முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தயாளு அம்மாள் மனு: சுப்ரீம் கோர்ட்டில் முறையிட உத்தரவு

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 5 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு டெல்லி சி.பி.ஐ. தனி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். வயோதிகம் காரணமாக இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு அவர் சி.பி.ஐ. கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஷைனி கடந்த மே மாதம் தள்ளுபடி செய்தார். மேலும் ஜூலை 8 ம் தேதி தயாளு அம்மாள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். 

சி.பி.ஐ. கோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தயாளு அம்மாள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த அப்பீல் மனு நேற்று முன்தினம் நீதிபதி வீணா பீர்பால் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது அவர் விசாரிக்க மறுத்து விட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்றும் வேறு ஒரு நீதிபதி விசாரிக்க பரிந்துரை செய்கிறேன் என்றும் தெரிவித்தார். இந்த அப்பீல் மனு நீதிபதி சுதர்கவுன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அவரும் மனுவை விசாரிக்க மறுத்தார். 

தயாளு அம்மாள் உடல் நிலை குறித்து திங்கட்கிழமை மதியத்திற்குள் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்ய வேண்டும். அதுவரை இந்த மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் தயாளு அம்மாள் உடல் நிலை குறித்து முறையிடும் வரை சி.பி.ஐ. எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்