எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, மே.24 - மதுரை கலெக்டர் பதவியிலிருந்து சகாயம் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையத்தால் மதுரை கலெக்டராக சகாயம் நியமிக்கப்பட்டார். தர்தலின்போது ஆளும் திமுகவினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சகாயம் தேர்தல் முடிந்து அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும் அதே பதவியில் நீடித்து வந்தார்.
அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். எனினும் சகாயம் மட்டும் மாற்றப்படாமல் மதுரை கலெக்டராக நீடித்து வந்தார்.
மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் கல்லூரிக்கு அரசு நிலம் ஆக்கிரமிப்பு கட்டப்பட்டது தொடர்பாக அவருக்கு சம்மன் அனுப்பி திமுகவினரை அதிர வைத்தார். மதுரை ஆதீன விவகாரத்தில் நித்தியானந்தா மீது அளிக்கபட்ட புகாரில் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதோடு மட்டுமின்றி அதற்கான வேலைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார்.
இந்த நிலையில் மதுரை கலெக்டர் பொறுப்பிலிருந்த சகாயத்தை கோஆப்டெக்ஸ் துறை நிர்வாக இயக்குநராக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலாளர் தேபேந்திர நாத் சாரங்கி வெளியிட்டுள்ள ஆணையில் கூறப்பட்டுள்ளதாவது, மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் கோ ஆப் டெக்ஸ் துறையின் சிறப்பு அதிகாரியாகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்த பிங்களே விஜய் மாருதிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மதுரை கலெக்டராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், திருவண்ணாமலை கலெக்டராக டாக்டர். விஜய மாருதி பிங்லே நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போல் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் முன்னாள் இணைச் செயலாளராகப் பணியாற்றி, தமிழக அரசு பணிக்குத் திரும்பிவந்துள்ள பிராஜ் கிஷோர் பிரசாத் போக்குவரத்துறையில் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பணியை ஐ.ஏ.எஸ் அதிகாரி பிரபாகர ராவ் வகித்து வந்தார்.
முன்னாள் இணை தலைமைத் தேர்தல் அதிகாரியாகவும், பொதுத்துறை தேர்தல் பிரிவில் துணை செயலாளராகவும் பணியாற்றி, விடுமுறை முடிந்து திரும்பியுள்ள பூஜா குல்கர்னி, சென்னை மாநகராட்சியில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றும் ஆர். நந்தகோபால், மதுரை மாநகராட்சியின் ஆணையராக இருக்கும் எஸ்.நடராஜனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொல்லியல் துறையில் ஆணையராக உள்ள சந்திர பிரகாஷ் சிங் மத்திய அரசு பணியில் தேசிய மருந்து விலைக்கட்டுப்பாட்டுத் துறை தலைவராக, மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை கூடுதல் செயலாளர் அந்தஸ்த்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியாவுக்கு வாருங்கள்: வங்கதேசத்தின் புதிய பிரதமருக்கு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு
18 Feb 2026புதுடெல்லி, இந்தியாவுக்கு வருகைப்புரியுமாறு வங்கதேசத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள தாரிக் ரஹ்மானுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
-
மெரீனாவில் ரோப் கார் சேவை: சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு
18 Feb 2026சென்னை, சென்னஐ மெரீனாவில் கடற்கரையில் ரோப் கார் சேவை கொண்டுவரப்படும் என்று சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் பிரியா அறிவித்துள்ளார்.
-
ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் பேச்சு: காங்., தலைமை மீது தி.மு.க. அதிருப்தி?
18 Feb 2026சென்னை, மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமை எந்த நடவடிக்கை எடுக்காததால் தி.மு.க. தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
18 Feb 2026சென்னை, நீதிக்கட்சி வரலாறு உள்ளிட்ட தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் சார்பில் திராவிடக் களஞ்சியத்தின் 7 புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தொடர் சரிவில் தங்கம் விலை: 3 நாட்களில் ரூ.1680 குறைவு
18 Feb 2026சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனையானது.
-
கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் தவக்காலம் உலகம் முழுவதும் துவக்கம்: பல்வேறு ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
18 Feb 2026சென்னை, கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படும் 40 நாட்கள் தவக்காலம் நேற்று முதல் உலகம் முழுவதும் துவங்கியது.
-
மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பு: போர் விமானங்களை குவித்த அமெரிக்கா
18 Feb 2026நியூயார்க், மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.
-
உலகம் முழுவதும் முடங்கிய யூடியூப்!
18 Feb 2026நியூயார்க், உலகம் முழுவதும் பல நாடுகளில் நேற்று யூடியூப் முடங்கியதால் பயனர்கள் அவதியடைந்தனர்.
-
அமெரிக்க ராணுவத்தை அழிப்போம்: அதிபர் ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் எச்சரிக்கை
18 Feb 2026தெஹ்ரான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
-
ரஷ்யாவுக்கு கடத்தப்பட்ட 2 ஆயிரம் குழந்தைகள் மீட்பு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
18 Feb 2026கீவ், குழந்தைகளை திரும்ப கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக 2000 குழந்தைகள் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
டெல்லி ஏ.ஐ. உச்சி மாநாடு பிப்ரவரி 21 வரை நீட்டிப்பு
18 Feb 2026டெல்லி, டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு பிப்.21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து பாரபட்சமற்ற விசாரணையை நடத்த ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல்
18 Feb 2026ஜெனீவா, எப்ஸ்டீன் கோப்புகளில் வெளிவந்துள்ள குற்றச்சாட்டுகள் மனித குலத்துக்கே எதிரானவை என்று ஐ.நா.வின் நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
திண்டுக்கல் நாம் தமிழர் கட்சி மாநாட்டில் நான் போட்டியிடும் தொகுதியை அறிவிப்பேன்: சீமான்
18 Feb 2026திருச்சி, திருச்சி திண்டுக்கல் ரோடு ஆலம்பட்டி புதூரில் வருகிற 21-ம் தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
18 Feb 2026- சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- வேதாரண்யம் சிவபெருமான் புறப்பாடு
- நத்தம் மாரியம்மன் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
18 Feb 2026



