எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.26 - சினிமா நூற்றாண்டு மாளிகையை முதல்அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகில் உள்ளது. இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளை சேர்ந்த திரைப்பட துறையினரின் பல்வேறு பிரிவுகளின் கூட்டமைப்பாக தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை செயல்பட்டு வருகிறது. இதில் சினிமா தொடங்கி இந்தாண்டுடன் நூறு ஆண்டுகள் முடிவடைவதால் வர்த்தக சபை வளாகத்தில் கட்டப்பட்டிருக்கும் புதிய கட்டடத்திற்கு சினிமா நூற்றாண்டு மாளிகை என்று பெயர் வைத்துள்ளனர்.
இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. முதல்அமைச்சர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இருந்து பட்டனை அழுத்தி வீடியோ கான்பரன்சிங் மூலம் சினிமா நூற்றாண்டு மாளிகையை திறந்து வைத்தார்.
புதிதாக கட்டப்பட உள்ள இன்னொரு மாளிகைக்கு அடிக்கல்லும் நாட்டினார். முன்னதாக ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் சி.கல்யாண், செயலாளர்கள் ரவிகொட்டாரக்கரா, எல். சுரேஷ் ஆகியோர் ங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
நிகழ்ச்சியில் ஜெயலலிதா பேசியதாவது:
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையால் கட்டப்பட்டுள்ள சினிமா நூற்றாண்டு மாளிகையை, இந்திய திரைப்பட நூற்றாண்டு விழா தொடங்கும் வேளையில் திறந்து வைப்பதிலும், மற்றொரு சினிமா நூற்றாண்டு மாளிகைக்கு அடிக்கல் நாட்டுவதிலும் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
நம்மை எல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவால் இந்த வர்த்தக சபையின் சொந்தக் கட்டடம் 15.6.1968 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இதயதெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., இந்த வர்த்தக சபையின் திரையரங்குகளில் திரையிடப்பட்ட திரைப்படங்களை பார்த்து, அங்கே நடைபெற்ற விழாக்களில் பல்வேறு காலக்கட்டங்களில் கலந்து கொண்டு சிறப்பித்து உள்ளார்.
நானும் இச்சபையில் நடைபெற்ற விழாக்களில் பங்கேற்று இருக்கின்றேன். குறிப்பாக, தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பொன் விழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நிகழ்வுகளை நான் இன்றும் நினைத்து பெருமை கொள்கின்றேன்.
இச்சபை திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கும் மற்றும் இத்துறையைச் சார்ந்த அனைத்து பிரிவினரின் நலனுக்காகவும் பாடுபட்டு வரும் ஒரு சிறந்த அமைப்பாகும். இந்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பல நூற்றாண்டுகளை கடந்து திரைப்படத் துறையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இங்கே எனக்கு முன்னால் பேசிய அன்பர், இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்ட புதிய நூற்றாண்டு விழா மாளிகை கட்டப்பட்ட பின்னர், அதையும் நானே திறந்து வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தப் புதிய மாளிகை கட்டி முடிக்கப்பட்டதும், நானே நேரில் வந்து திறந்து வைக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய தினம் வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்தக் கட்டடத்தை திறந்து வைத்துள்ளேன். புதிய கட்டடத்தை திறந்து வைக்க நானே நேரில் வருகிறேன் என்பதை தெரிவித்து, உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு விடைபெறுகிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
புதிய கட்டிடத்தை ஜெயலலிதா திறந்து வைத்தபோது கட்டிட வளாகத்தில் திரையுலகினர் ஏராளமானோர் திரண்டு நின்று திரையில் பார்த்து கைதட்டினர்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகரன், அட்ஹாக் கமிட்டி தலைவர் இப்ராகிம் ராவுத்தர், நிர்வாகிகள் கலைப்புலி தாணு, முரளிதரன், அன்பாலயா பிரபாகரன், டி.சிவா, கே.எஸ்.சீனிவாசன், நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், ஆனந்தராஜ், ராஜேஷ், தியாகு, சிங்கமுத்து, வையாபுரி, நடிகைகள் ராதிகா, குயிலி, தயாரிப்பாளர்கள் முக்தா சீனிவாசன், சித்ரா லட்சுமணன், ஞானவேல் ராஜா, ஏ.எல்.அழகப்பன், அழகன் தமிழ்மணி, ஆர்.கே.செல்வமணி, கலைப்புலி சேகரன், கே.ராஜன், சினிமா இயக்குனரும், அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், பாபு கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 8 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-09-2025.
