தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலை,மார்ச்.24 - திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. அமைச்சர் எ.வ. வேலுவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் 780 மடங்கு அதிகரித்துள்ளது. இவரது தற்போதைய சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 8 கோடியாம். ஆனால் கடந்த 2006-ம் ஆண்டில் இவர் தேர்தலில் போட்டியிட்டபோது இவரது சொத்து மதிப்பு வெறும் ரூ. ஒரு லட்சம்தான். தேர்தல் கமிஷனில் அப்படித்தான் இவர் கணக்கு தாக்கல் செய்துள்ளார். ஆனால் இப்போது இவருக்கு கிட்டத்தட்ட ரூ.8 கோடி சொத்து இருப்பதாக தனது வேட்புமனு பிரமாணப்பத்திரத்தில் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக அமைச்சர் எ.வ.வேலு போட்டியிடுகிறார். இவர் கடந்த 20-ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது தனது பெயரிலும் தனது மனைவி பெயரிலும் உள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் விபரங்களை அவர் தாக்கல் செய்துள்ளார். இதன்படி ரூ.7 கோடியே 51 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்களும் 43 லட்சத்து 98 ஆயிரத்து 423 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் இருப்பதாக இவர் கணக்கு காட்டியுள்ளார். அந்த கணக்கில் சிலவற்றை இங்கு காணலாம். கடந்த 2009-2010-ல் தனக்கு மொத்த வருமானம் ரூ.7 லட்சத்து 47 ஆயிரத்து 974 என்றும் 2005-2006-ம் ஆண்டில் தனது மனைவி ஜீவாவுக்கு ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்து 970 வருமானம் வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தன்னிடம் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் மனைவிடம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரமும் கையிருப்பு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். சென்னை கனரா வங்கி கிளையில் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்து 900-ம் திருவண்ணாமலை இந்தியன் வங்கி கிளையில் ரூ.14 லட்சத்து 97 ஆயிரத்து 523-ம் தன் பெயரில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் மனைவி பெயரில் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். தன்னிடம் தங்கம்,வெள்ளி நகைகள் எதுவும் இல்லை என்றும் தன் மனைவி ஜீவாவிடம் ரூ.5 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள 60 பவுன் பழைய தங்க நகைகள் உள்ளதாக எ.வ.வேலு குறிப்பிட்டுள்ளார். தனது பெயரில் தென்மாத்தூர், கீழநாச்சிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 172 மதிப்புள்ள 57 ஏக்கர்,84 சென்ட் விவசாய நிலம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.ஒரு கோடியே 75 லட்சத்து 75 ஆயிரத்து 500 ஆகும். தன் மனைவி பெயரில் கீழநாச்சிப்பட்டி கிராமத்தில் 2 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் 14 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இதன் இப்போதைய சந்தை மதிப்பு 5 லட்ச ரூபாயாகும். திருவண்ணாமலை பெரிய தெருவில் 1999-ம் ஆண்டு தனது பெயரில் 23 லட்சத்து 53 ஆயிரத்து 850 ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 600 சதுர அடி கட்டிடம் விலைக்கு வாங்கப்பட்டது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.ஒரு கோடியே 25 லட்சத்து 50 ஆயிரத்து 500 என்று குறிப்பிட்டுள்ளார். தானும் தனது மனைவியும் விவசாயிகள் என்றும் தான் தாக்கல் செய்த சொத்துப்பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் தனக்கு 7 கோடியே 51 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும் 43 லட்சத்து 98 ஆயிரத்து 423 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களும் இருப்பதாக வேலு குறிப்பிட்டுள்ளார். ஆனால் கடந்த முறை இவர் தேர்தலில் போட்டியிட்டபோது இவருக்கு இருந்த சொத்து மதிப்பு மொத்தமே ரூ. ஒரு லட்சம்தான். அதை அவரே தனது பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளார். அதாவது தன் பெயரில் ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம் இருப்பதாகவும் ரூபாய் 15 ஆயிரம் மதிப்புள்ள 3 பவுன் நகை இருப்பதாகவும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 1.10 ஏக்கர் நிலம் மீஞ்சூர் கிராமத்தில் இருப்பதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார். ஆக மொத்தம் இவர் அன்று குறிப்பிட்ட சொத்தின் மதிப்பு ரூ.ஒரு லட்சம்தான். ஆனால் இன்று அவருக்கு இருக்கும் சொத்து கிட்டத்தட்ட 8 கோடி. 780 மடங்கு இவரது சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம். கடந்த முறை மனுத்தாக்கல் செய்தபோது தன் மனைவி பெயரில் எதுவுமே இல்லை என்று குறிப்பிட்டு இருந்த இவர், இந்த முறை மனுத்தாக்கல் செய்தபோது 2005-2006-ம் ஆண்டில் தனது மனைவிக்கு ரூ.4 லட்சத்து 90 ஆயிரத்து 970 வருமானம் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதிலும் முரண்பாடு காணப்படுகிறது. எது எப்படியோ கடந்த 5 ஆண்டுகளில் இவரது சொத்தின் மதிப்பு இமயத்தின் உச்சிக்கே சென்றிருப்பதை மக்கள் தெரிந்து கொள்ளலாம். இது எப்படி என்பதை மக்கள்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
தமழக உணவுத்துறை அமைச்சர”க இருந்து வரும் எ.வ.வேலு கடந்த 2006ல் தண்ட”ரம்பட்டு தெ”குதியில் பே”ட்டியிட்ட”ர் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபே”ல் மற்றெ”ரு அமைச்சர”ன அன்பரசனின் செ”த்துக்களும் கடந்த 5 ஆண்டுகளில் பல மடங்கு அதிகரித்துள்ளத”க தெரியவருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 23-05-2022
23 May 2022 -
காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி : இலங்கை எம்.பி. மனோ.கணேசன் உருக்கம்
23 May 2022இலங்கை : காலம் அறிந்து உதவிய தமிழக உடன்பிறப்புகளுக்கு நன்றி என்று இலங்கை எம்.பி. மனோ.கணேசன் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு- அதிபர் ஜெலன்ஸ்கி கவலை
23 May 2022உக்ரைனில் நாள்தோறும் 100 ராணுவ வீரர்கள் உயிரிழப்பதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்துள்ளார்.
