முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம்: தம்பிதுரை

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.14 - முதல்வர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்தநாள் வரும் 24-ம் தேதி கொண்டாடுவதையொட்டி தமிழகம், புதுவை, கர்நாடகம், ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரம், டெல்லி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் 24-ந் தேதி முதல் 28-ந் தேதிவரை பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளதாக அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் மு.தம்பிதுரை அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 65-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் 24.2.2013 முதல் 28.2.2013 வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலிலாதாவின் 65-வது பிறந்த நாளையொட்டி, 24.2.2013 முதல் 28.2.2013 வரை ஐந்து நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்கள் மற்றும் பகுதிகளிலும்,  கட்சி அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள், 

அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மாவட்டசெயலாளர்களும், மாவட்டக் கட்சி நிர்வாகிகளும், தங்கள் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி ஜெ ஜெயலலிதா பேரவை,  எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு,  மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி,  இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த  நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப்  பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி, அதன் விவரங்களை தலைமைக் கழகத்திற்கும்,  அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தம்பிதுரை கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்