எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பரங்குன்றம்,ஜூன்.2 - திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோயிலில் ஜூன் 6 ம் தேதி நடக்கும் மகா கும்பாபிஷேகத்திற்காக இன்று மாலை யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.
முருகப் பெருமானின் முதல் படை வீடும் எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2000 ம் ஆண்டில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. அதன்படி திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அங்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.
ரூ. 5 கோடியில் கோயில் மராமத்து பணிகள் செய்து ஜூன் 6 ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. திருப்பணிகள் துவங்கும் வகையில் அக்டோபர் 30 ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள சுவாமி சிலைகள், தூண்கள், சுவர்களில் மராமத்து பணிகள் நடக்கின்றன. கோயிலில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் முதல் முறையாக கமலம் வரையும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
7 நிலைகளை கொண்ட 150 அடி உயர ராஜ கோபுரத்தில் வர்ணம் தீட்டும் பணி நிறைவடைந்து வண்ணமயமாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோயிலுக்குள் உள்ள கருங்கற்களினால் ஆன சுவாமி பீடங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணியும் நடக்கிறது. மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமி சிலைகளுக்கான மராமத்து பணிகள் நிறைவடைந்து புணுகு சாத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக மூலஸ்தானத்தில் ஏ.சி. பொருத்தப்பட்டு வருகிறது.
யாகசாலை பூஜைகள் இன்று துவக்கம்:
யாகசாலை பூஜைகளுக்காக ரூ. 8 லட்சம் செலவில் 80 யாக குண்டங்கள் ஒரு பிரதான வேதிகையுடன் 5 வேதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 3 யாகசாலைகளும் அமைக்கப்பட்டு இன்று மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் முதல் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. நாளை காலை 2 ம் காலம், மாலையில் 3 ம் காலம், வருகிற 4 ம் தேதி காலையில் 4 ம் காலம், மாலையில் 5 ம் காலம், வருகிற 5 ம் தேதி காலையில் 6 ம் காலம், மாலையில் 7 ம் காலம் யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. அதை தொடர்ந்து கும்பாபிஷேக தினமான ஜூன் 6 ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம்கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு மகாதூப தீபாராதனைகள் நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 6.15 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்கள் புறப்பாடாகி ராஜகோபுரத்தில் மேல் பகுதியில் உள்ள கலசத்திற்கும், கோவர்த்தனாம்பிகை, வல்லப கணபதி விமானங்களுக்கும் கொண்டு செல்லப்படும். பூஜைகள் முடிந்து காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் கோபுர கலசங்களிலும், விமானங்களிலும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
அதனை தொடர்ந்து மூலவர்கள், பரிகார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி திருவீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். அதனை தொடர்ந்து 7 ம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடக்கிறது.
புனித தீர்த்தங்கள் வருகை:
யாக சாலையில் வைத்து பூஜிக்கப்படுவதற்காக திருப்பரங்குன்றம், மதுரை, அழகர்கோவில் மலை மீது உள்ள நூபுர கங்கை தீர்த்தம், காவிரி கங்கை உட்பட 6 புனித தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டுள்ளது. அவை தங்கம், வெள்ளி, குடங்கள் மற்றும் பித்தளை செம்புகளில் நிரப்பி, யாகசாலையில் வைத்து 8 கால பூஜைகள் நடக்கிறது. 6 ம் தேதி காலை இந்த புனித தீர்த்தங்கள் மூலம் கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகமும், மூலவர்களுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும்.
கோயில் ஆஸ்தான மண்டபத்தில் சுழலும் லிங்கம், நந்தி.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலுக்குள் உள்ள அனைத்து மண்டபங்களின் மேல் பகுதியிலும் கமலங்கள் வரையும் பணி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஆஸ்தான மண்டபத்தின் மேல் பகுதியில் ஒரு புறம் சுழலும் லிங்கமும், மற்றொரு புறம் சுழலும் நந்தியும் புதிய தொழில் நுட்பம், கலை நயத்துடன் வரையப்பட்டுள்ளது. தரையில் இருந்து இவற்றை பார்க்கும் பக்தர்கள் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் இந்த நந்தியும், லிங்கமும் அவர்களை நேர்த் திசையில் பார்ப்பது போன்று, எந்த பக்கம் நின்று பார்த்தாலும் அது நேராக தெரிவது போன்றும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை6 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவு
08 May 2024திருவனந்தபுரம் : திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது: காங்.,
08 May 2024புதுடில்லி, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் என்று கூறிய சாம் பிட்ரோடா கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி
08 May 2024ஐதராபாத் : கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
ஒரே நாளில் மருத்துவ விடுப்பு எடுத்த 300 ஊழியர்கள்: ஏர் இந்தியாவின் 78 விமானங்கள் ரத்து: அவதிக்குள்ளான பயணிகள்
08 May 2024புதுடெல்லி : ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
-
பிரேசிலில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு
08 May 2024பிரேசிலியா, பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
-
மோடியின் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் வளம் கண்டுள்ளன : நிர்மலா சீதாராமன் தகவல்
08 May 2024புதுடெல்லி : தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் சொல்லி வருகின
-
கேரளாவில் நைல் காய்ச்சல் பரவல்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
08 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவி வரும் நைல் காய்ச்சலை தொடர்ந்து அங்கு 3 மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
விசா கொள்கையில் திடீர் மாற்றம்: ஆஸி., நடவடிக்கையால் இந்திய மாணவர்களுக்கு கடும் பாதிப்பு
08 May 2024மெல்போர்ன், மாணவர்களுக்கான விசா கொள்கையில் ஆஸ்திரேலிய அரசு மாற்றம் செய்துள்ளது. இதனால், இந்தியர்கள் பாதிக்கப்படக்கூடும் என தெரிகிறது.