எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 18 - சாயப்பட்டறை தீர்வு மூலம் கொங்கு மண்டலத்தை காத்த கருணை தெய்வம் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம் சூட்டினார். சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது: ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னால் வாராது போல் வந்த மாமணி, காய்ந்து சிவந்த கதிரவனின் நிறத்தை ஈந்து சிவந்த கரத்தாலே வென்ற எங்கள் வாய்மை மிக்க தூய்மை தலைவி,உலக தமிழ்மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வணங்குகிறேன். புண்ணிய பூமியில் பிறந்த பொன்னும்,வைரமும், தண்ணீரிலே தோன்றிய முத்தும் பவளமும், தடாகத்தில் மலர்கின்ற அல்லியும் தாமரையும், சோலையில் கிடைக்கின்ற மாவும் பலாவும், காடுஅள்ளித்தரும் அகிலும் சந்தனமும் , நல்லமான் தருகின்ற கஸ்தூரியும், தமிழின் இனிமையும், வளமையும் பெருமையும் போல் கோடான கோடிமக்களின் மனக்கோவிலில் கொலுவிருக்கும் வாடாத பாரிஜாதமே, மாணிக்க மணி தீபமே, தேடாது கிடைத்த செல்வமே, எங்கள் இதயங்களில் வாழும் குல தெய்வமே, சிலம்புண்டு, மணிமேகலையுண்டு,வளையாபதி- சீவகசிந்தாமணி, பாரதி -பாரதிதாசன் எனும் குங்குமத் திலகமுண்டு,இவையனைத்தும் தமிழ் அன்னைக்கு காப்பாகும். தஞ்சைத் தரணியில் உலகத்மிழ்மாநாடு நடத்தி முத்தமிழுக்குப்பின் ,அறிவியல் தமிழை இந்த உலகுக்கு அறிவித்த தமிழாய்ந்த தமிழ்மகளே, ஏழரைக்கோடி தமிழ் சமுதாயத்தின் ஆராதனைக்குரியவரே, அடிமட்டத்தொண்டனையும், எம்.பி. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்களாகவும் ஆளாக்கி அழகுபார்க்கும் எங்களின் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. வின் கடைக்கோடி உண்மைத் தொண்டனாயிருந்த என்னை மாணவரணி பொறுப்பாளராக நியமித்து பல்வேறு கட்சி பொறுப்புக்களில் அமரவைத்து அழகு பார்த்து பின்னர் இரண்டுமுறை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக்கி பின்னர் அமைச்சராக்கிய இந்தியாவின் இரும்புப்பெண்மணி, தங்கத்தாரகை, எங்கள் குடும்ப விளக்கு,தமிழகத்தின் குலவிளக்காகிய தங்களுக்கு என் கோடானகோடி வணக்கங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்னுடைய வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவது மட்டுமல்லாமல்,என் குடும்பத்தினர், என் வழிவரும் சந்ததியர்கள் அத்தனை பேரும் நன்றியோடு இருந்தாலும் நன்றிக் கடன் தீராது. ஏழைகளின் நில அபகரிப்பில் கொள்ளையடித்து அகப்பட்டுக்கொண்டவர்கள் நோட்டுக்கு ஓட்டு என்ற திருமங்கலம் பாணி திருடர்களின் கொட்டத்தை அடக்கிய எங்கள் பட்டத்து அரசியே, தமிழ் ஈழத்தை இழவாக்கிவிட்டு கோவையில் கொண்டாட்டம் போட்ட குள்ளநரி கூட்டங்கள்,கொள்ளையடித்த பணத்தில் கூட்டம் சேர்த்து கலையிலும், இலக்கியத்திலும் நச்சுக்கலந்து சந்தை பொருளாக்கி செந்தமிழை விற்றுப்பிழைக்கும் தீயசக்திகளின் ஆறாவது முறையாத தமிழக முதல்வர் என்று கொக்கரித்த துரோகிகளை , 14 வது சட்டமன்ற தேர்தலில் வீழ்த்திக்காட்டி மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்று அ.தி.மு.க. வை கோட்டையில் அமரவைத்த எங்கள் குலவிளக்கே, எதிரிகள் ஏசிடும் சுடுமொழிகளை வீசிடும் குளிர் தென்றலாய் ஏற்று புன்னகை க்கும் புதுநிலவே, மைனாரிட்டி தி.மு.க.அரசின் கொடுங்கோல் குடும்ப ஆட்சியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்களுக்காக போராடி வெற்றி கண்ட எங்கள் வணக்கத்துகுரிய அன்னையே.
அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல் வாதி, ஆனால் அடுத்த தலைமுறைப்பற்றி சிந்திப்பவன் ஜனநாயகவாதி என்ற வரிகளுக்கேற்ப மக்களாட்சித் தத்துவத்தை புரியவைத்த புனிதவதியே, பகைமை அன்பு வெல்லும், துரோகத்தை தியாகம் வெல்லும், அச்சத்தை துணிவு வெல்லும், அநியாயத்தை நியாயம் வெல்லும், அதர்மத்தை தர்மம் வெல்லும், அட்டூழியத்தை அறம் வெல்லும் இவற்றின்ஒட்டுமொத்த உருவாமாக திகழும் எங்கள் அன்னையே!
கருணாநிதியின் சவால்களையும் , பொய் வழக்குகளையும் சந்தித்து,நீதிமன்றங்களின் நெடியபடிக்கட்டுகளில் ஏறியிறங்கி வழக்குகளை சந்தித்தபோது அன்றைய காங்கிரஸ் கட்சியை சார்ந்த எதிர்கட்சி தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் ஜெயலலிதா மீதான பொய்வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு நிகழ்வுகளை மேற்கோள்காட்டி வழக்குகளை திரும்பப்பெற கோரியதில், அதற்கு பதிலுரையாக முதல்வர் ஜெயலலிதா துணிச்சலோடு,அத்தனை வழக்குகளையும் நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி என நிரூப்பிப்பேன் என்று சூளுரைத்து, நான் வண்ணத்துப் பூச்சி அல்ல. நான் ஒரு இரும்புப்பெண்மணி என்றுரைத்த இந்தியாவின் வீரப்பெண் நேதாஜியே.
தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்னார் ஏசுபிரான், ஆனால் தட்டாமலேயே அள்ளித்தரும் அட்சயபாத்திரம் எங்கள் முதல்வர், பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலுள்ள சாயப்பட்டறை உரிமையாளர்களின் குறையறிந்து, சாயப்பட்டறைகளில் புதிய தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்க ரூபாய் 200 கோடியை வட்டியில்லா கடனாகவும் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளின் குடும்ப நலனுக்காக ரூபாய் 18.38 கோடியை அள்ளி வழங்கி கொங்கு மண்டலத்தைக் காப்பாற்றிய கருணை தெய்வமே, வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாகத் திகழும் உங்கள் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.இனி என்றைக்கும் தமிழக நிரந்தர முதல்வர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் அதிபர் புதின் சூளுரை
01 Jan 2026மாஸ்கோ, உக்ரைன் போரில் ரஷ்யா உறுதியாக வெற்றி பெறும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் புதன்கிழமை தெரிவித்தார்.
-
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 5-ம் தேதி நடக்கிறது
01 Jan 2026சென்னை, கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வருகிற 5-ம் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் ரொக்கப்பணம் வழங்கப்படுவது எப்பொழுது? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
01 Jan 2026சென்னை, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படவுள்ள ரொக்கப்பணம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ராகுல் புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-01-2026
01 Jan 2026 -
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Jan 2026சென்னை, தமிழ்நாடு அரசின் 'சி' மற்றும் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம், 'சி' மற்றும் 'டி' பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன
-
முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்
01 Jan 2026திருச்சி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் நடைபயணத்தை துவக்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி செல்கிறார்.
