எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,பிப்.27 - வரும் சட்டசபை தேர்தலில் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு முடிவு கட்டப்படும் என்று ஆர்.பி. உதயகுமார் கூறினார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் ஊமச்சிகுளத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் கே.முருகேசன் தலைமை வகித்தார். மதுரை கிழக்கு தொகுதி கழக செயலாளர் மா.இளங்கோவன் அனைவரையும் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மதுரை மாநகர் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளரும் மாநில மாணவரணி செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் கலந்துகொண்டு ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை எந்தவித ஆரவாரமும் ஆடம்பரமும் இல்லாமல் ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகிறார்கள். அம்மா என்றால் கருணை, தர்மம் போன்றவையாகும். அரசியலுக்கு ஜெயலலிதா வருவதற்கு முன்பே ஏழை எளியோருக்கு உதவி செய்யும் கருணை உள்ளம் படைத்தவர். கலைத்துறையில் அவர் இருந்தபோதும் சீன யுத்தம் வந்தபோதும் ராணுவ யுத்த நிதிக்காக தான் அணிந்திருந்த நகைகளை அப்போது பிரதமராக இருந்தவரிடம் வழங்கினார். ஆனால் கருணாநிதியோ ஒரு குண்டூசியை கூட யாருக்கும் கொடுத்தது கிடையாது. தமிழகத்தில் 10 ஆண்டு காலம் ஆட்சி செய்த ஜெயலலிதா, விலைவாசி உயர்வு இல்லாமல் சட்டம் ஒழுங்கு முறையாக பாதுகாக்கப்பட்டு தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக வழிநடத்திச் சென்று பொற்கால ஆட்சியை தந்தார். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் தமிழக மக்கள் மகிழ்ச்சி பொங்க வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்று கருணாநிதியின் கோரப்பிடியில் சிக்கி தமிழக மக்கள் நித்தம் நித்தம் மரண பயத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிறது. இவற்றையெல்லாம். கருணாநிதி கண்டுகொல்லாமல் கோடி கோடியாக ஊழல் செய்து கொள்ளையடித்து வருகிறார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ஊழல் செய்து மத்திய அரசின் கஜானாவை காலியாக்கி கருணாநிதியின் கஜானாவுக்கு மாற்றியுள்ளார் மாஜி மந்திரி ஆ.ராசா. இதைப்பற்றி மத்திய அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. ஜெயலலிதாவின் போர்க்குரலால் இந்த ஊழல் மக்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டது. அதன் பின் இந்திய தலைமை கணக்கு அதிகாரி, உச்சநீதிமன்றம் கண்டித்ததின்பேரில் ராசா, வேறுவழியின்றி கைது செய்யப்பட்டார். ஆனால் இதுவரை அவர் கொள்ளையடித்த பணத்தை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு கைப்பற்றவில்லை. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட கருணாநிதி, கனிமொழி, ராஜாத்தி அம்மாள் ஆகியோரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். இது மிக விரைவில் நடைபெறும்.
தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி அறிவித்துள்ள இலவச திட்டங்கள் அனைத்தும் ஒரு மோசடி திட்டமாகும். இந்த இலவச திட்டங்களால் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பயனும் ஏற்படாது. அதிலும் இந்த இலவசங்கள் அனைத்தும் தி.மு.க.வினர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. வேறு எந்த முக்கிய திட்டங்களையும் கருணாநிதி செயல்படுத்தவில்லை. கருணாநிதியின் நிர்வாக சீர்கேட்டால் தமிழகம் இன்று 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் சுமையில் சிக்கியுள்ளது. ஒவ்வொரு தமிழன் தலையிலும் ரூ. 15 ஆயிரம் கடன் சுமை உள்ளது. இதுதான் கருணாநிதியின் கபட ஆட்சியின் நிலையாகும். அதேநேரத்தில் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களை எண்ண முடியாது. ஆற்று மணலை கூட எண்ணி விடலாம். கருணாநிதியின் குடும்பம் சுருட்டியுள்ள சொத்துக்களை எவ்வராலும் எண்ணி சொல்லிவிட முடியாது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தை கருணாநிதி குறுக்கு வழியில் கைப்பற்றி தன்னுடைய கடும்ப சொத்தாக்கிவிட்டார். இதனை நாட்டு மக்களும் அவரது தொண்டர்களும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். எனவே வரும் சட்டசபை தேர்தல் கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்கு ஒரு முடிவு கட்டும் தேர்தலாக அமையும். இந்த தேர்தலோடு கருணாநிதி நாட்டை விட்டே ஓடி விடுவார். மீண்டும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் இந்த நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று இன்றைக்கு மக்களே பேசி வருகிறார்கள். எனவே மீண்டும் ஜெயலலிதாவின் தலைமையில் புனித ஆட்சி மலர நாம் அனைவரும் அவரது பிறந்த நாளில் அயராது பாடுபட வேண்டும் என சூளூரை ஏற்போம். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் அ.மா.பரமசிவம், மாவட்ட மாணவரணி செயலாளர் கே.மாணிக்கம், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் காசிமாயன், மாவட்ட பேரவை இணைச்செயலாளர் ஜி.கருப்பணன், மாணவரணி இணை செயலாளர் கே.பி.பூமிநாதன், ஒன்றிய இணைச்செயலாளர் கருணாமூர்த்தி, ஒன்றிய பேரவை செயலாளர் மலையாளம், வக்கீல் கோபி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது: வெள்ளி விலை புதிய உச்சம்
18 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், சவரன் ரூ.99,520-க்கும் விற்பனையானது.
