எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஜூலை - 21 - மாணவர்களுக்கு இலவச லேப் டாப் அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அ.தி.மு.க. மாணவர் அணி நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.
முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கினங்க அ.தி.முக. மாணவரனி சார்பாக நடைபெற்ற மாவட்ட மாணவரணி செயலாளர்கள் ஆலோசனை கூட்ட ம் மாணவரணி மாநில செயலாளர் மற்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்றது.
அ.தி.மு.க. மாணவரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
உலகத்தை ஆளுகின்ற ஆற்றல் கொண்டிருக்கின்ற இந்திய திருநாட்டின் வழிகாட்டி, வாழும் மனித தெய்வம் மாணவ சமுதாயத்தின் காவல் தெய்வம், பள்ளி, கல்லுரிகள் பல தொடங்கி மாணவ சமுதாயத்தின் கல்விக்கண் திறந்திட்ட பெண் பெருந்தலைவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக தமிழகத்தின் முதலமைச்சர் அரியணையில் அமர்த்தி ஜனநாயகத்தை மலரச் செய்து பணநாயகத்தை வீழ்த்திட்ட தமிழக வாக்காள பெருமக்களுக்கு அ.தி.மு.க. மாணவரணி நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவிக்கின்றது.
தங்களின் குடும்ப வருமானத்தை மட்டுமே கொள்கையாக கொண்டு இலவச திட்டங்கள் என்ற பெயரில் நாட்டு வருமானத்தை கொள்ளையடித்த அரசியல் வியாபாரி கருணாநிதியின் சூழச்சிகளையெல்லாம் தூள் துளாக தகர்த்தெறிந்து, அறிவாற்றலில் வல்லரசு நாடுகளுக்கும் வழி காட்டுகின்ற வகையிலே அன்னை தமிழகத்தின் மாணவ சமுதாயத்தை உருவாக்கிட உலகத்திற்கே முன்னோடி திட்டமாக பள்ளி, கல்லுரி மாணவ, மாணவியர்க்கு இலவச லேப்டாப் (மடிகணினி) வழங்குகின்ற உன்னத திட்டத்தினை அறிவித்து அகிலத்தை ஆச்சர்யத்தில் ஆழ்த்திட்ட ஆற்றலின் பிறப்பிடமே! தங்களின் பொற்பாதங்கள் பணிந்து வணங்கி கோடான கோடி நன்றி மலர்களை மாணவரணி காணிக்கையாக்குகின்றது. கடந்த கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்ற திட்டங்களை மட்டுமே அறிவித்து தமிழகத்தை சீரழித்து வந்த திருக்குவளை தீயசக்தி கருணாநிதி ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை பாழ்படுத்திடும் வகையிலே சமச்சீர் கல்வி என்று கருணாநிதியின் புகழை மட்டுமே பாடுகின்ற, பிழைகளை மட்டுமே பாடமாக கொண்டிருக்கின்ற, கருணாநிதியின் கற்பனை கல்வியை மாணவ சமுதாயத்திடம் புகுத்திட கருணாநிதி செய்திட்ட சூழ்ச்சிகளையெல்லாம் தன் மதிநுட்பத்தாலும், தொலை நோக்கு சிந்தனையாலும், ஆழ்ந்த அறிவாற்றலாலும், முறியடித்து உலக தரத்திலான உன்னத கல்வியை, அகிலம் போற்றும் அற்புத கல்வியை, தரணி போற்றும் தரமான கல்வியை தாய் தமிழகத்தின் மாணவ சமுதாயத்திற்கு வழங்கிட வேண்டுமென்று வீர சபதமேற்று தியாக வேள்வி நடத்திக்கொண்டிருக்கின்ற தெய்வத் தலைவியே! சமச்சீர் கல்வியை சீர்திருத்திட சட்ட திருத்தம் செய்து ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திட்ட தங்களின் தன்னலமற்ற தலைமையின் பின்னால் அலைகடலென ஆர்ப்பரித்து அணிவகுத்து நிற்கின்றது ஒட்டு மொத்த மாணவ சமுதாயம். தங்களின் மேலான ஆணையை பெற்று கழக மாணவரணியின் சார்பாக பள்ளிகள் தோறும் சென்று வாயிற் கூட்டங்கள் நடத்தி மாணவ மாணவியர்களை சந்தித்து, கருணாநிதியின் புகழ்பாடும், பிழைகளை மட்டுமே பாடமாக கொண்டிருக்கின்ற கருணாநிதியின் கற்பனை கல்வியான சமச்சீர் கல்வியை தோலுரித்து காட்டிட, உலக தரத்திலான உன்னத கல்வியை, அகிலம் போற்றும் அற்புத கல்வியை, தரணி போற்றும் தரமான கல்வியை, தாய் தமிழகத்தின் மாணவ சமுதாயத்திற்கு கிடைத்திட வீரசபதம் ஏற்று தியாக வேள்வி நடத்தும் ஜெயலலிதாவின் ஆழ்ந்த அறிவாற்றலையும், மதிநுட்பம் கொண்ட தொலை நோக்கு சிந்தனையுடன் மேற்கொண்டிருக்கின்ற போர்கால நடவடிக்கைகளின் நியாயத்தை, கல்வி விழிப்புணர்வு பிரச்சாரங்களின் மூலமாக மாணவ சமுதாயத்திடம் எடுத்து சென்றிட கழக மாணவரணி உறுதி ஏற்கின்றது.
கிராமப்புற மற்றும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பங்களை சார்ந்த ஏழை, எளிய, நடுத்தர மாணவர்களுக்கு தரமான கல்வியின் வாயிலாக ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டுமென்ற உயர்ந்த நோக்கத்துடனும் உயர்கல்வி யாருக்கும் எட்டாக்கனியாகி விடக்கூடாது என்ற உயரிய இலட்சியத்துடனும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் மாவட்டம் நெல்மேனி, துத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம், தர்மபுரி மாவட்டம் அரூர், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி, விருதுநகர் மாவட்டம் சாத்துர், நாகபட்டினம் மாவட்டம் வேதாரண்யம், வேலுர் மாவட்டம் திருப்பத்துர் மற்றும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைnullண்டி ஆகிய 9 இடங்களில் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் வகுப்புகளை தொடங்கி வைத்து, மேலும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஆகிய இரு இடங்களிலும் கலை மற்றும் அறிவியல் கல்லுரிகள் உடனே தொடங்க ஆணையிட்டு உலக தரத்திலான உயர்கல்வியை அன்னை தமிழகத்தின் மாணவ சமுதாயம் பெற்றிட வழிவகுத்து, மாணவ சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைத்திட்ட ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் கோடான கோடி நன்றி மலர்களை மாணவரணி காணிக்கையாக்குகின்றது.
இலவச சைக்கிள், இலவச பாடநுல், இலவச சீருடை, இலவச காலணி போன்ற பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஜெயலலிதாவின் பொன்னான திட்டங்களின் வரிசையிலே மாணவ மாணவியர்கள் தங்கள் வேலைவாய்ப்பிற்கான பதிவினை தாங்கள் படித்த பள்ளிகளிலே ஆன் லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என்ற வரலாற்று புரட்சியை ஏற்படுத்திய திட்டத்தை அமுல் படுத்தி, நிகழ் கல்வியாண்டிலே 27.2 இலட்சம் மாணவ மாணவியர்களுக்கு சுமார் ரூ.303.84 கோடி செலவில் இலவச பேருந்து பயண வசதி ஏற்படுத்தி கொடுத்து மாணவ சமுதாயத்தின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த ஜெயலலிதாவிற்கு கழக மாணவரணி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.