-
சென்னையில் 7-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது
01 Jan 2026சென்னை, சென்னையில் 7-வது நாளாக நேற்றும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்வு
01 Jan 2026சென்னை, கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை குறைந்த நிலையில் இந்த மாதம் உயர்ந்துள்ளது.;
-
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
01 Jan 2026சென்னை, ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வ
-
தி.மு.க.வுக்கு பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. துணை முதல்வர் உதயநிதி பேட்டி
01 Jan 2026சென்னை, தேர்தலில் தி.மு.க.வுக்கு பிராதன எதிர்க்கட்சி அ.தி.மு.க.தான் என்று தெரிவித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு இப்போது வரை வல
-
வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும் சிகரெட் விலை வரும் பிப்.1 முதல் புதிய வரி அமல்
01 Jan 2026புதுடெல்லி, புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
-
உலகம் அழியும் என கூறிய கானாவை சேரந்தவர் கைது
01 Jan 2026கானா, மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள ஒரு நாடு கானா. அதன் தலைநகரம் அக்ரா ஆகும்.
-
சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்: மாநகர காவல் துறை அறிவிப்பு
01 Jan 2026சென்னையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது விபத்தால் உயிரிழப்புகள் இல்லை என சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
-
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
01 Jan 2026சென்னை, 2026 பிறந்த நிலையில் நாடு முழுவதும் நேற்று ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், புத்தாண்டு நாளை ஒட்டி மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞ
-
2026-ல் மட்டும் நடைபெறும் 3 உலகக்கோப்பை போட்டிகள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து
01 Jan 2026மும்பை, புதியதாக பிறந்துள்ள 2026-ம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் ஆண்டாகவே அமைந்திருக்கிறது.
-
நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், வளம் கிடைக்கட்டும்: பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டு வாழ்த்து
01 Jan 2026புதுடெல்லி, நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், வளமும் கிடைக்கட்டும் என்று பிரதமர் மோடி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் பீகாரில் என்கவுன்ட்டரில் படுகொலை
01 Jan 2026பெகுசராய், பீகார் மாநிலத்தில் 15 குற்ற வழக்குகளில் தேடப்பட்ட நக்சலைட்டு தலைவர் என்கவுன்ட்டரில் படுகொலை செய்யப்பட்டார்.
-
வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினி
01 Jan 2026சென்னை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும்பொருட்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு ரசிகர்கள் நேற்று திரண்டனர்.
-
நியூயார்க் நகர மேயராக பதவியேற்றார் மம்தானி
01 Jan 2026நியூயார்க், 34 வயதில் நியூயார்க் நகர மேயராக பொறுப்பேற்றதன் மூலம் முதல் முஸ்லிம் மற்றும் தெற்காசியாவை சேர்ந்தவர் என்ற பெருமையை மம்தானி பெற்றுள்ளார்.
-
வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 10,175 பேர் விருப்ப மனு தாக்கல்
01 Jan 2026சென்னை, அ.தி.மு.க.
-
நெதர்லாந்து தேவாலயத்தில் தீ விபத்து
01 Jan 2026ஆம்ஸ்டர்டாம், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு இடையே நெதர்லாந்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
-
சுவிட்சர்லாந்தில் பயங்கரம்: புத்தாண்டு கொண்டாட்டத்தில் திடீர் வெடிவிபத்து; பலர் பலி..!
01 Jan 2026பெர்ன், சுவிட்சர்லாந்தில் உள்ள பார் ஒன்றில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த திடீர் வெடிவிபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக
-
போரை நிறுத்தவே விருப்பம்; ரஷ்யாவிடம் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்: உக்ரைன் அதிபர் புத்தாண்டு உரை
01 Jan 2026கீவ், நேட்டோவில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா அந்நாடு மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடுத்த போரானது 3 ஆண்டுகளை
-
புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி திரெளபதி முர்முவுடன் துணை ஜனாதிபதி நேரில் சந்திப்பு
01 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்முவை, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சந்தித்து பேசினார்.



