முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி கோவில் வருமானம் ரூ.4 கோடி

சனிக்கிழமை, 19 ஜனவரி 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி, ஜன. 20  - பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பழனி மலைக் கோயிலுக்கு கிடைத்துள்ள வருவாய் மற்றும் உண்டியல் வருமானம் ரூ. 4 கோடியை தாண்டியுள்ளது. பழனி மலைக் கோயிலில் கடந்த 12,13,14,15,16 ஆகிய தேதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் திருக்கோயிலுக்கு பல்வேறு இனங்களில் வருவாய் அதிகரித்தது. பஞ்சாமிர்தம் விற்பனை, விஞ்ச் டிக்கெட் வருவாய், தங்க ரத புறப்பாடு, சிறப்பு வழி தரிசனம், காவடி மற்றும் அர்ச்சனை டிக்கெட் விற்பனை உள்ளிட்டவற்றின் மூலமாக மேற்கண்ட 5 நாட்களில் மட்டும் ரூ. 2 கோடியை தாண்டியது. 

இந்நிலையில் திருக்கோயில் உண்டியல்கள் கடந்த வெள்ளிக் கிழமை திறக்கப்பட்டன. இதில் பக்தர்கள் ஏராளமான தங்கம், வெள்ளிப் பொருட்கள், ரொக்க பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இது சுமார் 2 கோடி ரூபாயை தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உண்டியல் எண்ணிக்கையில் பழனி கோவில் இணை ஆணையர் பாஸ்கரன் தலைமையில் ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்