25 Sep 2025 -
நாமக்கல், கரூரில் நாளை 3-ம் கட்ட விஜய் பிரசாரம்
25 Sep 2025கரூர், தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நாளை நாமக்கல், கரூர் மாவட்டங்களில் 3-ம் கட்ட பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
-
லடாக் மக்களின் குரலை நசுக்குகிறது: பா.ஜ.க. அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
25 Sep 2025புதுடெல்லி, லடாக் மக்களின் குரலை நசுக்கும் பா.ஜ.க. அரசு என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கோவையில் 2 நாட்கள் உலக புத்தொழில் மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
25 Sep 2025கோவை, அடுத்த மாதம் 9,10 ஆகிய தேதிகளில் கோவையில் 2 நாட்கள் உலக புத்தொழில் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம்
25 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாடு உள்ளிட்ட 3 மாநில சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ.க. பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
நீலகிரி, கோவை 2 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
25 Sep 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திண்டுக்கல் மாவட்டத்தில் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அலுவலர் கைது
25 Sep 2025திண்டுக்கல், திண்டுக்கல் மாவட்டத்தில் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவரை போலீசார் கைது செய்தனர்.
-
முதல்முறையாக ரயில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி
25 Sep 2025புதுடெல்லி, நாட்டிலேயே முதல்முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தீபாவளிக்கு 24,607 சிறப்பு பேருந்துகள்: தமிழ்நாடு போக்குவரத்து துறை திட்டம்
25 Sep 2025சென்னை, ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு 24,607 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் பலி
25 Sep 2025ராமநாதபுரம், தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வன்முறையில் 4 பேர் உயிரிழப்பு: லடாக்கில் நிலைமை கட்டுக்குள் உள்ளது: உள்துறை அமைச்சகம்
25 Sep 2025லடாக், லடாக் வன்முறையில் 4 பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சகம், தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
-
சி.வி.சண்முகத்துடன் சந்திப்பு ஏன்? பா.ஜ.க. மாநில தலைவர் விளக்கம்
25 Sep 2025விழுப்புரம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
-
ஜி.கே.மணியின் பதவி பறிப்பு: பா.ம.க. சட்டப்பேரவை குழு தலைவரானார் வெங்கடேஸ்வரன்
25 Sep 2025சென்னை, பா.ம.க. சட்டமன்ற குழு தலைவராக வெங்கடேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனமா? ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
25 Sep 2025மதுரை, குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனம் நடக்கிறதா என்று மதுரை ஐகோர்டடு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
இலங்கையில் கேபிள் கார் விபத்து: ஏழு புத்த மத துறவிகள் உயிரிழப்பு
25 Sep 2025கொழும்பு, இலங்கையில் கேபிள் கார் விபத்தில் புத்த மத துறவிகள் 7 பேர் உயிரிழநதுள்ளனர்.
-
கடற்பசு பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
25 Sep 2025சென்னை, நமது திராவிட மாடல் அரசு அறிவித்த இந்தியாவின் முதல் கடற்பசுப் பாதுகாப்பகத்துக்கு உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்
-
தேசிய விருது வென்ற 4 வயது பெண் குழந்தைக்கு கமல்ஹாசன் வாழ்த்து
25 Sep 2025சென்னை: தேசிய விருது வென்ற 4 வயது பெண் குழந்தைக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதி பணியிடங்கள் காலி: சுப்ரீம் கோர்ட்டில் தகவல்
25 Sep 2025புதுடெல்லி: மாவட்ட கோர்ட்டுகளில் 5 ஆயிரம் நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
6.2 ரிக்டர் அளவில் வெனிசுலாவில் நிலநடுக்கம்
25 Sep 2025காரகாஸ், 6.2 ரிக்டர் அளவில் வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
காகிதப்புலி அல்ல... நாங்கள் கரடி: அதிபர் ட்ரம்ப் விமர்சனத்திற்கு ரஷ்ய அதிபர் புதின் பதிலடி
25 Sep 2025செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யாவை விமர்சனம் செய்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு ரஷ்யா அதிபர் பதிலடி கொடுத்துள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு
25 Sep 2025சென்னை: சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ கொண்டாட்டம்: 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான 'புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன்' தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தனர்
25 Sep 2025சென்னை: ‘கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் 2025-2026-ம் கல்வி ஆண்டிற்கான புதுமைப்பெண் - தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர்
-
இந்தியாவுடன் பிரச்சனை இருக்கிறது: வங்கதேச இடைக்கால அரசு தலைவர்
25 Sep 2025டாக்கா: இந்தியா இடையிலான உறவில் விரிசல் உள்ளது என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
-
டிக் டாக் தடை நீக்கமா? ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார் ட்ரம்ப்
25 Sep 2025வாஷிங்டன்: டிக்டாக் தடையை நீக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க அதிபர் கையேழுத்திட முடிவு செய்தார்.
-
எச் - 1பி விசா கட்டண விவகாரம்: திறமை வாய்ந்த இந்தியர்களை ஈர்க்க தீவிரம் காட்டும் ஜெர்மனி, பிரிட்டன்..!
25 Sep 2025லண்டன்: திறமையான இந்தியர்களை ஈர்க்க ஜெர்மனி பிரிட்டன் தீவிரம் காட்டியுள்ளது.