எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 18 - சாயப்பட்டறை தீர்வு மூலம் கொங்கு மண்டலத்தை காத்த கருணை தெய்வம் முதல்வர் ஜெயலலிதா என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம் சூட்டினார். சட்டப்பேரவையில் நேற்று தொழில்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு தொழில்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது: ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னால் வாராது போல் வந்த மாமணி, காய்ந்து சிவந்த கதிரவனின் நிறத்தை ஈந்து சிவந்த கரத்தாலே வென்ற எங்கள் வாய்மை மிக்க தூய்மை தலைவி,உலக தமிழ்மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை வணங்குகிறேன். புண்ணிய பூமியில் பிறந்த பொன்னும்,வைரமும், தண்ணீரிலே தோன்றிய முத்தும் பவளமும், தடாகத்தில் மலர்கின்ற அல்லியும் தாமரையும், சோலையில் கிடைக்கின்ற மாவும் பலாவும், காடுஅள்ளித்தரும் அகிலும் சந்தனமும் , நல்லமான் தருகின்ற கஸ்தூரியும், தமிழின் இனிமையும், வளமையும் பெருமையும் போல் கோடான கோடிமக்களின் மனக்கோவிலில் கொலுவிருக்கும் வாடாத பாரிஜாதமே, மாணிக்க மணி தீபமே, தேடாது கிடைத்த செல்வமே, எங்கள் இதயங்களில் வாழும் குல தெய்வமே, சிலம்புண்டு, மணிமேகலையுண்டு,வளையாபதி- சீவகசிந்தாமணி, பாரதி -பாரதிதாசன் எனும் குங்குமத் திலகமுண்டு,இவையனைத்தும் தமிழ் அன்னைக்கு காப்பாகும். தஞ்சைத் தரணியில் உலகத்மிழ்மாநாடு நடத்தி முத்தமிழுக்குப்பின் ,அறிவியல் தமிழை இந்த உலகுக்கு அறிவித்த தமிழாய்ந்த தமிழ்மகளே, ஏழரைக்கோடி தமிழ் சமுதாயத்தின் ஆராதனைக்குரியவரே, அடிமட்டத்தொண்டனையும், எம்.பி. எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சர்களாகவும் ஆளாக்கி அழகுபார்க்கும் எங்களின் தமிழக முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க. வின் கடைக்கோடி உண்மைத் தொண்டனாயிருந்த என்னை மாணவரணி பொறுப்பாளராக நியமித்து பல்வேறு கட்சி பொறுப்புக்களில் அமரவைத்து அழகு பார்த்து பின்னர் இரண்டுமுறை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக்கி பின்னர் அமைச்சராக்கிய இந்தியாவின் இரும்புப்பெண்மணி, தங்கத்தாரகை, எங்கள் குடும்ப விளக்கு,தமிழகத்தின் குலவிளக்காகிய தங்களுக்கு என் கோடானகோடி வணக்கங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
என்னுடைய வாழ்நாள் முழுவதும் நன்றி செலுத்துவது மட்டுமல்லாமல்,என் குடும்பத்தினர், என் வழிவரும் சந்ததியர்கள் அத்தனை பேரும் நன்றியோடு இருந்தாலும் நன்றிக் கடன் தீராது. ஏழைகளின் நில அபகரிப்பில் கொள்ளையடித்து அகப்பட்டுக்கொண்டவர்கள் நோட்டுக்கு ஓட்டு என்ற திருமங்கலம் பாணி திருடர்களின் கொட்டத்தை அடக்கிய எங்கள் பட்டத்து அரசியே, தமிழ் ஈழத்தை இழவாக்கிவிட்டு கோவையில் கொண்டாட்டம் போட்ட குள்ளநரி கூட்டங்கள்,கொள்ளையடித்த பணத்தில் கூட்டம் சேர்த்து கலையிலும், இலக்கியத்திலும் நச்சுக்கலந்து சந்தை பொருளாக்கி செந்தமிழை விற்றுப்பிழைக்கும் தீயசக்திகளின் ஆறாவது முறையாத தமிழக முதல்வர் என்று கொக்கரித்த துரோகிகளை , 14 வது சட்டமன்ற தேர்தலில் வீழ்த்திக்காட்டி மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பேற்று அ.தி.மு.க. வை கோட்டையில் அமரவைத்த எங்கள் குலவிளக்கே, எதிரிகள் ஏசிடும் சுடுமொழிகளை வீசிடும் குளிர் தென்றலாய் ஏற்று புன்னகை க்கும் புதுநிலவே, மைனாரிட்டி தி.மு.க.அரசின் கொடுங்கோல் குடும்ப ஆட்சியிலிருந்து தமிழக மக்களை காப்பாற்ற கோவை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தி மக்களுக்காக போராடி வெற்றி கண்ட எங்கள் வணக்கத்துகுரிய அன்னையே.
அடுத்த தேர்தலைப் பற்றி சிந்திப்பவன் அரசியல் வாதி, ஆனால் அடுத்த தலைமுறைப்பற்றி சிந்திப்பவன் ஜனநாயகவாதி என்ற வரிகளுக்கேற்ப மக்களாட்சித் தத்துவத்தை புரியவைத்த புனிதவதியே, பகைமை அன்பு வெல்லும், துரோகத்தை தியாகம் வெல்லும், அச்சத்தை துணிவு வெல்லும், அநியாயத்தை நியாயம் வெல்லும், அதர்மத்தை தர்மம் வெல்லும், அட்டூழியத்தை அறம் வெல்லும் இவற்றின்ஒட்டுமொத்த உருவாமாக திகழும் எங்கள் அன்னையே!
கருணாநிதியின் சவால்களையும் , பொய் வழக்குகளையும் சந்தித்து,நீதிமன்றங்களின் நெடியபடிக்கட்டுகளில் ஏறியிறங்கி வழக்குகளை சந்தித்தபோது அன்றைய காங்கிரஸ் கட்சியை சார்ந்த எதிர்கட்சி தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம் ஜெயலலிதா மீதான பொய்வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று பல்வேறு நிகழ்வுகளை மேற்கோள்காட்டி வழக்குகளை திரும்பப்பெற கோரியதில், அதற்கு பதிலுரையாக முதல்வர் ஜெயலலிதா துணிச்சலோடு,அத்தனை வழக்குகளையும் நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி என நிரூப்பிப்பேன் என்று சூளுரைத்து, நான் வண்ணத்துப் பூச்சி அல்ல. நான் ஒரு இரும்புப்பெண்மணி என்றுரைத்த இந்தியாவின் வீரப்பெண் நேதாஜியே.
தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொன்னார் ஏசுபிரான், ஆனால் தட்டாமலேயே அள்ளித்தரும் அட்சயபாத்திரம் எங்கள் முதல்வர், பொறுப்பேற்ற இரண்டே மாதங்களில் கொங்கு மண்டலமான கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலுள்ள சாயப்பட்டறை உரிமையாளர்களின் குறையறிந்து, சாயப்பட்டறைகளில் புதிய தொழில்நுட்பத்தை கடைப்பிடிக்க ரூபாய் 200 கோடியை வட்டியில்லா கடனாகவும் மற்றும் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளின் குடும்ப நலனுக்காக ரூபாய் 18.38 கோடியை அள்ளி வழங்கி கொங்கு மண்டலத்தைக் காப்பாற்றிய கருணை தெய்வமே, வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாகத் திகழும் உங்கள் வரலாறு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.இனி என்றைக்கும் தமிழக நிரந்தர முதல்வர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.