முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒட்டுகேட்பு: அமெரிக்கா மன்னிப்பு கேட்க பிரேசில் கோரிக்கை

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பிரேசிலியா, செப்.7 - பிரேசில் அதிபர் தில்மா ரவுசெப்பின் டெலிபோன் பேச்சு, இ மெயில் தகவல்களை அமெரிக்க உளவு நிறுவனம் என்.எஸ்.ஏ. ஊடுருவி உளவு பார்த்ததாக பிரேசில் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து பிரேசில் 

உளவுத் குறை அதிகாரிகள் கூறியதாவது:

பிரேசில் அதிபர் தில்மா ரவுசெப் மற்றும் மெக்ஸிகோ அதிபர் என்ரிக் பெனா ஆகியோரின் டெலிபோன் உரையாடல்களை என்,எஸ்.ஏ. ஒட்டு கேட்டுள்ளது. மேலும் அதிபரின் இ மெயில்களையும் அமெரிக்க நிறுவனம் வேவு பார்த்துள்ளது. இதுதொடர்பான  முறையான விளக்கத்தை அமெரிக்காவிடமிருந்து எதிர்பார்க்கிறோம் என்றனர்.

இந்நிலையில் ஜி 20 மாநாட்டில் ஒபாமாவை, தில்மா ரவுசெப் சந்திப்பாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு இதுவரை ஒபாமாவை சந்திக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று பிரேசில் அதிகாரிகள் மறுத்தனர்.  

இந்த விவகாரத்தில் அமெரிக்கா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பிரேசில் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். அடுத்த மாதம் 23-ம்தேதி வாஷிங்டனில் ஒபாமாவை சந்திக்க தில்மா திட்டமிட்டிருந்தார். தற்போது உளவு பார்த்த பிரச்சனை எழுந்ததுள்ளதால் தனது பயணத்தை ரவுசெப் ரத்து செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்