எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சின்னமனூர்,மார்ச்.1 - தமிழகத்தில் ஆட்சி செய்து தி.மு.க கூட்டணியை தோற்கடித்து நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.அதற்கு மக்கள் அனைவரும் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள் என நாம் தமிழர் இயக்கத்தலைவர் நடிகர் சீமான் பேசினார்.தேனி மாவட்டம் சின்னமனூரில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக பொது கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில்: முல்லைபெரியாறு அணையில் என் இனம் இழந்து விட்ட உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.ஐந்து முறை நாட்டை ஆண்ட தமிழக தற்போதைய முதல்வர் ஏன் இதை பற்றி அக்கறை கொள்ள வில்லை.உச்ச நீதி மன்ற தீர்ப்பை மீறி புதிய அணை கட்டுவோம் என கூறும் கேரள அரசை பார்த்து வேடிக்கை பார்ப்பது தான் தி.மு.க கூட்டணியின் சாதனையா? இடுக்கி மாவட்டம் தமிழ்நாட்டிலிருந்து தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. பெரியாறுஅணை தமிழர்களுடையது அதை யாராலும் பிடுங்க முடியாது.அந்த அணை தன் மானமுள்ள தமிழர் இனத்தால் கட்டப்பட்டது.இந்த அணை வெள்ளையரான பென்னிக்குக்கால் அவர் சொத்தை விற்று கட்டப்பட்டது.ஒரு வெள்ளைகாரனுக்கு உள்ள அக்கரை கூட கருணாநிதிக்கு இல்லையே.ஐந்து முறை முதல்வர் என மார்தட்டி சொல்லும் தி.மு.க அரசு எத்தனை அணை கட்டியுள்ளது.காவிரி நீர் பிரச்சனை தி.மு.க கூட்டணியால் தீர்க்கப்பட்டதா தவித்த வாய்க்கு தண்ணீர் தர மறுக்கிறது.கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் கோவிலில் சாமி கும்பிட வருகிறார் ஏன் என்று கேட்டால் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்ய வேண்டுமாம் ,ஏன் அதே மழை தமிழகத்தில் பெய்தால் நாங்களே விவசாயம் செய்து கொள்வோமே.உங்கள் கர்நாடகத்தில் மழை பெய்து அணை நிரம்பி எங்களுக்கு தர வேண்டும் என்பது அவசியமில்லையே.தி.மு.க கூட்டணி அரசே நாங்களே காவிரிநீர் தேவையில்லை என சுவரொட்டிகள் அடித்து ஒட்டப்போகிறோம்.ஒட்டி விட்டு நெய்வேலியில் 50 ஆயிரத்திற்கும் மேல் மக்களை திரட்டி கர்நாடகத்திற்கு மின்சாரத்தை கொடுக்காதே என போராட்டம் செய்யப்போகிறோம்.காஷ்மீரை பிரித்து கொடு இல்லை எனில் எங்கள் மண்ணான கச்சதீவை எங்களிடம் கொடுத்து விடுங்கள்.
மத்திய அரசின் நதிநீர் நடுவர் மன்றமும்,உச்சநீதிமன்றமும் தன் தீர்ப்பை சொன்னாலும் ,கேரள,கர்நாடக,மாநிலங்கள் மதிப்பதில்லை ஏன்? கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் அவர்களுக்கு எதிராக தி.மு.க செயல் பட்டதுண்டா? கேட்டால் கடிதம் எழுதுகிறேன் என்கிறார் முதல்வர் கருணாநிதி.மீனவர் பிரச்சனையா ?மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் ,முல்லைபெரியாறு பிரச்சனையா? கடிதம் எழுதியிருக்கிறேன் காவிரிநீர் பிரச்சனையா?கடிதம் எழுதியிருக்கிறேன் ,இலங்கை தமிழர்கள் பிரச்சனையா?கடிதம் எழுதியிருக்கிறேன்,இவர் என்ன தபால் நிலையத்திலா வேலை செய்கிறார்.இவர்கள் அரசு தான் நாடு முழுவதும் தொலைபேசியில் 50 பைசாவிற்கு பேசலாம் என திட்டம் போட்டது,ஆனால் இவர் இன்னும் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.
