எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.2 - மத்திய அரசு அமல்படுத்த முன்வந்துள்ள இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும், அடுத்த ஆண்டு மே மாதம் வரையே ஆளுவதற்கு உரிமைப் பெற்றுள்ள அரசு, இதைச் செய்வதற்கு தார்மீக உரிமையும், அதிகாரமும் கிடையாது என்றும், இந்த விலை நிர்ணயத்தைத் திரும்பப் பெறவில்லை என்றால், அடுத்த ஆண்டு மக்களவைப் பொதுத் தேர்தலுக்குப்பின் உருவாகும் மத்திய அரசு இந்த கொள்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அ.தி.மு.க. எடுக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்தியில் இரண்டாம் முறையாக 2009-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பொருளாதார மேம்பாட்டிற்கும், தொழில் உற்பத்திக்கும், விவசாய உற்பத்திக்கும் மற்றும் மக்களின் வளத்திற்கும் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்காமல், கொள்கை முடிவுகளை எடுக்காமல் கொள்கை முடக்குவாதத்தில் இருந்து வந்தது. பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான எந்த வித கொள்கை முடிவுகளையும் எடுக்க திராணியற்று இருப்பதாக பல்வேறு தரப்புகளிலிருந்தும் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை அடுத்தும், சர்வதேச தர நிர்ணய அமைப்புகள் இந்திய பொருளாதார மதிப்பீட்டை குறைத்துவிடும் என்ற அச்சத்திலும் பங்கு சந்தை வீழ்ச்சியாலும், அச்சமடைந்து, அவசர கதியில் பல்வேறு புதிய கொள்கை முடிவுகளை, சீர்திருத்தங்கள் என சொல்லப்படும் பொருளாதார சீர்கேட்டுக் கொள்கைகளை மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு சமீப காலமாக எடுத்து வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்து, அடுக்கடுக்காக எடுக்கப்படும் புதிய கொள்கை முடிவுகள் அனைத்தும் சாமானிய மக்களை வஞ்சிப்பதாகவும், மாநில அரசுகளின் அதிகாரங்களுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் நலனுக்கு விரோதமாகவும் அமைந்துள்ளன. கொள்கை முடக்குவாதத்திலிருந்து அளவுக்கு அதிக கொள்கை என்று சொல்லக் கூடிய வகையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அரசு நாளும் புதுக் கொள்கைகளை அறிவித்து வருகிறது. பெட்ரோலுக்கான விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து கொள்ளுதல்; மாதாமாதம் டீசல் விலையை உயர்த்திக்கொள்ளுதல்; டீசல் விலையுடன் ரயில்வே சரக்கு கட்டணத்தை இணைத்துக்கொள்ளுதல்; அதன் வாயிலாக ரயில் சரக்கு கட்டண உயர்வுக்கு வழிவகுத்தல்; மானிய விலையிலான வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு உருளையின் எண்ணிக்கையை வருடத்திற்கு முதலில் 6 என்றும், பிறகு 9 என்றும் நிர்ணயித்தது; அந்நிய செலாவணி சந்தையில் பலரும் பங்குபெறுதலை ஊக்குவித்தல்; சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்தல்; ஊட்டச்சத்துடன் இணைந்த உரக்கொள்கை; மானியத்திற்கு பதிலாக நேரடி பண மாற்றம்; பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது போன்ற எண்ணற்ற மக்கள் விரோதக் கொள்கைகளை சமீப காலத்தில் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு எடுத்துள்ளது. இந்த கொள்கைகள் அனைத்தும் ஏழை எளிய மக்கள், விவசாயிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் மானியங்களை கட்டுப்படுத்துவதற்கும், சமூகப் பாதுகாப்புக்கு வழங்கப்படும் உதவித் தொகைகளை குறைப்பதற்கும் தான் வழிவகுத்தன. மேலும், பெருந்தொழில் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் லாபம் அடையவே இந்த கொள்கைகள் வழிவகை செய்துள்ளன.
