எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஆக.- 18 - சாயப்பட்டறை தீர்வு மூலம் கொங்கு மண்டலத்தை காத்த கருணை தெய்வம் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம் சூட்டினார். சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது: ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னால் வாராது போல் வந்த மாமணி, காய்ந்து சிவந்த கதிரவனின் நிறத்தை ஈந்து சிவந்த கரத்தாலே வென்ற எங்கள் வாய்மை மிக்க தூய்மை தலைவி,உலக தமிழ்மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வணங்குகிறேன். புண்ணிய பூமியில் பிறந்த பொன்னும்,வைரமும், தண்ணீரிலே தோன்றிய முத்தும் பவளமும், தடாகத்தில் மலர்கின்ற அல்லியும் தாமரையும், சோலையில் கிடைக்கின்ற மாவும் பலாவும், காடுஅள்ளித்தரும் அகிலும் சந்தனமும் , நல்லமான் தருகின்ற கஸ்தூரியும், தமிழின் இனிமையும், வளமையும் பெருமையும் போல் கோடான கோடிமக்களின் மனக்கோவிலில் கொலுவிருக்கும் வாடாத பாரிஜாதமே, மாணிக்க மணி தீபமே, தேடாது கிடைத்த செல்வமே, எங்கள் இதயங்களில் வாழும் குல தெய்வமே, சிலம்புண்டு, மணிமேகலையுண்டு,வளையாபதி- சீவகசிந்தாமணி, பாரதி -பாரதிதாசன் எனும் குங்குமத் திலகமுண்டு,இவையனைத்தும் தமிழ் அன்னைக்கு காப்பாகும். தஞ்சைத் தரணியில் உலகத்மிழ்மாநாடு நடத்தி முத்தமிழுக்குப்பின் ,அறிவியல் தமிழை இந்த உலகுக்கு அறிவித்த தமிழாய்ந்த தமிழ்மகளே, ஏழரைக்கோடி தமிழ் சமுதாயத்தின் ஆராதனைக்குரியவரே, அடிமட்டத்தொண்டனையும், எம்.பி. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்களாகவும் ஆளாக்கி அழகுபார்க்கும் எங்களின் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. வின் கடைக்கோடி உண்மைத் தொண்டனாயிருந்த என்னை மாணவரணி பொறுப்பாளராக நியமித்து பல்வேறு கட்சி பொறுப்புக்களில் அமரவைத்து அழகு பார்த்து பின்னர் இரண்டுமுறை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக்கி பின்னர் அமைச்சராக்கிய இந்தியாவின் இரும்புப்பெண்மணி, தங்கத்தாரகை, எங்கள் குடும்ப விளக்கு,தமிழகத்தின் குலவிளக்காகிய தங்களுக்கு என் கோடானகோடி வணக்கங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்னுடைய வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவது மட்டுமல்லாமல்,என் குடும்பத்தினர், என் வழிவரும் சந்ததியர்கள் அத்தனை பேரும் நன்றியோடு இருந்தாலும் நன்றிக் கடன் தீராது. ஏழைகளின் நில அபகரிப்பில் கொள்ளையடித்து அகப்பட்டுக்கொண்டவர்கள் நோட்டுக்கு ஓட்டு என்ற திருமங்கலம் பாணி திருடர்களின் கொட்டத்தை அடக்கிய எங்கள் பட்டத்து அரசியே, தமிழ் ஈழத்தை இழவாக்கிவிட்டு கோவையில் கொண்டாட்டம் போட்ட குள்ளநரி கூட்டங்கள்,கொள்ளையடித்த பணத்தில் கூட்டம் சேர்த்து கலையிலும், இலக்கியத்திலும் நச்சுக்கலந்து சந்தை பொருளாக்கி செந்தமிழை விற்றுப்பிழைக்கும் தீயசக்திகளின் ஆறாவது முறையாத தமிழக முதல்வர் என்று கொக்கரித்த துரோகிகளை , 14 வது சட்டமன்ற தேர்தலில் வீழ்த்திக்காட்டி மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்று அ.தி.மு.க. வை கோட்டையில் அமரவைத்த எங்கள் குலவிளக்கே, எதிரிகள் ஏசிடும் சுடுமொழிகளை வீசிடும் குளிர் தென்றலாய் ஏற்று புன்னகை க்கும் புதுநிலவே, மைனாரிட்டி தி.மு.க.அரசின் கொடுங்கோல் குடும்ப ஆட்சியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்களுக்காக போராடி வெற்றி கண்ட எங்கள் வணக்கத்துகுரிய அன்னையே.
அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல் வாதி, ஆனால் அடுத்த தலைமுறைப்பற்றி சிந்திப்பவன் ஜனநாயகவாதி என்ற வரிகளுக்கேற்ப மக்களாட்சித் தத்துவத்தை புரியவைத்த புனிதவதியே, பகைமை அன்பு வெல்லும், துரோகத்தை தியாகம் வெல்லும், அச்சத்தை துணிவு வெல்லும், அநியாயத்தை நியாயம் வெல்லும், அதர்மத்தை தர்மம் வெல்லும், அட்டூழியத்தை அறம் வெல்லும் இவற்றின்ஒட்டுமொத்த உருவாமாக திகழும் எங்கள் அன்னையே!
கருணாநிதியின் சவால்களையும் , பொய் வழக்குகளையும் சந்தித்து,நீதிமன்றங்களின் நெடியபடிக்கட்டுகளில் ஏறியிறங்கி வழக்குகளை சந்தித்தபோது அன்றைய காங்கிரஸ் கட்சியை சார்ந்த எதிர்கட்சி தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் ஜெயலலிதா மீதான பொய்வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு நிகழ்வுகளை மேற்கோள்காட்டி வழக்குகளை திரும்பப்பெற கோரியதில், அதற்கு பதிலுரையாக முதல்வர் ஜெயலலிதா துணிச்சலோடு,அத்தனை வழக்குகளையும் நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி என நிரூப்பிப்பேன் என்று சூளுரைத்து, நான் வண்ணத்துப் பூச்சி அல்ல. நான் ஒரு இரும்புப்பெண்மணி என்றுரைத்த இந்தியாவின் வீரப்பெண் நேதாஜியே.
தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்னார் ஏசுபிரான், ஆனால் தட்டாமலேயே அள்ளித்தரும் அட்சயபாத்திரம் எங்கள் முதல்வர், பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலுள்ள சாயப்பட்டறை உரிமையாளர்களின் குறையறிந்து, சாயப்பட்டறைகளில் புதிய தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்க ரூபாய் 200 கோடியை வட்டியில்லா கடனாகவும் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளின் குடும்ப நலனுக்காக ரூபாய் 18.38 கோடியை அள்ளி வழங்கி கொங்கு மண்டலத்தைக் காப்பாற்றிய கருணை தெய்வமே, வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாகத் திகழும் உங்கள் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.இனி என்றைக்கும் தமிழக நிரந்தர முதல்வர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 hour ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் : மத்திய அமைச்சர் தகவல்
19 Sep 2025புதுடெல்லி : தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சேவைகளுக்கு புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
திண்டுக்கல் மாவட்டத்தில் மினி பேருந்துகளை இயக்க விண்ணப்பிக்கும் காலம் நிறைவு
19 Sep 2025திண்டுக்கல், திண்டுக்கலில் புதிய ரூட்களில் மினி பேருந்துகளை இயக்குவதற்கு விண்ணப்பங்கள் நிறைவு பெற்றது.
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீசார் சுட்டுக்கொலை..!
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் குற்றவாளியை பிடிக்க சென்ற 3 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை
19 Sep 2025காபூல், ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்துள்ளது.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் எதிரிகளுக்கு நமது வலிமையை காட்டினோம்: ராஜ்நாத்சிங் பேச்சு
19 Sep 2025டெல்லி, ஆபரேஷன் சிந்தூரின்போது நமது பதிலடியின் வலிமையை எதிரிகளுக்கு காட்டினோம் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.
-
இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன்..? அதிபர் ட்ரம்ப் விளக்கம்
19 Sep 2025லண்டன், இந்தியாவுக்கு அதிக வரி விதித்தது ஏன் என்று அதிபர் ட்ரம்ப் விளக்கம் அளித்துள்ளார்.