எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு, அக். 13- சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கிரிக்கெட் கமிட்டி தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டு காலம் இப்பதவியில் அவர் நீடிப்பார். இந்த கமிட்டி ஆண்டுக்கு இரண்டு முறை கூடும். இக்குழுவின் அடுத்த கூட்டம் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஐ.சி.சி. ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் கும்ப்ளே தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதுவரை இதன் தலைவராக மேற்கிந்திய தீவுகள் முன்னாள் கேப்டன் கிளைவ்லாய்டு இருந்தார். இதே போல் முன்னாள் வீரர்களின் பிரதிநிதியாக கிரிக்கெட் குழுவில் இடம் பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகளின் லியான் பிஷப் மீண்டும் தனது பதவியை தொடர விரும்பவில்லை என்று கூறி விட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக சமீபத்தில் ஓய்வு பெற்ற இங்கிலாந்து கேப்டன் ஆண்ட்ரூஸ் டிராஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஐ.சி.சி. தலைவர் ஆலன் ஐசக் கூறுகையில், அனில் கும்ப்ளே கிரிக்கெட் வீரராக மட்டுமல்ல, நிர்வாகியாகவும் நல்ல அனுபவம் பெற்றவர். சம காலத்தவர்களான கும்ப்ளேவும், டிராசும் இணைந்து லாயிட், பிஷப் ஆகியோர் விட்டு சென்ற பணிகளை சிறப்பாக மேற்கொள்வார் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


