எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சின்னமனூர்,மார்ச்.1 - தமிழகத்தில் ஆட்சி செய்து தி.மு.க கூட்டணியை தோற்கடித்து நாட்டை விட்டு விரட்ட வேண்டும்.அதற்கு மக்கள் அனைவரும் அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள் என நாம் தமிழர் இயக்கத்தலைவர் நடிகர் சீமான் பேசினார்.தேனி மாவட்டம் சின்னமனூரில் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக பொது கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு சீமான் பேசுகையில்: முல்லைபெரியாறு அணையில் என் இனம் இழந்து விட்ட உரிமையை மீட்டெடுக்க வேண்டும்.ஐந்து முறை நாட்டை ஆண்ட தமிழக தற்போதைய முதல்வர் ஏன் இதை பற்றி அக்கறை கொள்ள வில்லை.உச்ச நீதி மன்ற தீர்ப்பை மீறி புதிய அணை கட்டுவோம் என கூறும் கேரள அரசை பார்த்து வேடிக்கை பார்ப்பது தான் தி.மு.க கூட்டணியின் சாதனையா? இடுக்கி மாவட்டம் தமிழ்நாட்டிலிருந்து தாரை வார்த்து கொடுக்கப்பட்டது. பெரியாறுஅணை தமிழர்களுடையது அதை யாராலும் பிடுங்க முடியாது.அந்த அணை தன் மானமுள்ள தமிழர் இனத்தால் கட்டப்பட்டது.இந்த அணை வெள்ளையரான பென்னிக்குக்கால் அவர் சொத்தை விற்று கட்டப்பட்டது.ஒரு வெள்ளைகாரனுக்கு உள்ள அக்கரை கூட கருணாநிதிக்கு இல்லையே.ஐந்து முறை முதல்வர் என மார்தட்டி சொல்லும் தி.மு.க அரசு எத்தனை அணை கட்டியுள்ளது.காவிரி நீர் பிரச்சனை தி.மு.க கூட்டணியால் தீர்க்கப்பட்டதா தவித்த வாய்க்கு தண்ணீர் தர மறுக்கிறது.கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாட்டிலுள்ள சிதம்பரம் கோவிலில் சாமி கும்பிட வருகிறார் ஏன் என்று கேட்டால் கர்நாடகத்தில் நல்ல மழை பெய்ய வேண்டுமாம் ,ஏன் அதே மழை தமிழகத்தில் பெய்தால் நாங்களே விவசாயம் செய்து கொள்வோமே.உங்கள் கர்நாடகத்தில் மழை பெய்து அணை நிரம்பி எங்களுக்கு தர வேண்டும் என்பது அவசியமில்லையே.தி.மு.க கூட்டணி அரசே நாங்களே காவிரிநீர் தேவையில்லை என சுவரொட்டிகள் அடித்து ஒட்டப்போகிறோம்.ஒட்டி விட்டு நெய்வேலியில் 50 ஆயிரத்திற்கும் மேல் மக்களை திரட்டி கர்நாடகத்திற்கு மின்சாரத்தை கொடுக்காதே என போராட்டம் செய்யப்போகிறோம்.காஷ்மீரை பிரித்து கொடு இல்லை எனில் எங்கள் மண்ணான கச்சதீவை எங்களிடம் கொடுத்து விடுங்கள்.
மத்திய அரசின் நதிநீர் நடுவர் மன்றமும்,உச்சநீதிமன்றமும் தன் தீர்ப்பை சொன்னாலும் ,கேரள,கர்நாடக,மாநிலங்கள் மதிப்பதில்லை ஏன்? கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் அவர்களுக்கு எதிராக தி.மு.க செயல் பட்டதுண்டா? கேட்டால் கடிதம் எழுதுகிறேன் என்கிறார் முதல்வர் கருணாநிதி.மீனவர் பிரச்சனையா ?மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன் ,முல்லைபெரியாறு பிரச்சனையா? கடிதம் எழுதியிருக்கிறேன் காவிரிநீர் பிரச்சனையா?கடிதம் எழுதியிருக்கிறேன் ,இலங்கை தமிழர்கள் பிரச்சனையா?கடிதம் எழுதியிருக்கிறேன்,இவர் என்ன தபால் நிலையத்திலா வேலை செய்கிறார்.இவர்கள் அரசு தான் நாடு முழுவதும் தொலைபேசியில் 50 பைசாவிற்கு பேசலாம் என திட்டம் போட்டது,ஆனால் இவர் இன்னும் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்.
