எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.2 - மத்திய அரசு அமல்படுத்த முன்வந்துள்ள இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும், அடுத்த ஆண்டு மே மாதம் வரையே ஆளுவதற்கு உரிமைப் பெற்றுள்ள அரசு, இதைச் செய்வதற்கு தார்மீக உரிமையும், அதிகாரமும் கிடையாது என்றும், இந்த விலை நிர்ணயத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால், அடுத்த ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலுக்குப்பின் உருவாகும் மத்திய அரசு இந்த கொள்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அ.தி.மு.க. எடுக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்தியில் இரண்டாம் முறையாக 2009-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொருளாதார மேம்பாட்டிற்கும், தொழில் உற்பத்திக்கும், விவசாய உற்பத்திக்கும் மற்றும் மக்களின் வளத்திற்கும் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல், கொள்கை முடிவுகளை எடுக்காமல் கொள்கை முடக்குவாதத்தில் இருந்து வந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான எந்த வித கொள்கை முடிவுகளையும் எடுக்க திராணியற்று இருப்பதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்தும், சர்வதேச தர நிர்ணய அமைப்புகள் இந்திய பொருளாதார மதிப்பீட்டை குறைத்துவிடும் என்ற அச்சத்திலும் பங்கு சந்தை வீழ்ச்சியாலும், அச்சமடைந்து, அவசர கதியில் பல்வேறு புதிய கொள்கை முடிவுகளை, சீர்திருத்தங்கள் என சொல்லப்படும் பொருளாதார சீர்கேட்டுக் கொள்கைகளை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு சமீப காலமாக எடுத்து வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்து, அடுக்கடுக்காக எடுக்கப்படும் புதிய கொள்கை முடிவுகள் அனைத்தும் சாமானிய மக்களை வஞ்சிப்பதாகவும், மாநில அரசுகளின் அதிகாரங்களுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் நலனுக்கு விரோதமாகவும் அமைந்துள்ளன. கொள்கை முடக்குவாதத்திலிருந்து அளவுக்கு அதிக கொள்கை என்று சொல்லக் கூடிய வகையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு நாளும் புதுக் கொள்கைகளை அறிவித்து வருகிறது. பெட்ரோலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளுதல்; மாதாமாதம் டீசல் விலையை உயர்த்திக்கொள்ளுதல்; டீசல் விலையுடன் ரயில்வே சரக்கு கட்டணத்தை இணைத்துக்கொள்ளுதல்; அதன் வாயிலாக ரயில் சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுத்தல்; மானிய விலையிலான வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் எண்ணிக்கையை வருடத்திற்கு முதலில் 6 என்றும், பிறகு 9 என்றும் நிர்ணயித்தது; அந்நிய செலாவணி சந்தையில் பலரும் பங்குபெறுதலை ஊக்குவித்தல்; சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தல்; ஊட்டச்சத்துடன் இணைந்த உரக்கொள்கை; மானியத்திற்கு பதிலாக நேரடி பண மாற்றம்; பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது போன்ற எண்ணற்ற மக்கள் விரோதக் கொள்கைகளை சமீப காலத்தில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்துள்ளது. இந்த கொள்கைகள் அனைத்தும் ஏழை எளிய மக்கள், விவசாயிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் மானியங்களை கட்டுப்படுத்துவதற்கும், சமூகப் பாதுகாப்புக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை குறைப்பதற்கும் தான் வழிவகுத்தன. மேலும், பெருந்தொழில் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாபம் அடையவே இந்த கொள்கைகள் வழிவகை செய்துள்ளன.
