முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உலகின் முதல் பல்கலை கழகம்

Image Unavailable

உலகின் முதல் பல்கலை கழகம் பண்டைய இந்தியாவில் அமைக்கப்பட்டது  என்பது எத்தனை பேருக்கு தெரிந்திருக்கும். அதன் பெயர் தக்சஸீலா. பரதன் தனது மகன் தட்சனுக்காக நிர்மாணிக்கப்பட்ட நகரம் தக்சஸீலம் என்று சொல்லப்படுகிறது. தட்சஸீல பல்கலை கழகத்தின் காலம் கிமு 6 லிருந்து 7 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அர்த்த சாஸ்திரம் என்ற அரசியல் நூலை எழுதிய சாணக்கியர் இங்கு பேராசிரியராக பணியாற்றினார். அவரிடம் மெளரிய அரசர் சந்திர குப்தர் கல்வி பயின்றார். மற்றொரு புகழ் பெற்ற பேராசிரியர் சமஸ்கிருத அறிஞரான பாணினி. அசோகர் காலத்தில் இது மேலும் விரிவாக்கம் பெற்றது. காலப்போக்கில் பல்வேறு படையெடுப்புகள், ஆட்சிமாற்றங்கள் காரணமாக தட்சஸீலம் படிப்படியாக அழிந்தது.  அது சரி தற்போது அந்த இடம் எங்கே இருக்கிறது என்கிறீர்களா..பாகிஸ்தானில். பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்