எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.27 - ரூ.250 கோடி செலவில் சென்னை வர்த்தக மையம் விரிவாக்கப்பணிகள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார். இந்திய அரசின் இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழக அரசின் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தின் கூட்டு முயற்சியால் சென்னை வர்த்தக மையம் 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் 51 சதவீதமும் மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் 49 சதவீதமும் பங்களிப்பு செய்து இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்திய வர்த்தகம் மற்றும்
தொழில்துறை உலகளாவிய போட்டியை எதிர்கொள்ளும் வகையில், தொழில் கண்காட்சிகளை நடத்தி அதன் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.
சென்னை வர்த்தக மையம், சென்னை மாநகரின் பிரதான இடமான
நந்தம்பாக்கத்தில், 25.48 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. இவ்வர்த்தக மையம், 10560 சதுரடியில் மூன்று குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கண்காட்சி அரங்கங்களையும், ரூபாய் 60 கோடியே 60 இலட்சம் செலவில், 2000 பேர் அமரக் கூடிய கூட்டரங்கையும் உள்ளடக்கியது. சென்னை வர்த்தக மையத்தில், 2001ஆம் ஆண்டில் ஒரு கண்காட்சி மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், 2010ஆம் ஆண்டில் வருடம் முழுவதும் தொடர்ச்சியாக 84 கண்காட்சிகளையும், 107 கூட்டங்களையும் நடத்துமளவிற்கு தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இப்போதுள்ள வர்த்தக மையத்தின் பரப்பளவு, நாட்டிலுள்ள பிற வர்த்தக மையங்களின் பரப்பளவைவிட குறைவாக உள்ளதால், உலகளாவிய மிகப் பெரிய
வர்த்தகம் மற்றும் தொழில் கண்காட்சிகளை சென்னையில் நடத்த போதிய இடவசதியில்லை.
சென்னை வர்த்தக மைய விரிவாக்கத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2010 மே 3 அன்று சட்டப்பேரவையில் நடைபெற்ற தொழில்துறை மானியக் கோரிக்கையின் போது சென்னை வர்த்தக மைய விரிவாக்க திட்டத்திற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.
அதன் அடிப்படையில், தொழில்துறை வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும்
வகையில், சென்னை வர்த்தக மையம் உலகத்தரத்தில் விரிவாக்கப்படவுள்ளது. மேற்படி விரிவாக்கப் பணிக்கு, டாமாசிக் இன்ஜினியரிங் கன்சார்டியம் நிறுவனம் சென்னை, கட்டுமானப் பொறியியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளனர். ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில், பல அடுக்கு கண்காட்சி
அரங்குகள் மற்றும் இரண்டு அடுக்கு அடித்தளங்கள் கொண்ட வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் புதிய கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.
மேற்படி விரிவாக்கத்தின் மூலம், தரைத்தளம் மற்றும் முதல் தளங்களில் தலா 6 குளிர்சாதனப் வசதிக் கொண்ட கண்காட்சி அரங்குகள் ஒவ்வொன்றும் 66000 சதுரடி பரப்பளவில் அமைக்கப்படவுள்ளன. அடித்தளத்தில் 74000 சதுரடி பரப்பளவில், 2000 கார்களும், 2000 இரு சக்கர வாகனங்களும் நிறுத்தும் அளவிற்கு
கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விரிவாக்கத்தில், உணவுக்கூடம், நூலகம், கூட்டரங்கம், பேரழிவு மேலாண்மை முறை மற்றும் இதர வசதிகளும் ஏற்படுத்தப்படவுள்ளன. இவ்விரிவாக்கத் திட்டம் ஜூலை 2011ல் தொடங்கப்பட்டு, மார்ச் 2013ல் முடிவடையும். இவ்விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்றப்பின்,
நாட்டிலேயே சிறந்த தொழிற்கண்காட்சி வளாகமாக சென்னை வர்த்தக மையம் அமையும்.
சென்னை வர்த்தக மையத்தின் விரிவாக்கத் திட்டத்தினை துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.2.2011) தொடங்கி வைத்து, அதன் மாதிரி வடிவமைப்பினை பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது, தொழில்துறை முதன்மைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் தலைவர் தேவேந்திரநாத் சாராங்கி, மேலாண்மை இயக்குநர் சுனில் பாலிவால், தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.எஸ். கந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என நினைக்கிறார்கள்: அமைச்சர் பேச்சு
15 Dec 2025திருச்சி, திருச்சியில் தி.மு.க.வை அழித்துவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிப்பு
15 Dec 2025சென்னை, தமிழக்தில் பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
சென்னையில் வரும் 27-ம் தேதி நா.த. கட்சி பொதுக்குழு கூட்டம் : சீமான் அறிவிப்பு
15 Dec 2025சென்னை, வருகிற 27-ந் தேதி நா.த.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
-
யூத எதிர்ப்புவாதத்தை தூண்டுகிறார் ஆஸ்திரேலிய பிரதமர் மீது நெதன்யாகு குற்றச்சாட்டு
15 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
2026 சட்டசபை தேர்தல் வெற்றி கூட்டணியில் இடம்பெறுவோம்: டி.டி.வி.தினகரன் பேட்டி
15 Dec 2025தஞ்சாவூர், 2026 சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும். எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது.