இந்த வரிசையில் தற்போது, இயற்கை எரிவாயு விலை நிர்ணய கொள்கையை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு சமீபத்தில் நிர்ணயித்துள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் சி. ரங்கராஜனின் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இயற்கை எரிவாயுவின் விலையை நிர்ணயம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கான சராசரி விலை, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய இடங்களிலுள்ள வர்த்தக மையங்களில் உள்ள சராசரி விலை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஒரு சிக்கலான வழிமுறையை இந்தக்குழு பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில் கணக்கிடும் பொழுது ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் இயற்கை எரிவாயுவின் விலை தற்போதுள்ள 4.2 டாலர் என்ற அளவிலிருந்து 8.4 டாலர் என்ற அளவில் 2014-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் விலை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு விலையை உயர்த்துவது, 2030ம் ஆண்டுக்குள் இந்தியா இயற்கை எரிவாயு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நடவடிக்கை என கூறிக்கொண்டு, ஒரு பெரும் தொழில் நிறுவன குழுமத்திற்கு சலுகை அளிப்பதாகவே அமைந்துள்ளது. அந்த தொழில் நிறுவனம் தனது ஓஎ ஈ 6 படுகையில் உற்பத்தி செய்ய உத்தரவாதம் அளித்ததற்கும் மிகக் குறைந்த அளவிலேயே இயற்கை எரிவாயு உற்பத்தி செய்வதற்கு தண்டனை அளிக்கப்படுவதற்கு பதிலாக, மிகப் பெரும் லாபம் அடையவே இந்த புதிய கொள்கை வழிவகுக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு, கொள்கை அடிப்படையில், உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கடைபிடிப்பதற்கு ஊக்கம் அளித்தது. அதன் அடிப்படையில் இன்றைக்கு இந்தியாவில் யூரியா தயாரிக்கும் உர நிறுவனங்களின் உற்பத்தித் திறனில் 81 சதவீதம் இயற்கை எரிவாயுவையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அதே போன்று பல மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களும் எரிபொருளாக இயற்கை எரிவாயுவையே பயன்படுத்துகின்றன. போதிய அளவு இயற்கை எரிவாயு கிடைக்காத காரணத்தினால் அகில இந்திய அளவில் 28000 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டு உள்ளது. இயற்கை எரிவாயு விலை 8.4 டாலர் என்ற அளவுக்கு அதிகரிக்கும் போது இந்த மின் உற்பத்தி நிலையங்களும் யூரியா தயாரிக்கும் நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தியை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். இல்லையெனில் யூரியா போன்ற உரம் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிபொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரம் ஆகியவற்றின் விலை கணிசமாக உயர வழிவகுக்கும். இந்த விலை உயர்வை சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியவர்கள் தான் தாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
பெட்ரோலியப் பொருட்களுக்கு தற்போது நிர்ணயிக்கப்படும் விலை கொள்கையே தவறு என்று நான் பல முறை சுட்டிக்காட்டி வருகிறேன். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை, மற்றும் உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை, அவற்றை சுத்திகரிக்க ஏற்படும் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டே பெட்ரோலிய பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யயப்பட வேண்டும் என்று நான் மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். ஆனால் மத்திய அரசு 'வர்த்தக சமநிலை விலை' என்ற ஒரு செயற்கையான விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த நிலையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கும் இது போன்று செயற்கையான விலை நிர்ணயம் செய்வதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. முழுவதும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கு உற்பத்தி செய்யப்படும் விலையை மட்டும் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டால் தான் உரம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களும், இயற்கை எரிவாயுவை எரிபொருளாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் மின் நிறுவனங்களும் குறைந்த விலையில் இவற்றை மக்களுக்கு வழங்க இயலும். மேலும், இயற்கை எரிவாயு விலை ரூபாய் மதிப்பில் தான் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமேயன்றி, அமெரிக்க டாலர் மதிப்பில் நிர்ணயம் செய்யப்படக் கூடாது.