மீண்டும் தி.மு.க ,காங்கிரசுடன் கைகோர்த்து நிற்கிறது.இதற்கு வேறு காரணம் ஏதும் இல்லை.கூட்டணி சேராவிட்டால் ஸ்பெக்டரம் ஊழலில் தன் மனைவி ராஜாத்தியும்,மகள் கனிமொழியும் கைதாகி விடுவார்கள் என்ற பயம் தான்,தி.மு.க -காங்கிரஸ் கூட்டணி கெட்டி கூட்டணி இல்லை பெட்டி கூட்டணி.
இலவசங்களை அள்ளி தருகிறோம் என கூறும் திமுக அரசால் தமிழக அரசு 1 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? 1ரூபாய்க்கு அரிசி தருகிறோம் என கூறும் தி.மு.க அரசை மேடை போட்டு பாராட்டலாம்,அதே போல் விலைவாசி உயர்வு,மின்சார பற்றாக்குறை என அதே போல் மேடை போட்டு திட்டலாமா.
தற்போது ஊடகங்களிலும் செய்திதாள்களிலும் பார்த்திருப்பீர்கள் ! லிபியா ,எகிப்து போன்ற நாடுகளில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து புரட்சி வெடித்தது என்று காரணம் என்ன என்று கேட்டால் ஒரே அரசு 30 ஆண்டு காலம் ஆட்சி செய்து வருவதால் அங்கு மக்கள் போராடி வருகிறார்கள்.அதை விட கொடுமையான வாரிசு அரசியல் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.60 ஆண்டுகளாக இந்தியாவில் வாரிசு அரசியல் செய்யும் காங்கிரஸ் ,அதே போல் தமிழ்நாட்டில் தமிழ்,தமிழ் என பேசும் கருணாநிதியின் தி.மு.க தனக்கு அடுத்து ஸ்டாலின் ,அழகிரி,கனிமொழி,அவர்களுக்கடுத்து பேரன்கள் உதயநிதி ஸ்டாலின் ,தயாநிதி அழகிரி,என வாரிசு அரசியல் செய்யும் திமுக கூட்டணியை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும்.
தமிழ்நாட்டை ஆண்ட எம்.ஜி.ஆர் போல் கருணாநிதிக்கு தமிழக மக்கள் மீது அக்கரை இல்லை.ஓட்டுக்கு பணம் கொண்டு வரும் தி.மு.க காரர்களிடம் கேள்,நண்பா இந்த பணம் எப்படி வந்தது?யாருடையது அப்பன் வீட்டு பணம்? உன் தலைவர் கருணாநிதியும்,சோனியா அம்மையாரும் அவர்களுடைய சொத்தை விற்று கொடுத்த பணமா?என கேள் அவை எல்லாம் நம்முடைய பணம்,ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாய் செலவழித்து தி.மு.க கூட்டணி ஜெயிக்க நினைக்கிறது,ஏன் இவ்வளவு செலவு செய்கிறது.ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாய் செலவழித்தால் 1000 கோடி ரூபாய் ஊழல் செய்து சம்பாதித்து கொள்ளலாம் என்ற தைரியம் .
இன்னும் சில நாட்களில் தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து தெரிந்து விடும்.நானும் ஆவலுடன் இருக்கிறேன்.அவர்கள் தமிழகத்தில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் தோற்கடிக்க பட வேண்டும்.அது நடக்க வேண்டுமென்றால் அதனை எதிர்த்து போட்டியிடும் அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள். தமிழ் சொந்தங்களே நாம் நலம் காக்க தி.மு.க கூட்டணியை வீழ்த்த வேண்டும்.அவ்வாறு வீழ்த்தும் போது தமிழன் உலகளவில் தன்னுடைய தன் மானத்தை நிலை நிறுத்த முடியும் என பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.