எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.17 - முறைகேடு மற்றும் எந்திர கோளாறு பற்றி எழுந்த புகாரை ஒட்டி 8 வாக்குசாவடிகளில் நேற்று வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் மொத்தம் 8 வாக்கு சாவடிகளில் சராசரி 81.3 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 13ந்தேதி நடந்தது. சராசரியாக 78 சதவீத ஓட்டுக்கள் பதிவானது. தேர்தலின்போது நெய்வேலி, கிள்ளியூர், திருவிடைமருதூர், ஆரணி, போடிநாயக்கனூர் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 6 தொகுதிகளில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் முறைகேடு மற்றும் எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. ஆரணி தொகுதி புனித வளனார் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் மின்னணு எந்திரம் கோளாறு ஆனது. மதியம் 1 மணிக்கு பிறகு பதிவான வாக்குகள் எந்திரத்தில் பதிவாகவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணையம் மறுதேர்தல் நடத்த உத்தர விட்டது. நெய்வேலி தொகுதியில் குள்ளஞ்சாவடியை அடுத்த சமட்டிக்குப்பத்தில் 55, 56 எண்ணுடைய 2 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்தல் நாளில் மாலையில் வாக்குப்பதிவு முடிந்ததும் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அந்த வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அடித்து நொறுக்கியது. கலவரம் நடந்த 2 வாக்குச்சாவடிகளிலும் மறு ஓட்டுப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி பருத்திக்குடி ஊராட்சியில் 3 வார்டுகள் உள்ளன. இதில் பருத்திக்குடி, படைத் தலைவன்குடி, கோவில் பத்து,வளையாவட்டம், திருக்கழிதட்டை ஆகிய பகுதிகள் உள்ளது. பருத்திக்குடி வாக்காளர்களுக்கு வளையாவட்டம் பள்ளியிலும், வளையா வட்டம், திருக்கழிதட்டை பகுதிகளுக்கு பருத்திக்குடி பள்ளியிலும் வாக்குச்சா வடிகள் அமைக்கப்பட்டன. வாக்குச்சாவடிகள் மாற்றி அமைக்கப்பட்டதால் 3 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பருத்திக்குடிக்கும் வளையாவட்டத்துக்கும் இடையே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இதனால் அவ்வளவு தூரம் சென்று ஓட்டு போட முடியாது என்று பொது மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து இந்த 2 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தர விட்டது. போடி தொகுதி சங்கராபுரத்தில் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளி வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் தேர்தல் அலுவலரின் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகள் ஆகியவற்றில் ஏற்பட்ட வித்தியாசம் காரணமாக இன்று காலை அங்கு மறுவாக்குப்பதிவு நடந்தது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சட்டசபை தொகுதியில் புளியம் பட்டி 2வது எண் வாக்குச் சாவடியில் 91 சதவீதம் வாக்குகள் பதிவானது. சங்கரன்கோவில் தொகுதி வேட்பாளர் அளித்த புகாரின் பேரில் தேர்தல் பார்வையாளர் தீரஜ்குமார் விசாரணை நடத்தினார். மேலும் வாக்குப்பதிவின் போது எடுக்கப்பட்ட வீடியோவை ஆய்வு செய்தார். அப்போது ஒரு கட்சி ஏஜெண்டு வாக்காளர்களை மின்னணு எந்திரம் அருகே அழைத்து சென்று ஓட்டு போட வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் அவருக்கு சந்தேகம் ஏற்படவே நெல்லை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான ஜெயராமனுக்கு தகவல் கொடுத்தார். உடனே அவர் புளியம்பட்டி கிராமத்தில் உள்ள 2வது எண் வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என நேற்று மதியம் அறிவித்தார். குமரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் 121வது எண் கொண்ட வாக்குச்சாவடி அனந்தமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்கு சாவடியில் வாக்குபதிவு முடிந்து மொத்த வாக்குகளை கணக் கிடும் போது 36 வாக்குகள் மாயமானது கண்டுபிடிக் கப்பட்டது. இந்த வாக்குசாவடியில் மொத்தம் 1136 வாக்காளர் கள் உள்ளனர். இவர்களில் 737 பேர் வாக்களித்து இருந்தனர். ஆனால் கடைசியாக வாக்கு பதிவு எந்திரத்தில் 701 வாக்குகள் மட்டும் பதிவானதாக எந்திரம் காட்டியது. அதைத் தொடர்ந்து இந்த வாக்குசாவடியில் மறு வாக்குபதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தர விட்டது. அதன்படி நேற்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு இந்த 8 வாக்குச் சாவடிகளிலும் ஓட்டுப்பதிவு தொடங்கியது. 13ந் தேதி தேர்தலின்போது வாக்காளர்கள் எந்த ஆவணத்தை காட்டி வாக்களித்தார்களோ, அந்த ஆவணங்களை காட்டி வாக்களித்தனர். அப்போது வாக்களர்களின் இடது கை சுட்டு விரலில் அடையாள மை வைக்கப்பட்டது. இன்று வாக்காளர்களின் இடது கை நடுவிரலில் அடையாள மை வைக்கப்பட்டது. 8 வாக்குச் சாவடிகளிலும் விறுவிறுப்பாக ஒட்டுப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். மறு ஓட்டுப்பதிவை முன்னிட்டு 8 வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வாக்கு பதிவு விபரம் வருமாறு:-
திருவண்ணாமலை, ஆரணி 75 சதவிகிதம் கடலூர் நெய்வேலி 84.3 சதவிதம் தங்காவூர் திருவிடைமருதூர் 87.2 சதவிகிதம், தேனி-போடி நாயக்கனூர் 80.8 சதவிகிதம் நெல்லை சங்கரன்கோவில் 93.2 சதவிகிதம் கன்னியாகுமரி- கிள்ளியூர் 70.2 சதவிகிதம் மற்ற இரண்டு வாக்கு சாவடிகளில் முறையே 8.28 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்த பதிவு 81.3 சதவிகிதம்.இவ்வாறு தலைமை தேர்தல் அலுவலக செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.