இயற்கை எரிவாயு போன்ற இயற்கை வளங்கள் தனிப்பட்ட எவருடைய சொத்தும் அல்ல. இவை இந்திய மக்கள் அனைவருக்கும் உரித்தான பொதுச் சொத்து. இந்த இயற்கை வளங்களின் உண்மையான சொந்தக்காரர்கள் பொதுமக்கள் தான். இந்த இயற்கை வளங்கள் அரசு கொள்கைகளால் சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே மத்திய அரசு இந்த இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 2014ம் ஆண்டு மே மாதம் வரையே மக்களால் ஆட்சிப் பொறுப்பை பெற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விலை நிர்ணயம் செய்வதற்கான எந்த வித தார்மீக அதிகாரமும் கிடையாது. எனவே அடுத்த ஆண்டு மத்தியில் அமையப் பெறும் புதிய அரசு இதை நிர்ணயம் செய்வதே சரியானதாகும். மத்திய அரசு விடாப்பிடியாக இந்த இயற்கை எரிவாயு விலை நிர்ணய கொள்கையை திரும்பப் பெறவில்லையெனில், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பின் உருவாகும் மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் நிலையை அடையும். எனது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க இந்த கொள்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது: வெள்ளி விலை புதிய உச்சம்
18 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், சவரன் ரூ.99,520-க்கும் விற்பனையானது.
-
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது: பெயர் இல்லாதவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
18 Dec 2025சென்னை, தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
-
மத்திய அரசு சார்பில் அனைவருக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளதா...? தமிழ்நாடு அரசு விளக்கம்
18 Dec 2025சென்னை, 'மத்திய அரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கும் திட்டம்' என்ற பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-12-2025.
18 Dec 2025 -
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை ஜன.1 முதல் அமல்
18 Dec 2025சென்னை, தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
18 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வில் கடந்த 5 நாட்கள் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்புக்காக த
-
பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள்: ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
18 Dec 2025ஈரோடு, பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள் என ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பேசினார். மேலும், களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே
-
தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
18 Dec 2025தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
-
நடுவானில் திடீர் பழுது: ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசர தரையிறக்கம்
18 Dec 2025கொச்சி, நடுவானில் திடீர் பழுது காரணமாக ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கலைஞர் பல்கலைக்கழக மசோதா: ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
-
ஈரோட்டில் பிரச்சாரத்தின் போது கம்பத்தில் ஏறிய ரசிகரை கண்டித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, த.வெ.க. தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கம்பத்தில் ஏறிய தொண்டரை, பேச்சை நிறுத்திவிட்டு அவர் கண்டித்தார்.
-
அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிப்பு: இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் விரைவில் தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள என்றும், இதனால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது என்றும் பிரதமர் மோடிக்கு எழுத
-
காந்தியின் பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பார்லி. வளாகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
18 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள
-
ஈரோடு பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்..!
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "நன்றி ஈரோடு" என்று பதிவிட்டுள்ளார்.
-
காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
18 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை குளிர்விக்க ஏழைகள்
-
ஈக்வடார் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொலை சம்பவங்கள்..!
18 Dec 2025பார்சிலோனா, ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விபி-ஜி ராம்ஜி மசோதா பார்லி., மக்களவையில் நிறைவேற்றம்
18 Dec 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
-
ஜனவரி 5-ம் அ.ம.மு.க. பொதுக்குழுக்கூட்டம்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
18 Dec 2025சென்னை, அ.ம.மு.க.வின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
18 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ. 1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சார பேருந்துகள் இயக்கம்: துணை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
18 Dec 2025சென்னை, 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் பலி: மத்திய அரசு
18 Dec 2025புதுடெல்லி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷ்ய ராணுவத்தில், 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
நேரு கடிதங்களை திருப்பி அளிக்க வேண்டும்: சோனியா காந்திக்கு மத்திய அரசு கடிதம்
18 Dec 2025புதுடெல்லி, கடந்த 2008-ம் ஆண்டு பெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் திருமணமாளிகை திறப்பு: என் வெற்றிக்குப்பின் என் மனைவி உள்ளார்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
18 Dec 2025சென்னை, கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் அண்ணா திருமணமாளிகையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், என் வெற்றிக்குப்பின்
-
ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விமர்சித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விஜய் விமர்சித்ததாக இணையத்தில் பலர் தெரிவித்து வருகின்றனர்.
-
புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு இலவச லேப்டாப் வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி தகவல்
18 Dec 2025சென்னை, புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.


