை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் தொடர்ந்து மாணவி கொலை வழக்கை இந்த கோர்ட்டு தீவிரமாக கண்காணிக்கும் என்று உத்தரவிட்டு, ஏப்ரல் 2-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து