இந்த வரிசையில் தற்போது, இயற்கை எரிவாயு விலை நிர்ணய கொள்கையை பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு சமீபத்தில் நிர்ணயித்துள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் சி. ரங்கராஜனின் தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இயற்கை எரிவாயுவின் விலையை நிர்ணயம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கான சராசரி விலை, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய இடங்களிலுள்ள வர்த்தக மையங்களில் உள்ள சராசரி விலை ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஒரு சிக்கலான வழிமுறையை இந்தக்குழு பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில் கணக்கிடும் பொழுது ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் இயற்கை எரிவாயுவின் விலை தற்போதுள்ள 4.2 டாலர் என்ற அளவிலிருந்து 8.4 டாலர் என்ற அளவில் 2014-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் விலை நிர்ணயம் செய்யப்படும். இவ்வாறு விலையை உயர்த்துவது, 2030ம் ஆண்டுக்குள் இந்தியா இயற்கை எரிவாயு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நடவடிக்கை என கூறிக்கொண்டு, ஒரு பெரும் தொழில் நிறுவன குழுமத்திற்கு சலுகை அளிப்பதாகவே அமைந்துள்ளது. அந்த தொழில் நிறுவனம் தனது ஓஎ ஈ 6 படுகையில் உற்பத்தி செய்ய உத்தரவாதம் அளித்ததற்கும் மிகக் குறைந்த அளவிலேயே இயற்கை எரிவாயு உற்பத்தி செய்வதற்கு தண்டனை அளிக்கப்படுவதற்கு பதிலாக, மிகப் பெரும் லாபம் அடையவே இந்த புதிய கொள்கை வழிவகுக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு, கொள்கை அடிப்படையில், உரம் தயாரிக்கும் நிறுவனங்கள் இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கடைபிடிப்பதற்கு ஊக்கம் அளித்தது. அதன் அடிப்படையில் இன்றைக்கு இந்தியாவில் யூரியா தயாரிக்கும் உர நிறுவனங்களின் உற்பத்தித் திறனில் 81 சதவீதம் இயற்கை எரிவாயுவையே அடிப்படையாகக் கொண்டுள்ளது.
அதே போன்று பல மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களும் எரிபொருளாக இயற்கை எரிவாயுவையே பயன்படுத்துகின்றன. போதிய அளவு இயற்கை எரிவாயு கிடைக்காத காரணத்தினால் அகில இந்திய அளவில் 28000 மெகாவாட் மின் உற்பத்தி தடைபட்டு உள்ளது. இயற்கை எரிவாயு விலை 8.4 டாலர் என்ற அளவுக்கு அதிகரிக்கும் போது இந்த மின் உற்பத்தி நிலையங்களும் யூரியா தயாரிக்கும் நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்தியை முடக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படும். இல்லையெனில் யூரியா போன்ற உரம் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிபொருளாக பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரம் ஆகியவற்றின் விலை கணிசமாக உயர வழிவகுக்கும். இந்த விலை உயர்வை சாதாரண ஏழை எளிய நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியவர்கள் தான் தாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
பெட்ரோலியப் பொருட்களுக்கு தற்போது நிர்ணயிக்கப்படும் விலை கொள்கையே தவறு என்று நான் பல முறை சுட்டிக்காட்டி வருகிறேன். வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை, மற்றும் உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் விலை, அவற்றை சுத்திகரிக்க ஏற்படும் செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டே பெட்ரோலிய பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்யயப்பட வேண்டும் என்று நான் மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். ஆனால் மத்திய அரசு 'வர்த்தக சமநிலை விலை' என்ற ஒரு செயற்கையான விலையை நிர்ணயம் செய்து வருகிறது. இந்த நிலையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கும் இது போன்று செயற்கையான விலை நிர்ணயம் செய்வதை எவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது. முழுவதும் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயுவிற்கு உற்பத்தி செய்யப்படும் விலையை மட்டும் கணக்கிட்டு விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டால் தான் உரம் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களும், இயற்கை எரிவாயுவை எரிபொருளாகக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் மின் நிறுவனங்களும் குறைந்த விலையில் இவற்றை மக்களுக்கு வழங்க இயலும். மேலும், இயற்கை எரிவாயு விலை ரூபாய் மதிப்பில் தான் நிர்ணயம் செய்யப்பட வேண்டுமேயன்றி, அமெரிக்க டாலர் மதிப்பில் நிர்ணயம் செய்யப்படக் கூடாது.
