எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஜூலை.2 - மத்திய அரசு அமல்படுத்த முன்வந்துள்ள இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும், அடுத்த ஆண்டு மே மாதம் வரையே ஆளுவதற்கு உரிமைப் பெற்றுள்ள அரசு, இதைச் செய்வதற்கு தார்மீக உரிமையும், அதிகாரமும் கிடையாது என்றும், இந்த விலை நிர்ணயத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால், அடுத்த ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலுக்குப்பின் உருவாகும் மத்திய அரசு இந்த கொள்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அ.தி.மு.க. எடுக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்தியில் இரண்டாம் முறையாக 2009-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொருளாதார மேம்பாட்டிற்கும், தொழில் உற்பத்திக்கும், விவசாய உற்பத்திக்கும் மற்றும் மக்களின் வளத்திற்கும் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல், கொள்கை முடிவுகளை எடுக்காமல் கொள்கை முடக்குவாதத்தில் இருந்து வந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான எந்த வித கொள்கை முடிவுகளையும் எடுக்க திராணியற்று இருப்பதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்தும், சர்வதேச தர நிர்ணய அமைப்புகள் இந்திய பொருளாதார மதிப்பீட்டை குறைத்துவிடும் என்ற அச்சத்திலும் பங்கு சந்தை வீழ்ச்சியாலும், அச்சமடைந்து, அவசர கதியில் பல்வேறு புதிய கொள்கை முடிவுகளை, சீர்திருத்தங்கள் என சொல்லப்படும் பொருளாதார சீர்கேட்டுக் கொள்கைகளை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு சமீப காலமாக எடுத்து வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்து, அடுக்கடுக்காக எடுக்கப்படும் புதிய கொள்கை முடிவுகள் அனைத்தும் சாமானிய மக்களை வஞ்சிப்பதாகவும், மாநில அரசுகளின் அதிகாரங்களுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் நலனுக்கு விரோதமாகவும் அமைந்துள்ளன. கொள்கை முடக்குவாதத்திலிருந்து அளவுக்கு அதிக கொள்கை என்று சொல்லக் கூடிய வகையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு நாளும் புதுக் கொள்கைகளை அறிவித்து வருகிறது. பெட்ரோலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளுதல்; மாதாமாதம் டீசல் விலையை உயர்த்திக்கொள்ளுதல்; டீசல் விலையுடன் ரயில்வே சரக்கு கட்டணத்தை இணைத்துக்கொள்ளுதல்; அதன் வாயிலாக ரயில் சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுத்தல்; மானிய விலையிலான வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் எண்ணிக்கையை வருடத்திற்கு முதலில் 6 என்றும், பிறகு 9 என்றும் நிர்ணயித்தது; அந்நிய செலாவணி சந்தையில் பலரும் பங்குபெறுதலை ஊக்குவித்தல்; சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தல்; ஊட்டச்சத்துடன் இணைந்த உரக்கொள்கை; மானியத்திற்கு பதிலாக நேரடி பண மாற்றம்; பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது போன்ற எண்ணற்ற மக்கள் விரோதக் கொள்கைகளை சமீப காலத்தில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்துள்ளது. இந்த கொள்கைகள் அனைத்தும் ஏழை எளிய மக்கள், விவசாயிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் மானியங்களை கட்டுப்படுத்துவதற்கும், சமூகப் பாதுகாப்புக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை குறைப்பதற்கும் தான் வழிவகுத்தன. மேலும், பெருந்தொழில் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாபம் அடையவே இந்த கொள்கைகள் வழிவகை செய்துள்ளன.
இந்த வரிசையில் தற்போது, இயற்கை எரிவாயு விலை நிர்ணய கொள்கையை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு சமீபத்தில் நிர்ணயித்துள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் சி. ரங்கராஜனின் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இயற்கை எரிவாயுவின் விலையை நிர்ணயம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கான சராசரி விலை, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய இடங்களிலுள்ள வர்த்தக மையங்களில் உள்ள சராசரி விலை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஒரு சிக்கலான வழிமுறையை இந்தக்குழு பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில் கணக்கிடும் பொழுது ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் இயற்கை எரிவாயுவின் விலை தற்போதுள்ள 4.2 டாலர் என்ற அளவிலிருந்து 8.4 டாலர் என்ற அளவில் 2014-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் விலை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு விலையை உயர்த்துவது, 2030ம் ஆண்டுக்குள் இந்தியா இயற்கை எரிவாயு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நடவடிக்கை என கூறிக்கொண்டு, ஒரு பெரும் தொழில் நிறுவன குழுமத்திற்கு சலுகை அளிப்பதாகவே அமைந்துள்ளது. அந்த தொழில் நிறுவனம் தனது ஓஎ ஈ 6 படுகையில் உற்பத்தி செய்ய உத்தரவாதம் அளித்ததற்கும் மிகக் குறைந்த அளவிலேயே இயற்கை எரிவாயு உற்பத்தி செய்வதற்கு தண்டனை அளிக்கப்படுவதற்கு பதிலாக, மிகப் பெரும் லாபம் அடையவே இந்த புதிய கொள்கை வழிவகுக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு, கொள்கை அடிப்படையில், உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கடைபிடிப்பதற்கு ஊக்கம் அளித்தது. அதன் அடிப்படையில் இன்றைக்கு இந்தியாவில் யூரியா தயாரிக்கும் உர நிறுவனங்களின் உற்பத்தித் திறனில் 81 சதவீதம் இயற்கை எரிவாயுவையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அதே போன்று பல மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களும் எரிபொருளாக இயற்கை எரிவாயுவையே பயன்படுத்துகின்றன. போதிய அளவு இயற்கை எரிவாயு கிடைக்காத காரணத்தினால் அகில இந்திய அளவில் 28000 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டு உள்ளது. இயற்கை எரிவாயு விலை 8.4 டாலர் என்ற அளவுக்கு அதிகரிக்கும் போது இந்த மின் உற்பத்தி நிலையங்களும் யூரியா தயாரிக்கும் நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தியை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். இல்லையெனில் யூரியா போன்ற உரம் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிபொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரம் ஆகியவற்றின் விலை கணிசமாக உயர வழிவகுக்கும். இந்த விலை உயர்வை சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியவர்கள் தான் தாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
பெட்ரோலியப் பொருட்களுக்கு தற்போது நிர்ணயிக்கப்படும் விலை கொள்கையே தவறு என்று நான் பல முறை சுட்டிக்காட்டி வருகிறேன். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை, மற்றும் உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை, அவற்றை சுத்திகரிக்க ஏற்படும் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டே பெட்ரோலிய பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யயப்பட வேண்டும் என்று நான் மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். ஆனால் மத்திய அரசு 'வர்த்தக சமநிலை விலை' என்ற ஒரு செயற்கையான விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த நிலையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கும் இது போன்று செயற்கையான விலை நிர்ணயம் செய்வதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. முழுவதும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கு உற்பத்தி செய்யப்படும் விலையை மட்டும் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டால் தான் உரம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களும், இயற்கை எரிவாயுவை எரிபொருளாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் மின் நிறுவனங்களும் குறைந்த விலையில் இவற்றை மக்களுக்கு வழங்க இயலும். மேலும், இயற்கை எரிவாயு விலை ரூபாய் மதிப்பில் தான் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமேயன்றி, அமெரிக்க டாலர் மதிப்பில் நிர்ணயம் செய்யப்படக் கூடாது.
