முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புருனேயில் கள்ளக்காதலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை

புதன்கிழமை, 23 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

பந்தர்செரிபெகவான்,அக்.24 - புருனே நாட்டில் கள்ளக் காதலில் ஈடுபடுவோரை கல்லால் அடித்து மரண தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

தென்கிழக்கு ஆசிய நாடான புருனே இங்கிலாந்திடமிருந்து  கடந்த 1984_ல் விடுதலை பெற்றது. இங்கு மன்னர் சுல்தான் ஹஸ்சானஸ் போல்கியா ஆட்சி நடத்தி வருகிறார். முஸ்லிம் நாடான இது எண்ணைய் வளமிக்கது. தற்போது இங்கு முஸ்லிம்களின் ஷரியத் சட்டம் அமல் படுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து புதிய விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி கற்பழிப்பு, கொலை, கொள்ளை, போன்ற குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கள்ளக்காதலில் ஈடுபடுவோருக்கு கல்லால் அடித்து மரணதண்டனை நிறைவேற்றப்படும். கொள்ள சம்பவங்களில் ஈடுபடுவோரின் கை விரல் துண்டிக்கப்படும்.  இந்த புதிய சட்டம் இன்னும் 6 மாதங்களில் கடுமையாக அமல் படுத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை மன்னர் சுல்தான் ஹஸ்சானஸ் போல்கியோ பிறப்பித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்