இயற்கை எரிவாயு போன்ற இயற்கை வளங்கள் தனிப்பட்ட எவருடைய சொத்தும் அல்ல. இவை இந்திய மக்கள் அனைவருக்கும் உரித்தான பொதுச் சொத்து. இந்த இயற்கை வளங்களின் உண்மையான சொந்தக்காரர்கள் பொதுமக்கள் தான். இந்த இயற்கை வளங்கள் அரசு கொள்கைகளால் சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது. எனவே மத்திய அரசு இந்த இயற்கை எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். 2014ம் ஆண்டு மே மாதம் வரையே மக்களால் ஆட்சிப் பொறுப்பை பெற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் விலை நிர்ணயம் செய்வதற்கான எந்த வித தார்மீக அதிகாரமும் கிடையாது. எனவே அடுத்த ஆண்டு மத்தியில் அமையப் பெறும் புதிய அரசு இதை நிர்ணயம் செய்வதே சரியானதாகும். மத்திய அரசு விடாப்பிடியாக இந்த இயற்கை எரிவாயு விலை நிர்ணய கொள்கையை திரும்பப் பெறவில்லையெனில், அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பின் உருவாகும் மத்திய அரசின் கொள்கைகளை வகுக்கும் நிலையை அடையும். எனது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க இந்த கொள்கையை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
வைத்திலிங்கம் ராஜினாமா எதிரொலி: தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்வு
21 Jan 2026சென்னை, தமிழக சட்டசபைக்கு அடுத்த 2 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வைத்திலிங்கம் ராஜினாமா: எம்.எல்.ஏ. காலியிடம் 5 ஆக உயர்ந்துள்ளது.
-
பிரான்ஸ் அதிபர் பதவியில் இருந்து மேக்ரான் விரைவில் நீக்கப்படுவார்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு
21 Jan 2026வாஷிங்டன், அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி விதிப்போம் என்று பிரான்சுக்கு அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
-
தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே த.வெ.க.வுக்கு பொதுச்சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வாய்ப்பு
21 Jan 2026புதுடெல்லி, தேர்தல் ஆணையத்திடம் த.வெ.க. அளித்த விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளதால் கட்சிக்கு பொதுச் சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தவறாக மந்திரம் புரோகிதர்: சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து அரசு விளக்கம்
21 Jan 2026சென்னை, கிளி ஜோசியர் புரோகிதம் ஓதியது போன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ குறித்து தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
-
தேர்தலில் யாருடன் கூட்டணி: ராமதாஸ் திடீர் ஆலோசனை
21 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
-
ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை
21 Jan 2026டோக்கியோ, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை படுகொலை செய்த யமகாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல்
21 Jan 2026ஜெருசலேம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அமைதி வாரியத்தில் இணைய இஸ்ரேல் உள்ளிட்ட இதுவரை 8 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
-
கூட்டணிக்கு வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி
21 Jan 2026சென்னை, கூட்டணிக்கு மனதார வரவேற்று வாழ்த்திய இ.பி.எஸ்.க்கு டி.டி.வி.தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.
