முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் இருக்கும் லல்லு ஜாமீன்கோரி மனுத்தாக்கல்

திங்கட்கிழமை, 25 நவம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,நவ.26 - மாட்டு தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், ஜமீன் கேட்டு சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி தலைவரும் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான லல்லு பிரசாத் யாதவ், பீகார் மாநில முதல்வராக இருந்தபோது நடந்த மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார். தற்போது ராஞ்சி மத்திய சிறையில் உள்ளார். சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி அவரது எம்.பி. பதவியும் பறிக்கப்பட்டுவிட்டது. சிறையில் இருக்கும் லல்லு பிரசாத் யாதவ், ஜாமீன் மனுக்கேட்டு ஜார்க்கண்ட் மாநில ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனு கடந்த 31_ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில் லல்லு பிரசாத் யாத்வ் நேற்று ஜாமீன் கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். வருகின்ற 29_ம் தேதி இந்த மனுவான விசாரணைக்கு வருகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுமா? அல்லது லல்லுவுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago