எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை,ஜூலை - 21 - மாணவர்களுக்கு இலவச லேப் டாப் அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அ.தி.மு.க. மாணவர் அணி நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கினங்க அ.தி.முக. மாணவரனி சார்பாக நடைபெற்ற மாவட்ட மாணவரணி செயலாளர்கள் ஆலோசனை கூட்ட ம் மாணவரணி மாநில செயலாளர் மற்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்றது.
அ.தி.மு.க. மாணவரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
உலகத்தை ஆளுகின்ற ஆற்றல் கொண்டிருக்கின்ற இந்திய திருநாட்டின் வழிகாட்டி, வாழும் மனித தெய்வம் மாணவ சமுதாயத்தின் காவல் தெய்வம், பள்ளி, கல்லுரிகள் பல தொடங்கி மாணவ சமுதாயத்தின் கல்விக்கண் திறந்திட்ட பெண் பெருந்தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சர் அரியணையில் அமர்த்தி ஜனநாயகத்தை மலரச் செய்து பணநாயகத்தை வீழ்த்திட்ட தமிழக வாக்காள பெருமக்களுக்கு அ.தி.மு.க. மாணவரணி நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிக்கின்றது.
தங்களின் குடும்ப வருமானத்தை மட்டுமே கொள்கையாக கொண்டு இலவச திட்டங்கள் என்ற பெயரில் நாட்டு வருமானத்தை கொள்ளையடித்த அரசியல் வியாபாரி கருணாநிதியின் சூழச்சிகளையெல்லாம் தூள் துளாக தகர்த்தெறிந்து, அறிவாற்றலில் வல்லரசு நாடுகளுக்கும் வழி காட்டுகின்ற வகையிலே அன்னை தமிழகத்தின் மாணவ சமுதாயத்தை உருவாக்கிட உலகத்திற்கே முன்னோடி திட்டமாக பள்ளி, கல்லுரி மாணவ, மாணவியர்க்கு இலவச லேப்டாப் (மடிகணினி) வழங்குகின்ற உன்னத திட்டத்தினை அறிவித்து அகிலத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திட்ட ஆற்றலின் பிறப்பிடமே! தங்களின் பொற்பாதங்கள் பணிந்து வணங்கி கோடான கோடி நன்றி மலர்களை மாணவரணி காணிக்கையாக்குகின்றது. கடந்த கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்ற திட்டங்களை மட்டுமே அறிவித்து தமிழகத்தை சீரழித்து வந்த திருக்குவளை தீயசக்தி கருணாநிதி ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை பாழ்படுத்திடும் வகையிலே சமச்சீர் கல்வி என்று கருணாநிதியின் புகழை மட்டுமே பாடுகின்ற, பிழைகளை மட்டுமே பாடமாக கொண்டிருக்கின்ற, கருணாநிதியின் கற்பனை கல்வியை மாணவ சமுதாயத்திடம் புகுத்திட கருணாநிதி செய்திட்ட சூழ்ச்சிகளையெல்லாம் தன் மதிநுட்பத்தாலும், தொலை நோக்கு சிந்தனையாலும், ஆழ்ந்த அறிவாற்றலாலும், முறியடித்து உலக தரத்திலான உன்னத கல்வியை, அகிலம் போற்றும் அற்புத கல்வியை, தரணி போற்றும் தரமான கல்வியை தாய் தமிழகத்தின் மாணவ சமுதாயத்திற்கு வழங்கிட வேண்டுமென்று வீர சபதமேற்று தியாக வேள்வி நடத்திக்கொண்டிருக்கின்ற தெய்வத் தலைவியே! சமச்சீர் கல்வியை சீர்திருத்திட சட்ட திருத்தம் செய்து ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திட்ட தங்களின் தன்னலமற்ற தலைமையின் பின்னால் அலைகடலென ஆர்ப்பரித்து அணிவகுத்து நிற்கின்றது ஒட்டு மொத்த மாணவ சமுதாயம். தங்களின் மேலான ஆணையை பெற்று கழக மாணவரணியின் சார்பாக பள்ளிகள் தோறும் சென்று வாயிற் கூட்டங்கள் நடத்தி மாணவ மாணவியர்களை சந்தித்து, கருணாநிதியின் புகழ்பாடும், பிழைகளை மட்டுமே பாடமாக கொண்டிருக்கின்ற கருணாநிதியின் கற்பனை கல்வியான சமச்சீர் கல்வியை தோலுரித்து காட்டிட, உலக தரத்திலான உன்னத கல்வியை, அகிலம் போற்றும் அற்புத கல்வியை, தரணி போற்றும் தரமான கல்வியை, தாய் தமிழகத்தின் மாணவ சமுதாயத்திற்கு கிடைத்திட வீரசபதம் ஏற்று தியாக வேள்வி நடத்தும் ஜெயலலிதாவின் ஆழ்ந்த அறிவாற்றலையும், மதிநுட்பம் கொண்ட தொலை நோக்கு சிந்தனையுடன் மேற்கொண்டிருக்கின்ற போர்கால நடவடிக்கைகளின் நியாயத்தை, கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்களின் மூலமாக மாணவ சமுதாயத்திடம் எடுத்து சென்றிட கழக மாணவரணி உறுதி ஏற்கின்றது.
கிராமப்புற மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சார்ந்த ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு தரமான கல்வியின் வாயிலாக ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்துடனும் உயர்கல்வி யாருக்கும் எட்டாக்கனியாகி விடக்கூடாது என்ற உயரிய இலட்சியத்துடனும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் மாவட்டம் நெல்மேனி, துத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம், தர்மபுரி மாவட்டம் அரூர், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டம் சாத்துர், நாகபட்டினம் மாவட்டம் வேதாரண்யம், வேலுர் மாவட்டம் திருப்பத்துர் மற்றும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைnullண்டி ஆகிய 9 இடங்களில் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் வகுப்புகளை தொடங்கி வைத்து, மேலும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகிய இரு இடங்களிலும் கலை மற்றும் அறிவியல் கல்லுரிகள் உடனே தொடங்க ஆணையிட்டு உலக தரத்திலான உயர்கல்வியை அன்னை தமிழகத்தின் மாணவ சமுதாயம் பெற்றிட வழிவகுத்து, மாணவ சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திட்ட ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் கோடான கோடி நன்றி மலர்களை மாணவரணி காணிக்கையாக்குகின்றது.
இலவச சைக்கிள், இலவச பாடநுல், இலவச சீருடை, இலவச காலணி போன்ற பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பொன்னான திட்டங்களின் வரிசையிலே மாணவ மாணவியர்கள் தங்கள் வேலைவாய்ப்பிற்கான பதிவினை தாங்கள் படித்த பள்ளிகளிலே ஆன் லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்ற வரலாற்று புரட்சியை ஏற்படுத்திய திட்டத்தை அமுல் படுத்தி, நிகழ் கல்வியாண்டிலே 27.2 இலட்சம் மாணவ மாணவியர்களுக்கு சுமார் ரூ.303.84 கோடி செலவில் இலவச பேருந்து பயண வசதி ஏற்படுத்தி கொடுத்து மாணவ சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஜெயலலிதாவிற்கு கழக மாணவரணி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 7 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் : மத்திய அமைச்சர் தகவல்
19 Sep 2025புதுடெல்லி : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்..? அதிபர் ட்ரம்ப் விளக்கம்
19 Sep 2025லண்டன், இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன் என்று அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.
-
திண்டுக்கல் மாவட்டத்தில் மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பிக்கும் காலம் நிறைவு
19 Sep 2025திண்டுக்கல், திண்டுக்கலில் புதிய ரூட்களில் மினி பேருந்துகளை இயக்குவதற்கு விண்ணப்பங்கள் நிறைவு பெற்றது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை..!
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் எதிரிகளுக்கு நமது வலிமையை காட்டினோம்: ராஜ்நாத்சிங் பேச்சு
19 Sep 2025டெல்லி, ஆபரேஷன் சிந்தூரின்போது நமது பதிலடியின் வலிமையை எதிரிகளுக்கு காட்டினோம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.