எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச். 2- தருமபுரி, சேலம் கோட்டப் போக்குவரத்து தொழிலாளர்கள் 1300 பேருக்கு பணி நிரந்தர ஆணை வழங்க வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தருமபுரிசேலம் கோட்டத்திற்கு 2007ஆம் ஆண்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இருந்து தமிடிநநாடு அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான நேர்காணலுக்குத் தகுந்த ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோர் பணிக்கப்பட்டனர். வண்ணக் கனவுகளுடன் தங்களின் படிப்பு, திறமையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையோடு
நேர்காணலுக்குச் சென்றவர்களுக்குப் பேரிடியாக ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்குச் சில இலட்சங்கள் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் பணத்தைச் சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சிப் புள்ளியிடம் கட்டி இரசீது காண்பித்தால் வேலை உறுதி என்றும் அவர்களிடம் சொல்லப்பட்டது.
வறட்சியினால் பின்தங்கிய மாவட்டத்தில் வறுமைக்கோட்டில் வாழ்பவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்றனர். இருப்பினும் எதிர்காலம் கருதி தங்களின் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தர்களாக நவீன வேதாளமான ஆளும் தரப்பை நிறைவு செய்ய தத்தம் குடும்பத்தினரிடம் பணம் கேட்டு சண்டையிட்டும், பலர் வட்டிக்குப் பணம் வாங்கியும், தங்களுக்குச் சொந்தமான வீட்டையும், நிலத்தையும் விற்றும், சிலர் தங்கள் மனைவியின் நகை, தாலியை விற்றும் ஒருவழியாக அதிகார வர்க்கத்தினரிடம் பணத்தைக் கட்டினர்.
2007ஆம் ஆண்டு 1300 பேர் வேலைக்குச் சேர்வதற்கு அரசாணையும் 240 பணி நாட்களுக்குப் பின்னர் நிரந்தரம் செய்யப்படும் என்ற உத்தரவாதத்துடன் பணியில் சேர்ந்து ஆண்டுகள் நான்கு உருண்டோடின. பல 240 நாட்கள் பணி செய்த பின்பும் மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் இறுதி நாட்கள் எண்ணப்படுகின்ற இந்த நாள்வரை அவர்கள் பணி
நிரந்தரம் செய்யப்படாமல் ஏமாற்றப்படுகின்றனர். 01 மார்ச் 2011
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அந்தத் தொழிலாளர்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன் இல்லை. மாறாக, முன்னின்று கேட்பவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பணி nullக்கம் செய்வதும், இடமாற்றம் செய்வதுமாக அலைகழிக்கப்பட்டனர். இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அத்தொழிலாளர்கள் ஒட்டுமொத்தமாக வாழ்வா சாவா என்ற நிலையில் 25.02.2011 வெள்ளிக்கிழமை
தொடங்கி கடந்த ஐந்து நாட்களாகத் தம் குடும்பத்தினருடன் தொடர் உண்ணாவிரத அறவழிப் போராட்டம் இருந்து வருகின்றனர். இதற்கு அனுமதி இல்லை என்று காவல்துறை மிரட்டுகிறது. ஒலிபெருக்கி அனுமதி வழங்காமல் அவமதிக்கப்படுகின்றனர். ஜனநாயக நாட்டில் தான் உள்ளோமா அல்லது சர்வாதிகார நாட்டில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா
என்று எண்ணும் நிலையில் தருமபுரி அரசு போக்குவரத்துத் தலைமை அலுவலகத்தின் எதிரே சாலை ஓரத்தில் சாமியானா பந்தலிட்டு நியாயம் வேண்டி தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் மொரப்nullர் இரமேஷ், நண்டுகாரம்பட்டி சண்முகம், ஊத்தங்கரை வடிவேல் ஆகியோர் நேற்று முன்தினம் மயங்கி விழுந்து அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை அரசுத் தரப்பில் போராடி வரும் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த யாரும் முன்வரவில்லை. அரசின் இந்த அலட்சியப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். வேலை வழங்கியதற்கு கையூட்டு இலஞ்சம் வாங்கியும் பணி நிரந்தரம் வழங்காதது மன்னிக்க முடியாத மாபெரும் தவறு. இதுதான் அரசு போக்குவரத்துத் துறை இயங்கும் இலட்சணம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போன்று இந்த அரசின் சார்பில் இதுவரை கையூட்டு லஞ்சம் பெற்று பணிகள் வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கு இருக்கிறது. விரைவில் ஆட்சி மாறும்; அப்போது காட்சிகளும் மாறும். இதுபோன்ற லஞ்சம் வாங்கி மோசடி செய்தவர்கள் எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். எனவே, தாமதம் இன்றி தருமபுரிசேலம் கோட்டப் போக்குவரத்துப் பணியாளர்கள் 1300 பேருக்கும் பணி நிரந்தரம் வழங்கி ஆணை பிறப்பித்திட வேண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
26 Jan 2026சென்னை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் இன்று (ஜன. 27) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –27-01-2026
26 Jan 2026 -
டெல்லி குடியரசு தின விழாவில் 900 கி.மீ. வேகத்தில் பறந்து போர் விமானங்கள் சாகசம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு மணிக்கு 900 கி.மீ. வேகத்தில் பறந்து இந்திய போர் விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன.
