முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான நிலையங்களை தாக்க சதி: உளவுத்துறை எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. 22 - சென்னை விமான நிலையம் உள்பட 7 விமான நிலையங்களை தாக்க தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. டெல்லி, மும்பை, அகமதாபாத், சென்னை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் கவுகாத்தி ஆகிய 7 நகரங்களில் உள்ள விமான நிலையங்களை தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர்கள் சிறிய ரக விமானங்களை பயன்படுத்தி விமான நிலையங்களை தகர்க்க திட்டமிட்டுள்ளனர். மேலும் தீவிரவாதிகள் விமானத்தையும் கடத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் புதிய வகை வெடிகுண்டுகளை பயன்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து மத்திய பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்