எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெய்ஜிங், ஏப். 21 - சீனாவின் தென் மேற்கு பகுதியான சிட்சுவான் மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி கிட்டத்தட்ட 113 பேர் பலியாகி விட்டதாகவும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து விட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த பயங்கர நிலநடுக்கம் நேற்று காலை 8.02 மணிக்கு ஏற்பட்டது. கடந்த 2008 ம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சிக்கி 87 ஆயிரம் பேர் வரை பலியானார்கள். அப்போது இந்த சம்பவம் உலகளவில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அப்போது நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் இருந்து சுமார் 53 மைல் தொலைவில் உள்ள யான் நகரத்தில் தற்போது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் 90 சதவீத வீடுகள் நாசமானதாக உள்ளூர்வாசி ஒருவர் தெரிவித்தார்.
எனவே சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலநடுக்கம் பற்றி சீனாவில் வெளிவரும் மாலை பத்திரிகை ஒன்று கூறுகையில், இந்த நிலநடுக்கத்தால் 600 பேர் காயமடைந்ததாகவும், அவர்களில் 135 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இடிந்து போன கட்டிடங்களில் இருந்து 27 பேர் காப்பாற்றப்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் குறித்து கேள்விப்பட்டதும் சீன பிரதமர் லீக் கியாங் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பெய்ஜிங்கில் இருந்து புறப்பட்டு சம்பவம் நடந்த சிட்சுவான் பகுதிக்கு விரைந்தனர்.
மீட்பு பணிகளையும், நிவாரண பணிகளையும் அவர்கள் பார்வையிட்டனர். ஹெலிகாப்டர் மூலம் சம்பவ பகுதிக்கு விரைந்த சீன பிரதமர் மருத்துவமனைக்கு சென்று அங்கு காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறியதாக சிட்சுவான் மீடியா தெரிவித்தது. நேற்று ஏற்பட்ட இந்த பயங்கர நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கம் பயங்கர நாசத்தை ஏற்படுத்தி விட்டதாக விஞ்ஞானிகள் கவலையுடன் தெரிவித்தனர்.
பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அந்த கட்டிடங்களில் ஏராளமானோர் சிக்கி கொண்டார்கள். சிலர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கவலையோடு தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தில் ஒரு ராணுவ வீரரும் உயிரிழந்தார். சம்பவம் நடந்த பகுதிக்கு 7,400 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும், ஆயுதமேந்திய போலீசாரும் விரைந்து சென்றனர். 2 ஹெலிகாப்டர்களும் மீட்பு பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டன. 1,400 மீட்பு பணியாளர்கள் மற்றும் 180 டாக்டர்களும் நிலநடுக்க பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். 6 தேடுதல் வேட்டை நாய்களும், 120 மீட்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து 80 ஆயிரம் பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக போர்வைகள், தண்ணீர், உணவு, மருந்துகள் மற்றும் கூடாரங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த 1900 ம் ஆண்டில் இருந்து சீனாவில் இதுவரை 12 முறை பூகம்பங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பூகம்பம்தான் மிக கொடுமையான பூகம்பமாகும். அப்போது கிட்டத்தட்ட 87 ஆயிரம் பேர் பூகம்பத்திற்கு பலியானார்கள். பல பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து நாசமாயின. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அப்போது உயிரிழந்தார்கள். இந்த பூகம்பம் ஏற்பட்டதை அடுத்து சீன அதிபர் ஜிம்பிங் ஒரு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி மீட்பு பணிகள் குறித்து விவாதித்தார். நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள செங்கூடு பகுதியிலும் கட்டிடங்கள் ஆடியதால் வீட்டுக்குள் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈரான் நாட்டிலும் இதே போல் பூகம்பம் தாக்கியது. அந்த பூகம்பத்தில் சிக்கி 40 பேர் வரை உயிரிழந்தார்கள். நேற்று சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 113 பேர் வரை உயிரிழந்து விட்டனர். அடிக்கடி ஏற்படும் இந்த பூகம்பத்தால் சீன மக்கள் ஆடிப்போயிருக்கிறார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரிச்சர்டு க்ளீசன்
18 Apr 2024சென்னை:சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வேவுக்குப் பதிலாக மாற்று வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
ஆல் ரவுண்டர்களுக்கு பாதிப்பு:இம்பேக்ட் விதிமுறையை எதிர்க்கும் ரோகித் சர்மா
18 Apr 2024மும்பை:இம்பேக்ட் விதிமுறையால் ஆல் ரவுண்டர்கள் தங்களது முக்கியதுவத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
மழை, வெள்ள பாதிப்பு: துபாய் இந்தியர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
18 Apr 2024துபாய்:துபாயில் பெய்த வரலாறு காணாத கனமழையால், அங்கு வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
நாட்டில் உள்ள ஒவ்வொரு மொழியும் முக்கியமானது ராகுல் காந்தி பேச்சு
18 Apr 2024திருவனந்தபுரம்: இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மொழியும் மற்ற மொழிகளை போல முக்கியமானது.
-
போதமலை மலைக் கிராமத்திற்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட இ.வி.எம்.
18 Apr 2024ராசிபுரம், ராசிபுரம் அருகே போதமலை மலைக் கிராம வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்களை சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் அதிகாரிகள் சுமந்து
-
இமாச்சல்லில் உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி
18 Apr 2024சிம்லா:இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
-
இஸ்ரேல் சரக்கு கப்பலில் சிக்கிய 17 இந்தியர்களில் கேரள பெண் மீட்பு
18 Apr 2024புதுடில்லி:ஈரானால் கைப்பற்றப்பட்ட, இஸ்ரேல் சரக்கு கப்பலில் இருந்த இந்திய பணியாளர்கள், 17 பேரில் கேரளாவை சேர்ந்த டெஸ்ஸா ஜோசப் என்ற பெண் நேற்று (ஏப்ரல் 18) விடுவிக்கப்பட்
-
குஜராத்தை வீழ்த்தியது டெல்லி
18 Apr 2024அகமதாபாத்:குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.