-
குரங்கு காய்ச்சல் - 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் பாதிப்பு
23 May 2022ஜெனீவா : 12 நாடுகளை சேர்ந்த 92 பேர் குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர்
23 May 2022குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
-
ஆஸ்திரேலியா புதிய பிரதமராக பதவியேற்றார் அந்தோணி அல்பானீஸ்
23 May 2022கான்பெரா : ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார் அந்தோணி அல்பானீஸ்.
-
பராமரிப்பாளரின் விரலை கடித்து துப்பிய சிங்கம்
23 May 2022கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவில் சிங்கம் ஒன்று பராமரிப்பாளரின் விரலை கடித்து குதறும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது
23 May 2022முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
23 May 2022புதிய வகை ஒமைக்ரான் தொற்று குறித்து அச்சமடைய தேவையில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
ரூ.500 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
23 May 2022புதுடெல்லி : இனி ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்துக்கும் ‘கதிசக்தி’ திட்டத்தின் கீழ் உருவாக் கப்பட்டுள்ள ‘இணைப்புத் திட்டக் குழு’வின் வ
-
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடக்கம்: பயிர் உற்பத்தியில் தேசிய அளவில் முதல் 3 இடங்களை அடைய இலக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
23 May 2022பயிர்களின் உற்பத்தித் திறனில் தேசிய அளவில் முதல் மூன்று இடங்களை அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
-
கொரோனா அச்சுறுத்தல் இருந்தும் மாஸ்க் அணியாமல் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிபர் 'கிம்'
23 May 2022தன்னை தலைவனாக உருவாக்கிய ராணுவ அதிகாரி மரணமடைந்த நிலையில் அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் வடகொரிய அதிபர் கிம் பங்கேற்றார்.
-
போர்க் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரஷிய வீரருக்கு வாழ்நாள் சிறை தண்டனை உக்ரைன் கோர்ட்டு தீர்ப்பு
23 May 2022ரஷியா உக்ரைன் இடையேயான போரின், முதலாவது போர்க்குற்ற விசாரணையில் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
-
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு செல்ல சவுதி அரேபியா தடை
23 May 2022கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதி முதல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
-
கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைத்தன ராஜஸ்தான், மகாராஷ்டிரா
23 May 2022கேரள மாநிலத்தை தொடர்ந்து பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை ராஜஸ்தான், மகாராஷ்டிரா மாநில அரசுகள் குறைத்துள்ளன.
-
விருதுநகரில் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி தாக்கல் செய்தார்
23 May 2022விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
-
தைவான் மீது சீனா படையெடுத்தால் அந்நாட்டை பாதுகாக்க அமெரிக்கா களத்தில் இறங்கும் அதிபர் ஜோ பைடன் சூளுரை
23 May 2022தைவானை சீனா தாக்கினால், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகளை அனுப்பும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
-
இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு: ஜப்பான் தொழில் துறையினரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சு
23 May 2022டோக்கியோ : இந்தியாவில் தொழில் தொடங்க வருமாறும், இந்தியாவில் முதலீடு செய்யக்கோரி ஜப்பான் தொழில் துறையினருடன் நேற்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
கூட்டணி கட்சிகளால் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி பாதித்துள்ளது : தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி
23 May 2022சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் வளர்ச்சி பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழகத்தில் உருவான அரசியல் கூட
-
கோடை விடுமுறையில் வெளியூர் செல்ல மக்கள் ஆர்வம்: அரசு பஸ்களில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து பயணம் : ஒரே வாரத்தில் இரு மடங்காக அதிகரித்த பயணிகள் எண்ணிக்கை
23 May 2022சென்னை : கோடை விடுமுறை தொடங்கியதை அடுத்து வெளியூர் மற்றும் சொந்த ஊர் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவதால் அரசு விரைவு பேருந்துகளில் தினமும் 22 ஆயிரம் பேர் முன்பதிவு செய்து ப
-
பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்து பேசுகிறார் : அண்ணாமலை மீது செந்தில்பாலாஜி விமர்சனம்
23 May 2022கரூர் : பெட்ரோல் வரி விகிதத்தில் சில விஷயங்களை மறைத்தும் மறந்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். சிலருக்கு புரிதலும் இல்லை.
-
போதிய அளவில் மாணவர் சேர்க்கை இல்லாததால் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் மூடல் : அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
23 May 2022சென்னை : தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் மூடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
-
குறுவை சாகுபடிக்கு 3.675 மெ.டன் விதைகள், 56,229 மெ.டன் உரங்கள் இருப்பு வைப்பு : உழவர் நலத்துறை அமைச்சகம் தகவல்
23 May 2022சென்னை : குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்
-
12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி ரயில் சேவை தொடக்கம்
23 May 2022மதுரை : 12 ஆண்டுகளுக்குப்பின் மே 26 முதல் மதுரை-தேனி இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதை அடுத்து மதுரை, தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.