எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருத்தணி, பிப்.23 - திருத்தணி ஒன்றியம் சத்துருஞ்செயபுரம் ஊராட்சியிலுள்ள சீனிவாசபுரம், முஸ்லீம் நகர், அருந்ததி காலனி மற்றும் மேதினிபுரம் ஆகிய கிராங்களில் காலம் காலமாக வசித்து வருபவர்களின் 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை மோசடியாக விற்பனை செய்ததை ரத்து செய்திட வலியுறுத்தியும், 5 ஆயிரம் மக்களை காலி செய்து விட்டு, அந்த நிலத்தை கோபாலபுரத்தை சேர்ந்த பெண்மணி மூலம் வெளி மாநில நிறுவனங்களுக்கு விற்கும் முயற்சியை ஜெயலலிதா தடுத்து நிறுத்துவார். விரைவில் கருணாநிதியின் அக்கிரமம் முடிவுக்கு வரப் போகிறது என்று அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் எச்சரிக்கை செய்துள்ளார்.
இதுகுறித்த விபரம் வருமாறு:-
தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஆணைக்கிணங்க திருத்தணி நகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளையும், திருத்தணி நகரத்திற்கு உள்ளே வருவதற்கு கட்டப்படும் பாலத்தின் பணிகளை விரைந்து முடித்திடவும் வீட்டுவரி உயர்வையும், பத்து நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விடப்படுவதையும், திருத்தணி கமலா தியேட்டர் அருகில் நேற்று (22.2.2011) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மேற்கு எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளரும், திருத்தணி சட்டமன்ற உறுப்பினருமான திருத்தணி கோ.அரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கண்டன உரையாற்றிய மதுசூதனன் பேசியதாவது:-
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வருங்கால முதல்வர் ஜெயலலிதா ஆணைங்கிணங்க இங்கு மிகபெரிய பிரம்மாண்டமான அளவில் மக்கள் வெள்ளத்தில் இங்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துக் கொண்டிருக்கிறது. திருத்தணி ஒன்றியத்திலுள்ள சீனிவாசபுரம், முஸ்லீம் நகர், அருந்ததி காலனி மக்களை அப்புறப்படுத்த மைனாரிட்டி தி.மு.க. அரசு முயற்சி எடுக்கிறது. ஆனால் ஜெயலலிதா இன்றைக்கும் மக்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார். மக்கள் வாழ்வதற்காகவே போராடிக் கொண்டிருக்கிறார். இஸ்லாமிய மக்களை ஏமாற்றுவதே கருணாநிதியின் வேலை. சென்னை கோபாலபுரம் 3-வது குறுக்கு தெருவில் வசிக்கும் ஒரு பெண்மணி இந்த மூன்று கிராமங்களை கையகப்படுத்த நினைக்கிறார். ரூ.1 கோடியே எழுபத்து ஆறு லட்சத்திற்கு அக்ரிமெண்ட் போட்டிருக்கிறார். இதை அடி மாட்டு விலைக்கு வாங்கி வெளிமாநில நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய நினைக்கிறார். காவல் துறைக்கு நான் சொல்லிக்கொள்வது ஏழை வயிற்றில் அடிக்காதீர்கள் .விரைவில் கோபாலபுரத்துக்காரரின் அக்கிரமம் முடிவுக்கு வரப் போகிறது. பொதுமக்களின் கண்ணீர் கருணாநிதி தண்ணீராக நினைக்கிறார். தர்மத்திற்கும், நீதிக்கும் வழி பிறக்கும் 1200 குடும்பம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழுகிற இடத்தை அபகரிக்க பார்க்கிறார். இது தி.மு.க.வுக்கு ஒன்றும் புதியது கிடையாது. என்.கே.கே.பி.ராஜா, வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் பல தி.மு.கவினர் கிராமங்களை காலி செய்து நிலங்களை அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். நமிதா, நக்மா, குஷ்பு ராஜியத்தை பார்க்க கருணாநிதி நினைக்கிறார். இலங்கை மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு கருணாநிதி நாடகம் நடத்துக்கிறார். அதில் ஒன்று கனிமொழி கைது. மீனவர்ளுக்கு பாடுபடும் ஒரே தலைவி ஜெயலலிதா இந்த 3 கிராமங்களை பற்றி கடந்த சட்டமன்ற கூட்ட தொடரில் அ.தி.மு.க. சார்பில் பேச ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.இதை பேச அனுமதி மறுக்கப்பட்டது. இன்னும் 3 மாதத்தில் மின்சார பற்றாக்குறை இருக்காது. விரைவில் ஜெயலலிதா முதல்வராக வரபோகிறார். இனி மக்களுக்கு எந்த கவலையும் இல்லை. இவ்வாறு மதுசூதனன் பேசினார்.
இதில் அரசு முன்னாள் கொறடா நரசிம்மன், திருத்தணி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் இ.என்.கண்டிகை எ.ரவி, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர் டி.டி.சீனிவாசன், திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் டி.பார்த்தீபன், தொகுதி செயலாளர் சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் லதா நீலகண்டன், இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் வேலஞ்சேரி எஸ்.பழனி நாகபூடி கோ.குமார், சேர்மேன் பி.ஜோதி, துணைத்தலைவர் எஸ்.நாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் டி.எம்.சீனிவாசன், பொருளாளர் பத்மாபுரம் சுரேஷ், மணபாக்கம் மு.காமராஜ், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ்.பி.தாயுமாணவன், நகர இளைஞர் அணி செயலாளர் கேபிள் எம்.சுரேஷ், மாவட்ட விவசாய பிரிவு துணைச் செயலாளர் என்.ஏ.குப்பன், மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் ஜி.பெருமாள், உத்திரமேரூர் தங்கபஞ்சாட்சரம், கே.பரத் கிருஷ்ணா, நகர பாசறை செயலாளர் சி.ஜி.நந்தா, பள்ளிப்பட்டு ஒன்றியம் ஏ.ஆர்.கந்தப்பன், ஏ.ஜி.கருணாகரன், ஆர்.தேவன், டி.ஏ.சுரேஷ், ஓ.கோபி, எ.அமாவாசை, தட்சணாமூர்த்தி மற்றும் ஏ.எஸ்.பாலஜி, தெக்களூர் என்.சேட்டு, சம்பத் நாடார், கவுன்சிலர்கள் சி.முனுசாமி நிர்மல்குமார் உள்பட ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். முடிவில் நகர செயலாளர் டி.செளந்தர்ராஜன் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
எந்த காலக்கெடுவுக்கும் இந்தியா அஞ்சாது: ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி
05 Jul 2025புதுடெல்லி, எந்த காலக்கெடுவுக்கும் அஞ்சி இந்தியா செயல்படாது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.
-
சுற்றுப்பயணத்திற்கான கட்சிப் பாடல், லோகோவை வெளியிட்டார் இ.பி.எஸ்.
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்துக்கான பாடல் மற்றும் லோகோ அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.
-
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்
05 Jul 2025சென்னை : சர்வதேச விண்வெளி மையத்தை இன்று இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம
-
மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே
05 Jul 2025மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் எஸ்.பி. ஆய்வு
05 Jul 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு நடத்தினார்.
-
பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் உற்சாக வரவேற்பு
05 Jul 2025பியூனோஸ் அயர்ஸ், பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.