எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பரங்குன்றம்,ஜூன்.2 - திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோயிலில் ஜூன் 6 ம் தேதி நடக்கும் மகா கும்பாபிஷேகத்திற்காக இன்று மாலை யாகசாலை பூஜைகள் துவங்குகின்றன.
முருகப் பெருமானின் முதல் படை வீடும் எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 2000 ம் ஆண்டில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகம விதி. அதன்படி திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அங்கு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது.
ரூ. 5 கோடியில் கோயில் மராமத்து பணிகள் செய்து ஜூன் 6 ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. திருப்பணிகள் துவங்கும் வகையில் அக்டோபர் 30 ம் தேதி பாலாலயம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள சுவாமி சிலைகள், தூண்கள், சுவர்களில் மராமத்து பணிகள் நடக்கின்றன. கோயிலில் உள்ள அனைத்து மண்டபங்களிலும் முதல் முறையாக கமலம் வரையும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
7 நிலைகளை கொண்ட 150 அடி உயர ராஜ கோபுரத்தில் வர்ணம் தீட்டும் பணி நிறைவடைந்து வண்ணமயமாக கம்பீரமாக காட்சியளிக்கிறது. கோயிலுக்குள் உள்ள கருங்கற்களினால் ஆன சுவாமி பீடங்களுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தும் பணியும் நடக்கிறது. மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய சுவாமி சிலைகளுக்கான மராமத்து பணிகள் நிறைவடைந்து புணுகு சாத்தப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக மூலஸ்தானத்தில் ஏ.சி. பொருத்தப்பட்டு வருகிறது.
யாகசாலை பூஜைகள் இன்று துவக்கம்:
யாகசாலை பூஜைகளுக்காக ரூ. 8 லட்சம் செலவில் 80 யாக குண்டங்கள் ஒரு பிரதான வேதிகையுடன் 5 வேதிகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 3 யாகசாலைகளும் அமைக்கப்பட்டு இன்று மாலை 6 மணி முதல் 8 மணிக்குள் முதல் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. நாளை காலை 2 ம் காலம், மாலையில் 3 ம் காலம், வருகிற 4 ம் தேதி காலையில் 4 ம் காலம், மாலையில் 5 ம் காலம், வருகிற 5 ம் தேதி காலையில் 6 ம் காலம், மாலையில் 7 ம் காலம் யாகசாலை பூஜைகள் நடக்கின்றன. அதை தொடர்ந்து கும்பாபிஷேக தினமான ஜூன் 6 ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம்கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு மகாதூப தீபாராதனைகள் நடக்கிறது. அதனை தொடர்ந்து காலை 6.15 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்கள் புறப்பாடாகி ராஜகோபுரத்தில் மேல் பகுதியில் உள்ள கலசத்திற்கும், கோவர்த்தனாம்பிகை, வல்லப கணபதி விமானங்களுக்கும் கொண்டு செல்லப்படும். பூஜைகள் முடிந்து காலை 6.45 மணி முதல் 7.15 மணிக்குள் கோபுர கலசங்களிலும், விமானங்களிலும் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.
அதனை தொடர்ந்து மூலவர்கள், பரிகார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி திருவீதி உலா நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். அதனை தொடர்ந்து 7 ம் தேதி முதல் மண்டலாபிஷேகம் நடக்கிறது.
புனித தீர்த்தங்கள் வருகை:
யாக சாலையில் வைத்து பூஜிக்கப்படுவதற்காக திருப்பரங்குன்றம், மதுரை, அழகர்கோவில் மலை மீது உள்ள நூபுர கங்கை தீர்த்தம், காவிரி கங்கை உட்பட 6 புனித தீர்த்தங்கள் எடுத்து வரப்பட்டுள்ளது. அவை தங்கம், வெள்ளி, குடங்கள் மற்றும் பித்தளை செம்புகளில் நிரப்பி, யாகசாலையில் வைத்து 8 கால பூஜைகள் நடக்கிறது. 6 ம் தேதி காலை இந்த புனித தீர்த்தங்கள் மூலம் கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகமும், மூலவர்களுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும்.
கோயில் ஆஸ்தான மண்டபத்தில் சுழலும் லிங்கம், நந்தி.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலுக்குள் உள்ள அனைத்து மண்டபங்களின் மேல் பகுதியிலும் கமலங்கள் வரையும் பணி நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஆஸ்தான மண்டபத்தின் மேல் பகுதியில் ஒரு புறம் சுழலும் லிங்கமும், மற்றொரு புறம் சுழலும் நந்தியும் புதிய தொழில் நுட்பம், கலை நயத்துடன் வரையப்பட்டுள்ளது. தரையில் இருந்து இவற்றை பார்க்கும் பக்தர்கள் எந்த திசையில் இருந்து பார்த்தாலும் இந்த நந்தியும், லிங்கமும் அவர்களை நேர்த் திசையில் பார்ப்பது போன்று, எந்த பக்கம் நின்று பார்த்தாலும் அது நேராக தெரிவது போன்றும் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஜார்க்கண்ட் சுரங்க விபத்தில் 4 பேர் பலி
05 Jul 2025ராஞ்சி, ஜார்க்கண்ட் நிலக்கரி சுரங்க விபத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர்.