-
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது: பெயர் இல்லாதவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
18 Dec 2025சென்னை, தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
-
மத்திய அரசு சார்பில் அனைவருக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளதா...? தமிழ்நாடு அரசு விளக்கம்
18 Dec 2025சென்னை, 'மத்திய அரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கும் திட்டம்' என்ற பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-12-2025.
18 Dec 2025 -
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை ஜன.1 முதல் அமல்
18 Dec 2025சென்னை, தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
18 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வில் கடந்த 5 நாட்கள் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்புக்காக த
-
பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள்: ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
18 Dec 2025ஈரோடு, பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள் என ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பேசினார். மேலும், களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே
-
தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
18 Dec 2025தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
-
நடுவானில் திடீர் பழுது: ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசர தரையிறக்கம்
18 Dec 2025கொச்சி, நடுவானில் திடீர் பழுது காரணமாக ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கலைஞர் பல்கலைக்கழக மசோதா: ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
-
ஈரோட்டில் பிரச்சாரத்தின் போது கம்பத்தில் ஏறிய ரசிகரை கண்டித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, த.வெ.க. தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கம்பத்தில் ஏறிய தொண்டரை, பேச்சை நிறுத்திவிட்டு அவர் கண்டித்தார்.
-
அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிப்பு: இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் விரைவில் தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள என்றும், இதனால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது என்றும் பிரதமர் மோடிக்கு எழுத
-
காந்தியின் பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பார்லி. வளாகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
18 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள
-
ஈரோடு பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்..!
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "நன்றி ஈரோடு" என்று பதிவிட்டுள்ளார்.
-
காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
18 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை குளிர்விக்க ஏழைகள்
-
ஈக்வடார் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொலை சம்பவங்கள்..!
18 Dec 2025பார்சிலோனா, ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விபி-ஜி ராம்ஜி மசோதா பார்லி., மக்களவையில் நிறைவேற்றம்
18 Dec 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
-
ஜனவரி 5-ம் அ.ம.மு.க. பொதுக்குழுக்கூட்டம்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
18 Dec 2025சென்னை, அ.ம.மு.க.வின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
18 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ. 1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சார பேருந்துகள் இயக்கம்: துணை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
18 Dec 2025சென்னை, 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் பலி: மத்திய அரசு
18 Dec 2025புதுடெல்லி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷ்ய ராணுவத்தில், 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
நேரு கடிதங்களை திருப்பி அளிக்க வேண்டும்: சோனியா காந்திக்கு மத்திய அரசு கடிதம்
18 Dec 2025புதுடெல்லி, கடந்த 2008-ம் ஆண்டு பெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் திருமணமாளிகை திறப்பு: என் வெற்றிக்குப்பின் என் மனைவி உள்ளார்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
18 Dec 2025சென்னை, கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் அண்ணா திருமணமாளிகையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், என் வெற்றிக்குப்பின்
-
ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விமர்சித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விஜய் விமர்சித்ததாக இணையத்தில் பலர் தெரிவித்து வருகின்றனர்.
-
புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு இலவச லேப்டாப் வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி தகவல்
18 Dec 2025சென்னை, புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.