-
சிட்னி துப்பாக்கிச்சூட்டை நடத்தியது பாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகன்: ஆஸ்திரேலிய காவல்துறை தகவல்
15 Dec 2025சிட்னி, ஆஸ்திரேலியாவின் போண்டி கடற்கரையில் யூத விடுமுறை கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர்.
-
ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை உதவி இயக்குநர் அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
15 Dec 2025சென்னை, ஆகாஷ் பாஸ்கரன் வழக்கில் அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட நிலையில் கோர்ட் அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
-
ரூ.32.90 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு ஹஜ் இல்லத்திற்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
15 Dec 2025சென்னை, ரூ.32.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஹஜ் இல்லத்திற்கு இன்று காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
-
2026 சட்டசபை தேர்தல் போட்டியிடும் அ.தி.மு.க.வினருக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கியது
15 Dec 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகிக்கும் பணி நேற்று தொடங்கியது.
-
ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு மைய கட்டிடம் : அமைச்சர் சேகர் பாபு அடிக்கல்
15 Dec 2025சென்னை, ரூ.49.70 லட்சம் மதிப்பிலான பல்நோக்கு மையக்கட்டிடத்திற்கு அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்.
-
ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
15 Dec 2025அம்மான், ஜோர்டான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியை ஜோர்டான் பிரதமர் ஜாபர் ஹாசன் நேரில் சென்று வரவேற்றார்.
-
இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து
15 Dec 202512 அணிகள் இடையிலான 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடந்து வந்தது.
-
தே.மு.தி.க. மாநாடு 2.0: பிரேமலதா அழைப்பு
15 Dec 2025சென்னை, தே.மு.தி.க. மக்கள் உரிமை மீட்பு மாநாட்டிற்கு பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
-
மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைக்கும் முயற்சியை உடனே கைவிட வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
15 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சிதைக்கும் முயற்சியை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில் நிர்வாகத்திற்கே முழு உரிமை உள்ளது: ஐகோர்ட் மதுரை கிளையில் வாதம்
15 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல; சமணர் காலத்து தூண் என்றும், தீபம் ஏற்றுவது தொடர்பாக கோவில்
-
சர்வதேச அளவில் முதலீடுகள் அதிகரிப்பு: தங்கத்தின் விலை மேலும் உயரும்..!
15 Dec 2025சென்னை, சர்வதேச அளவில் முதலீடுகள் அதிகரிப்பால் தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை: பிரதமர் மோடிக்கு இ.பி.எஸ். நன்றி
15 Dec 2025சென்னை, பெரும்பிடுகு முத்தரையர் தபால் தலை வெளியிட்ட பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
-
வரலாற்றில் முதன்முறையாக ரூ.1 லட்சத்தை தாண்டியது: ஒரு சவரன் தங்கம் விலை
15 Dec 2025சென்னை, வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தில் விற்பனையானது.
-
பாமாயில், பருப்பு கொள்முதல்: ஒப்பந்தம் கோரியது தமிழ்நாடு அரசு
15 Dec 2025சென்னை, பாமாயில், துவரம் பருப்பை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு.
-
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயார் உக்ரைன் அதிபர் திடீர் அறிவிப்பு
15 Dec 2025கீவ், மேற்கத்திய நாடுகளிடமிருந்து உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெற்றால், நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
-
மேட்டூர் அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு
15 Dec 2025மேட்டூர், டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்றுக்கொள்வதில் தவறு இல்லை: அமைச்சர் ரகுபதி பேட்டி
15 Dec 2025புதுக்கோட்டை, அனைவரும் உதயநிதி இந்த இயக்கத்திற்கு வலுவூட்டக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ரகுபதி உதயநிதி ஸ்டாலினை தலைமையாக ஏற்று
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 14-12-2025
15 Dec 2025 -
தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் முடிவு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
15 Dec 2025சென்னை, 2026 சட்டமன்ற தேர்தலிலும் ராயபுரத்தில்தான் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு முழு ஆதரவு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
15 Dec 2025டெல்லி, ஆஸ்திரேலியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