மீண்டும் தி.மு.க ,காங்கிரசுடன் கைகோர்த்து நிற்கிறது.இதற்கு வேறு காரணம் ஏதும் இல்லை.கூட்டணி சேராவிட்டால் ஸ்பெக்டரம் ஊழலில் தன் மனைவி ராஜாத்தியும்,மகள் கனிமொழியும் கைதாகி விடுவார்கள் என்ற பயம் தான்,தி.மு.க -காங்கிரஸ் கூட்டணி கெட்டி கூட்டணி இல்லை பெட்டி கூட்டணி.
இலவசங்களை அள்ளி தருகிறோம் என கூறும் திமுக அரசால் தமிழக அரசு 1 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? 1ரூபாய்க்கு அரிசி தருகிறோம் என கூறும் தி.மு.க அரசை மேடை போட்டு பாராட்டலாம்,அதே போல் விலைவாசி உயர்வு,மின்சார பற்றாக்குறை என அதே போல் மேடை போட்டு திட்டலாமா.
தற்போது ஊடகங்களிலும் செய்திதாள்களிலும் பார்த்திருப்பீர்கள் ! லிபியா ,எகிப்து போன்ற நாடுகளில் சர்வாதிகார ஆட்சியை எதிர்த்து புரட்சி வெடித்தது என்று காரணம் என்ன என்று கேட்டால் ஒரே அரசு 30 ஆண்டு காலம் ஆட்சி செய்து வருவதால் அங்கு மக்கள் போராடி வருகிறார்கள்.அதை விட கொடுமையான வாரிசு அரசியல் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.60 ஆண்டுகளாக இந்தியாவில் வாரிசு அரசியல் செய்யும் காங்கிரஸ் ,அதே போல் தமிழ்நாட்டில் தமிழ்,தமிழ் என பேசும் கருணாநிதியின் தி.மு.க தனக்கு அடுத்து ஸ்டாலின் ,அழகிரி,கனிமொழி,அவர்களுக்கடுத்து பேரன்கள் உதயநிதி ஸ்டாலின் ,தயாநிதி அழகிரி,என வாரிசு அரசியல் செய்யும் திமுக கூட்டணியை நாட்டைவிட்டு விரட்ட வேண்டும்.
தமிழ்நாட்டை ஆண்ட எம்.ஜி.ஆர் போல் கருணாநிதிக்கு தமிழக மக்கள் மீது அக்கரை இல்லை.ஓட்டுக்கு பணம் கொண்டு வரும் தி.மு.க காரர்களிடம் கேள்,நண்பா இந்த பணம் எப்படி வந்தது?யாருடையது அப்பன் வீட்டு பணம்? உன் தலைவர் கருணாநிதியும்,சோனியா அம்மையாரும் அவர்களுடைய சொத்தை விற்று கொடுத்த பணமா?என கேள் அவை எல்லாம் நம்முடைய பணம்,ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாய் செலவழித்து தி.மு.க கூட்டணி ஜெயிக்க நினைக்கிறது,ஏன் இவ்வளவு செலவு செய்கிறது.ஒரு தொகுதிக்கு 100 கோடி ரூபாய் செலவழித்தால் 1000 கோடி ரூபாய் ஊழல் செய்து சம்பாதித்து கொள்ளலாம் என்ற தைரியம் .
இன்னும் சில நாட்களில் தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து தெரிந்து விடும்.நானும் ஆவலுடன் இருக்கிறேன்.அவர்கள் தமிழகத்தில் உள்ள அத்தனை தொகுதிகளிலும் தோற்கடிக்க பட வேண்டும்.அது நடக்க வேண்டுமென்றால் அதனை எதிர்த்து போட்டியிடும் அ.தி.மு.க கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள். தமிழ் சொந்தங்களே நாம் நலம் காக்க தி.மு.க கூட்டணியை வீழ்த்த வேண்டும்.அவ்வாறு வீழ்த்தும் போது தமிழன் உலகளவில் தன்னுடைய தன் மானத்தை நிலை நிறுத்த முடியும் என பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் : மத்திய அமைச்சர் தகவல்
19 Sep 2025புதுடெல்லி : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.