-
தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் டெல்லியில் ஜல்லிக்கட்டு காளையுடன் அணிவகுத்த தமிழ்நாடு அரசின் வாகனம்
26 Jan 2026புதுடெல்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி கடமை பாதையில் ஜல்லிக்கட்டு காளையுடன் தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும்
-
77-வது குடியரசு தின விழா: சென்னையில் தேசியக்கொடியை ஏற்றினார்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி
26 Jan 2026சென்னை, 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் 5-வது முறையாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றினார்.
-
நாடு முழுவதும் 77-வது குடியரசு தின விழா கோலாகலம்: தேசியக்கொடியை ஏற்றினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Jan 2026புதுடெல்லி, நாட்டின் 77-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
-
77- வது குடியரசு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
26 Jan 2026புதுடெல்லி, 77- வது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபை கூட்டம்
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
-
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
26 Jan 2026புதுடெல்லி, டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள போர் வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
-
வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம்: தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Jan 2026தஞ்சாவூர், தேர்தல் பணியாற்ற நாம் உறுதியேற்போம் என்று தஞ்சையில் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வரும் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம் என்றும் அவர் தெ
-
இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 15.65 லட்சம் பேர் விண்ணப்பம்: தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
26 Jan 2026சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழ்நாட்டில் 15 லட்சத்து 65 ஆயிரத்து 454 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
-
இந்திய மக்களாட்சி வலுப்பெற அனைவரும் உறுதியேற்போம் இ.பி.எஸ். குடியரசு தின வாழ்த்து
26 Jan 2026சென்னை, இந்திய மக்களாட்சி வலுப்பெறும் வகையில் செயல்பட இந்நாளில் உறுதியேற்போம் என 77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க.
-
பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின குடியரசு தின விழா வாழ்த்து
26 Jan 2026சென்னை, பன்முக இந்தியாவைக் கொண்டாடுவோம் என்று குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திருப்பூர் கலிமுல்லாவுக்கு கோட்டை அமீர் மதநல்லிணக்க பதக்கம்: தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
26 Jan 2026சென்னை, குடியரசு நாளையொட்டி பல்வேறு பிரிவுகளில் வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி முதல்வர் ஸ்டாலின் கவுரவித்தார்.
-
குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு 3-வது வரிசையில் சீட் ஒதுக்கீடு
26 Jan 2026டெல்லி, குடியரசு நாள் விழாவில் ராகுலுக்கு பின்வரிசை அமரவைக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
அரசியலமைப்பின் மாண்பை காக்க உறுதியேற்போம்: விஜய்
26 Jan 2026சென்னை, அரசியலமைப்பின் மாண்பைக் காக்க இந்நாளில் உறுதியேற்போம் என்று த.வெ.க. தலைவர் விஜய், குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்தை கடந்தது
26 Jan 2026சென்னை, தங்கம் விலை மேலும் அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையானது.
-
இனி பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் புதிய மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
26 Jan 2026புதுடெல்லி, பத்திரப்பதிவின்போது அசல் ஆவணங்களை தாக்கல் செய்யும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
கவர்னரின் தேநீர் விருந்து: தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு
26 Jan 2026சென்னை, குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவியை அறிவித்தார் முதல்வர்
26 Jan 2026சென்னை, கள்ளக்குறிச்சியல் மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பத்துக்கு நிதி உதவியை முதல்வர் அறிவித்தார்.
-
சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது: ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு
26 Jan 2026டெல்லி, குடியரசு தின விழாவை முன்னிட்டு விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா\ விருதை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வழங்கி கவுரவித்தார்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
26 Jan 2026- கோவை பாலதண்டாயுதபாணி சந்திர பிரவையில் புறப்பாடு.
- திருப்பரங்குன்றம் ஆண்டவர் சின்ன வைரத்தேர்.
- திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனம்.
-
இன்றைய நாள் எப்படி?
26 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
26 Jan 2026



