எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,ஜூலை - 21 - மாணவர்களுக்கு இலவச லேப் டாப் அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அ.தி.மு.க. மாணவர் அணி நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கினங்க அ.தி.முக. மாணவரனி சார்பாக நடைபெற்ற மாவட்ட மாணவரணி செயலாளர்கள் ஆலோசனை கூட்ட ம் மாணவரணி மாநில செயலாளர் மற்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்றது.
அ.தி.மு.க. மாணவரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
உலகத்தை ஆளுகின்ற ஆற்றல் கொண்டிருக்கின்ற இந்திய திருநாட்டின் வழிகாட்டி, வாழும் மனித தெய்வம் மாணவ சமுதாயத்தின் காவல் தெய்வம், பள்ளி, கல்லுரிகள் பல தொடங்கி மாணவ சமுதாயத்தின் கல்விக்கண் திறந்திட்ட பெண் பெருந்தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சர் அரியணையில் அமர்த்தி ஜனநாயகத்தை மலரச் செய்து பணநாயகத்தை வீழ்த்திட்ட தமிழக வாக்காள பெருமக்களுக்கு அ.தி.மு.க. மாணவரணி நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிக்கின்றது.
தங்களின் குடும்ப வருமானத்தை மட்டுமே கொள்கையாக கொண்டு இலவச திட்டங்கள் என்ற பெயரில் நாட்டு வருமானத்தை கொள்ளையடித்த அரசியல் வியாபாரி கருணாநிதியின் சூழச்சிகளையெல்லாம் தூள் துளாக தகர்த்தெறிந்து, அறிவாற்றலில் வல்லரசு நாடுகளுக்கும் வழி காட்டுகின்ற வகையிலே அன்னை தமிழகத்தின் மாணவ சமுதாயத்தை உருவாக்கிட உலகத்திற்கே முன்னோடி திட்டமாக பள்ளி, கல்லுரி மாணவ, மாணவியர்க்கு இலவச லேப்டாப் (மடிகணினி) வழங்குகின்ற உன்னத திட்டத்தினை அறிவித்து அகிலத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திட்ட ஆற்றலின் பிறப்பிடமே! தங்களின் பொற்பாதங்கள் பணிந்து வணங்கி கோடான கோடி நன்றி மலர்களை மாணவரணி காணிக்கையாக்குகின்றது. கடந்த கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்ற திட்டங்களை மட்டுமே அறிவித்து தமிழகத்தை சீரழித்து வந்த திருக்குவளை தீயசக்தி கருணாநிதி ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை பாழ்படுத்திடும் வகையிலே சமச்சீர் கல்வி என்று கருணாநிதியின் புகழை மட்டுமே பாடுகின்ற, பிழைகளை மட்டுமே பாடமாக கொண்டிருக்கின்ற, கருணாநிதியின் கற்பனை கல்வியை மாணவ சமுதாயத்திடம் புகுத்திட கருணாநிதி செய்திட்ட சூழ்ச்சிகளையெல்லாம் தன் மதிநுட்பத்தாலும், தொலை நோக்கு சிந்தனையாலும், ஆழ்ந்த அறிவாற்றலாலும், முறியடித்து உலக தரத்திலான உன்னத கல்வியை, அகிலம் போற்றும் அற்புத கல்வியை, தரணி போற்றும் தரமான கல்வியை தாய் தமிழகத்தின் மாணவ சமுதாயத்திற்கு வழங்கிட வேண்டுமென்று வீர சபதமேற்று தியாக வேள்வி நடத்திக்கொண்டிருக்கின்ற தெய்வத் தலைவியே! சமச்சீர் கல்வியை சீர்திருத்திட சட்ட திருத்தம் செய்து ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திட்ட தங்களின் தன்னலமற்ற தலைமையின் பின்னால் அலைகடலென ஆர்ப்பரித்து அணிவகுத்து நிற்கின்றது ஒட்டு மொத்த மாணவ சமுதாயம். தங்களின் மேலான ஆணையை பெற்று கழக மாணவரணியின் சார்பாக பள்ளிகள் தோறும் சென்று வாயிற் கூட்டங்கள் நடத்தி மாணவ மாணவியர்களை சந்தித்து, கருணாநிதியின் புகழ்பாடும், பிழைகளை மட்டுமே பாடமாக கொண்டிருக்கின்ற கருணாநிதியின் கற்பனை கல்வியான சமச்சீர் கல்வியை தோலுரித்து காட்டிட, உலக தரத்திலான உன்னத கல்வியை, அகிலம் போற்றும் அற்புத கல்வியை, தரணி போற்றும் தரமான கல்வியை, தாய் தமிழகத்தின் மாணவ சமுதாயத்திற்கு கிடைத்திட வீரசபதம் ஏற்று தியாக வேள்வி நடத்தும் ஜெயலலிதாவின் ஆழ்ந்த அறிவாற்றலையும், மதிநுட்பம் கொண்ட தொலை நோக்கு சிந்தனையுடன் மேற்கொண்டிருக்கின்ற போர்கால நடவடிக்கைகளின் நியாயத்தை, கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்களின் மூலமாக மாணவ சமுதாயத்திடம் எடுத்து சென்றிட கழக மாணவரணி உறுதி ஏற்கின்றது.
