எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சின்னமனூர்,மார்ச்.1 - தமிழகத்தில் ஆட்சி செய்து தி.மு.க கூட்டணியை தோற்கடித்து நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.அதற்கு மக்கள் அனைவரும் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள் என நாம் தமிழர் இயக்கத்தலைவர் நடிகர் சீமான் பேசினார்.தேனி மாவட்டம் சின்னமனூரில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக பொது கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில்: முல்லைபெரியாறு அணையில் என் இனம் இழந்து விட்ட உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.ஐந்து முறை நாட்டை ஆண்ட தமிழக தற்போதைய முதல்வர் ஏன் இதை பற்றி அக்கறை கொள்ள வில்லை.உச்ச நீதி மன்ற தீர்ப்பை மீறி புதிய அணை கட்டுவோம் என கூறும் கேரள அரசை பார்த்து வேடிக்கை பார்ப்பது தான் தி.மு.க கூட்டணியின் சாதனையா? இடுக்கி மாவட்டம் தமிழ்நாட்டிலிருந்து தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. பெரியாறுஅணை தமிழர்களுடையது அதை யாராலும் பிடுங்க முடியாது.அந்த அணை தன் மானமுள்ள தமிழர் இனத்தால் கட்டப்பட்டது.இந்த அணை வெள்ளையரான பென்னிக்குக்கால் அவர் சொத்தை விற்று கட்டப்பட்டது.ஒரு வெள்ளைகாரனுக்கு உள்ள அக்கரை கூட கருணாநிதிக்கு இல்லையே.ஐந்து முறை முதல்வர் என மார்தட்டி சொல்லும் தி.மு.க அரசு எத்தனை அணை கட்டியுள்ளது.காவிரி நீர் பிரச்சனை தி.மு.க கூட்டணியால் தீர்க்கப்பட்டதா தவித்த வாய்க்கு தண்ணீர் தர மறுக்கிறது.கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் கோவிலில் சாமி கும்பிட வருகிறார் ஏன் என்று கேட்டால் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்ய வேண்டுமாம் ,ஏன் அதே மழை தமிழகத்தில் பெய்தால் நாங்களே விவசாயம் செய்து கொள்வோமே.உங்கள் கர்நாடகத்தில் மழை பெய்து அணை நிரம்பி எங்களுக்கு தர வேண்டும் என்பது அவசியமில்லையே.தி.மு.க கூட்டணி அரசே நாங்களே காவிரிநீர் தேவையில்லை என சுவரொட்டிகள் அடித்து ஒட்டப்போகிறோம்.ஒட்டி விட்டு நெய்வேலியில் 50 ஆயிரத்திற்கும் மேல் மக்களை திரட்டி கர்நாடகத்திற்கு மின்சாரத்தை கொடுக்காதே என போராட்டம் செய்யப்போகிறோம்.காஷ்மீரை பிரித்து கொடு இல்லை எனில் எங்கள் மண்ணான கச்சதீவை எங்களிடம் கொடுத்து விடுங்கள்.
மத்திய அரசின் நதிநீர் நடுவர் மன்றமும்,உச்சநீதிமன்றமும் தன் தீர்ப்பை சொன்னாலும் ,கேரள,கர்நாடக,மாநிலங்கள் மதிப்பதில்லை ஏன்? கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் அவர்களுக்கு எதிராக தி.மு.க செயல் பட்டதுண்டா? கேட்டால் கடிதம் எழுதுகிறேன் என்கிறார் முதல்வர் கருணாநிதி.மீனவர் பிரச்சனையா ?மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் ,முல்லைபெரியாறு பிரச்சனையா? கடிதம் எழுதியிருக்கிறேன் காவிரிநீர் பிரச்சனையா?கடிதம் எழுதியிருக்கிறேன் ,இலங்கை தமிழர்கள் பிரச்சனையா?கடிதம் எழுதியிருக்கிறேன்,இவர் என்ன தபால் நிலையத்திலா வேலை செய்கிறார்.இவர்கள் அரசு தான் நாடு முழுவதும் தொலைபேசியில் 50 பைசாவிற்கு பேசலாம் என திட்டம் போட்டது,ஆனால் இவர் இன்னும் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.