இயற்கை எரிவாயு போன்ற இயற்கை வளங்கள் தனிப்பட்ட எவருடைய சொத்தும் அல்ல. இவை இந்திய மக்கள் அனைவருக்கும் உரித்தான பொதுச் சொத்து. இந்த இயற்கை வளங்களின் உண்மையான சொந்தக்காரர்கள் பொதுமக்கள் தான். இந்த இயற்கை வளங்கள் அரசு கொள்கைகளால் சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே மத்திய அரசு இந்த இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 2014ம் ஆண்டு மே மாதம் வரையே மக்களால் ஆட்சிப் பொறுப்பை பெற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விலை நிர்ணயம் செய்வதற்கான எந்த வித தார்மீக அதிகாரமும் கிடையாது. எனவே அடுத்த ஆண்டு மத்தியில் அமையப் பெறும் புதிய அரசு இதை நிர்ணயம் செய்வதே சரியானதாகும். மத்திய அரசு விடாப்பிடியாக இந்த இயற்கை எரிவாயு விலை நிர்ணய கொள்கையை திரும்பப் பெறவில்லையெனில், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பின் உருவாகும் மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் நிலையை அடையும். எனது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க இந்த கொள்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது
16 Oct 2025சென்னை, தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது.
-
தனிக்கட்சி ஆரம்பிப்பது நல்லது: அன்புமணிக்கு ராமதாஸ் பதில்
16 Oct 2025விழுப்புரம், ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-10-2025.
16 Oct 2025 -
புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
16 Oct 2025சென்னை, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்
-
பரவும் புதிய வகை கொரோனா: மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
16 Oct 2025கோலாலம்பூர், மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கியதை முன்னிட்டு 6 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
-
குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு தடை
16 Oct 2025தென்காசி, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கரூர் சம்பவத்திற்கு பிறகும் குறையவில்லை: த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
16 Oct 2025சென்னை: புதிய கருத்துக்கணிப்பில் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை
16 Oct 2025தூத்துக்குடி, தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை பெய்தது.
-
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலை., திருத்த மசோதா: கவர்னரின் பரிந்துரையை ஒருபோதும் ஏற்க முடியாது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
16 Oct 2025சென்னை, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படவில்ல
-
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு, தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
16 Oct 2025சென்னை, இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டு
-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
16 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
-
அவரின் தியாகம் என்றும் போற்றப்படும்: கட்டபொம்மனின் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
16 Oct 2025சென்னை, கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும் என்று அவரது நினைவு நாளல் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
சட்டப்பேரவையில் நயினாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடக்கம்
16 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
-
என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்
16 Oct 2025சென்னை: என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
-
ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
16 Oct 2025ஏமன், ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மத்தி அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
விராட் கோலி பதிவு வைரல்
16 Oct 2025இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
-
நயினார் நாகேந்திரன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்: 51 ஆயிரம் பேருக்கு ரூ.2.86 கோடி அபராதம்
16 Oct 2025சென்னை, டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்த 51 ஆயிரம் பேர் மீது ரூ.2.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் உயர்வு: சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்
16 Oct 2025சென்னை, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவு: ஐ.பி.எல். மதிப்பு ரூ.76,100 கோடியானது
16 Oct 2025மும்பை: ஐ.பி.எல். மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவை கண்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.76,100 கோடியாக தற்போது குறைந்துள்ளது.
-
அமேசானில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு: 15 சதவீதம் பேருக்கு பாதிப்பு
16 Oct 2025வாஷிங்டென், அமேசான் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
-
இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு: குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா
16 Oct 2025குஜராத், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் குஜராத் பா.ஜ.க. அரசின் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் நேற்று கூட்டாக ராஜினாமா செய்தனர்.
-
ஆந்திராவில் ரூ.13,430 கோடியில் புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
16 Oct 2025அமராவதி:ஆந்திராவில் ரூ.13,430 கோடி மதிப்பில் திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் அறிவிப்பு: 44,081 பேர் பயன்பெறுவர்
16 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025- 2026ல் வழங்க தமிழக அரசு ஆ