கிராமப்புற மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சார்ந்த ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு தரமான கல்வியின் வாயிலாக ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்துடனும் உயர்கல்வி யாருக்கும் எட்டாக்கனியாகி விடக்கூடாது என்ற உயரிய இலட்சியத்துடனும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் மாவட்டம் நெல்மேனி, துத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம், தர்மபுரி மாவட்டம் அரூர், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டம் சாத்துர், நாகபட்டினம் மாவட்டம் வேதாரண்யம், வேலுர் மாவட்டம் திருப்பத்துர் மற்றும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைnullண்டி ஆகிய 9 இடங்களில் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் வகுப்புகளை தொடங்கி வைத்து, மேலும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகிய இரு இடங்களிலும் கலை மற்றும் அறிவியல் கல்லுரிகள் உடனே தொடங்க ஆணையிட்டு உலக தரத்திலான உயர்கல்வியை அன்னை தமிழகத்தின் மாணவ சமுதாயம் பெற்றிட வழிவகுத்து, மாணவ சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திட்ட ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் கோடான கோடி நன்றி மலர்களை மாணவரணி காணிக்கையாக்குகின்றது.
இலவச சைக்கிள், இலவச பாடநுல், இலவச சீருடை, இலவச காலணி போன்ற பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பொன்னான திட்டங்களின் வரிசையிலே மாணவ மாணவியர்கள் தங்கள் வேலைவாய்ப்பிற்கான பதிவினை தாங்கள் படித்த பள்ளிகளிலே ஆன் லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்ற வரலாற்று புரட்சியை ஏற்படுத்திய திட்டத்தை அமுல் படுத்தி, நிகழ் கல்வியாண்டிலே 27.2 இலட்சம் மாணவ மாணவியர்களுக்கு சுமார் ரூ.303.84 கோடி செலவில் இலவச பேருந்து பயண வசதி ஏற்படுத்தி கொடுத்து மாணவ சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஜெயலலிதாவிற்கு கழக மாணவரணி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்த சிங்கப்பூர் மந்திரி
14 Jul 2025பழனி : பழனி முருகன் கோவிலில் ஹெலிகாப்டரில் வந்து சாமி தரிசனம் செய்தார் சிங்கப்பூர் மந்திரி சண்முகம்.
-
நான் துரோகியா? - மல்லை சத்யா ஆவேசம்
14 Jul 2025சென்னை : ம.தி.மு.க.விற்கு நான் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன் நான் துரோகி அல்ல என்று மல்லை சத்யா கூறினார்.
-
ஆய்வுக்கு பயந்து விருதுநகரில் 200-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடல்
14 Jul 2025விருதுநகர் : விருதுநகரில் நேற்று 200-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டன.
-
ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
14 Jul 2025காபுல் : ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை; தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
14 Jul 2025புதுடெல்லி : பாஸ்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.
-
நடத்தை விதிகளை மீறல்: சிராஜுக்கு ஐ.சி.சி.அபராதம்
14 Jul 2025லார்ட்ஸ் : 2-வது இன்னிங்சின் போது பென் டக்கெட் விக்கெட்டை வீழ்த்திய சிராஜ், ஆக்ரோஷமாக கொண்டாடினார். டக்கெட் முகத்திற்கு முன்பு வந்து முறைத்தப்படி சென்றார்.
-
காசாவில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழப்பு
14 Jul 2025காசா முனை : காசாவில் நடந்த ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் பலியாகினர். இதற்கு தொழில்நுட்ப தவறு என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.
-
சாய்னா நேவாலின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது
14 Jul 2025ஐதராபாத் : 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருவதாகவும், கணவர் காஷ்யப்பை பிரிவதாகவும் சாய்னா நேவால் அறிவித்துள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதி
14 Jul 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
உ.பி.யில் கனமழைக்கு 14 பேர் பலி
14 Jul 2025லக்னோ : உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழைக்கு 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு-2 பேர் பலி
14 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் மத வழிபாட்டு தலத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இந்திய அணி திணறல்
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. களத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் உள்ளனர்.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு
14 Jul 2025சென்னை : காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வரத்து காரணமாக கடந்த 5ஆம் தேதி நடப்பு ஆண்டி 2-வது மு
-
இங்கிலாந்தில் விமானம் தரையில் விழுந்து விபத்து
14 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
-
இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்
14 Jul 2025ஜகார்த்தா : இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.
-
இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா பதிலளிக்க உத்தரவு
14 Jul 2025சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கில் நடிகை வனிதா விஜயகுமார் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள்: 'உடன்பிறப்பே வா' நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
14 Jul 2025சென்னை : தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துங்கள் என்று நேற்று நடைபெற்ற 'உடன்பிறப்பே வா' நிகழ்வில் 3 மாவட்ட தி.மு.க.
-
மதுரையில் செப். 4-ந் தேதி மாநாடு: ஓ.பி.எஸ். தகவல்
14 Jul 2025சென்னை : மதுரையில் வரும் செப்., 4ம் தேதி நடத்தப்படும் மாநாட்டில், எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப்போகிறோம் என்பது குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதாக ஓ.பி.எஸ
-
நடிகை சரோஜா தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
14 Jul 2025சென்னை : தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சரோஜா தேவி மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று கூடுதல் டோக்கன்கள்
14 Jul 2025சென்னை : பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மானாமதுரைக்கு புதிய டி.எஸ்.பி. நியமனம்
14 Jul 2025சிவகங்கை : மானாமுதுரைககு புதிய டி.எஸ்.பி. நியமனம் செய்யப்பட்டார்.
-
தமிழக அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்ல புதிய செய்தி தொடர்பாளர்களாக 4 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்
14 Jul 2025சென்னை : தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் மற்றும் தேவையான இனங்களில் செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், ப
-
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது
14 Jul 2025சென்னை : தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 90,160 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
-
விருந்து நிகழ்ச்சியில் சாம்பியன்கள்
14 Jul 2025கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடினர்.
-
விம்பிள்டன் டென்னிஸ்: முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் சின்னர்
14 Jul 2025லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் முதல் முறையாக சின்னர் சாம்பியன் பட்டம் வென்றார்.
ஆண்கள் ஒற்றையர்...