மீண்டும் தி.மு.க ,காங்கிரசுடன் கைகோர்த்து நிற்கிறது.இதற்கு வேறு காரணம் ஏதும் இல்லை.கூட்டணி சேராவிட்டால் ஸ்பெக்டரம் ஊழலில் தன் மனைவி ராஜாத்தியும்,மகள் கனிமொழியும் கைதாகி விடுவார்கள் என்ற பயம் தான்,தி.மு.க -காங்கிரஸ் கூட்டணி கெட்டி கூட்டணி இல்லை பெட்டி கூட்டணி.
இலவசங்களை அள்ளி தருகிறோம் என கூறும் திமுக அரசால் தமிழக அரசு 1 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? 1ரூபாய்க்கு அரிசி தருகிறோம் என கூறும் தி.மு.க அரசை மேடை போட்டு பாராட்டலாம்,அதே போல் விலைவாசி உயர்வு,மின்சார பற்றாக்குறை என அதே போல் மேடை போட்டு திட்டலாமா.
தற்போது ஊடகங்களிலும் செய்திதாள்களிலும் பார்த்திருப்பீர்கள் ! லிபியா ,எகிப்து போன்ற நாடுகளில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து புரட்சி வெடித்தது என்று காரணம் என்ன என்று கேட்டால் ஒரே அரசு 30 ஆண்டு காலம் ஆட்சி செய்து வருவதால் அங்கு மக்கள் போராடி வருகிறார்கள்.அதை விட கொடுமையான வாரிசு அரசியல் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.60 ஆண்டுகளாக இந்தியாவில் வாரிசு அரசியல் செய்யும் காங்கிரஸ் ,அதே போல் தமிழ்நாட்டில் தமிழ்,தமிழ் என பேசும் கருணாநிதியின் தி.மு.க தனக்கு அடுத்து ஸ்டாலின் ,அழகிரி,கனிமொழி,அவர்களுக்கடுத்து பேரன்கள் உதயநிதி ஸ்டாலின் ,தயாநிதி அழகிரி,என வாரிசு அரசியல் செய்யும் திமுக கூட்டணியை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும்.
தமிழ்நாட்டை ஆண்ட எம்.ஜி.ஆர் போல் கருணாநிதிக்கு தமிழக மக்கள் மீது அக்கரை இல்லை.ஓட்டுக்கு பணம் கொண்டு வரும் தி.மு.க காரர்களிடம் கேள்,நண்பா இந்த பணம் எப்படி வந்தது?யாருடையது அப்பன் வீட்டு பணம்? உன் தலைவர் கருணாநிதியும்,சோனியா அம்மையாரும் அவர்களுடைய சொத்தை விற்று கொடுத்த பணமா?என கேள் அவை எல்லாம் நம்முடைய பணம்,ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாய் செலவழித்து தி.மு.க கூட்டணி ஜெயிக்க நினைக்கிறது,ஏன் இவ்வளவு செலவு செய்கிறது.ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாய் செலவழித்தால் 1000 கோடி ரூபாய் ஊழல் செய்து சம்பாதித்து கொள்ளலாம் என்ற தைரியம் .
இன்னும் சில நாட்களில் தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து தெரிந்து விடும்.நானும் ஆவலுடன் இருக்கிறேன்.அவர்கள் தமிழகத்தில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் தோற்கடிக்க பட வேண்டும்.அது நடக்க வேண்டுமென்றால் அதனை எதிர்த்து போட்டியிடும் அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள். தமிழ் சொந்தங்களே நாம் நலம் காக்க தி.மு.க கூட்டணியை வீழ்த்த வேண்டும்.அவ்வாறு வீழ்த்தும் போது தமிழன் உலகளவில் தன்னுடைய தன் மானத்தை நிலை நிறுத்த முடியும் என பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
05 Jul 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
புத்தமத தலைவர் தலாய் லாமா 40 ஆண்டுகள் வாழ விருப்பம்
05 Jul 2025தர்மசாலா : சீனாவின் புத்தமத தலைவர் தலாய் லாமா இன்னும் 40 ஆணடுகளுக்கு மேல் வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
கன்னடம் குறித்து கருத்து தெரிவிக்க கமலுக்கு தடை
05 Jul 2025பெங்களூரு, கன்னட மொழி குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் கமலுக்கு பெங்களூரு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.