-
ஒரே நாளில் 463 கைதிகளுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் ஜாமீன்
21 Jan 2026பாட்னா, ஒரே நாளில் 300 பேருக்கு ஜாமீன் வழங்கியதே இதற்கு முன்பு சாதனையாக இருந்த நிலையில் தற்போது, பாட்னா ஐகோர்ட் 463 கைதிகளுக்கு ஜாமீன் வழங்கியது புதிய சாதனை படைத்துள்ளத
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? வைத்திலிங்கம் விளக்கம்
21 Jan 2026சென்னை, ஓ பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
-
பிரதமர் மோடி வருகை எதிரொலி: செங்கல்பட்டில் 3 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
21 Jan 2026செங்கல்பட்டு, பிரதமர் வருகையையொட்டி கிண்டி, மீனம்பாக்கம் ஆகிய பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
-
இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா பெரும் பங்கு வகிக்கிறது பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்
21 Jan 2026புதுடெல்லி, இந்தியாவின் வளர்ச்சி பாதையில் திரிபுரா மாநிலம் பெரும் பங்கு வகிக்கிறது என்று அம்மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.&n
-
மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை மாநில காவல்துறையும் விசாரிக்கலாம்:
21 Jan 2026மத்திய அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்கை இனி மாநில காவல்துறையும் விசாரிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
தே.மு.தி.க. யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
21 Jan 2026சென்னை, தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம் ஒரேநாளில் ரூ.4,120 அதிகரிப்பு
21 Jan 2026சென்னை, தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டு விற்பனையானது.
-
கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா
21 Jan 2026வாஷிங்டன், கரீபியன் கடலில் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பலை அமெரிக்கா பறிமுதல் செய்துள்ளது.
-
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வலிபர் தற்கொலை சம்பவத்தில் பெண் கைது
21 Jan 2026திருவனந்தபுரம், கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய வலிபர் தற்கொலை சம்பவத்தில் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தது இஸ்ரோ
21 Jan 2026சென்னை, இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையமான பாரதிய அந்தரிக்ஷ் நிலையத்தை (பி.ஏ.எஸ்.) கட்டுவதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதற்கான நடவடிக்கைகளில்
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரன்-இ.பி.எஸ். சந்திப்பார்களா..?
21 Jan 2026சென்னை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை டி.டி.வி.தினகரன் சந்தித்து கூட்டணியில் இணைந்திருப்பது அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
-
பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு
21 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை, நிதின் நபீன் தலைவரானது குறித்து காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.
-
அசாமில் மீண்டும் வன்முறை: ஒருவர் உயிரிழப்பு-செல்போன், இணையதள சேவை துண்டிப்பு
21 Jan 2026கவுகாத்தி, அமாமில் மீண்டும் வன்முறை சம்பவம் நடைபெற்றதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் அங்கு செல்போன், இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.
-
மீண்டும் கூட்டணிக்குள் டி.டி.வி.தினகரன்: மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்திய இ.பி.எஸ்.
21 Jan 2026சென்னை, தே.ஜ.கூட்டணியில் மீண்டும் டி.டி.வி.தினகரன் இணைந்துள்ள நிலைியல் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.
-
பிரதமர் மோடியால் அசாமின் உலக புகழ் பெற்றது 'பகுரும்பா' நடனம்
21 Jan 2026புதுடெல்லி, உலக புகழ் பெற்ற பகுரும்பா நடனத்தை பிரதமர் மோடியின் சமூக ஊடகத்தில் இருந்து 20 கோடி பார்வையாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
-
தே.ஜ. கூட்டணியில் இணைந்த டி.டி.வி.தினகரனுக்கு இ.பி.எஸ். வரவேற்பு
21 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை அ.தி.மு.க.
-
சூர்யவன்ஷி சாதனை முறியடிப்பு
21 Jan 2026மெல்போர்ன்: இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆஸி., வீரர் மலாஜ்சுக் 51 பந்துகளில் அதிவேக சதத்தை பதிவு செய்து 52 பந்தில் இந்தியாவின் வைபவ் சூர்யவன்ஷி சதம் அடித்


