எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.- 5 - தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பே இல்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரேஷி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழகம்,புதுவை, கேரளம், மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதனால் இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கும் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதில் தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்த பின்னர் இந்த 5 மாநிலங்களிலும் வரும் மே மாதம் 13-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடத்தப்படுவதற்கு மாநிலத்தில் உள்ள முக்கிய கட்சியான அ.தி.மு.க. உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு ஏப்ரல் மாதம் வரை நடைபெறுகிறது. அதனையடுத்து பத்தாம் வகுப்பு தேர்வும் ஆரம்பமாகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு அடுத்து கல்லூரி தேர்வும் நடக்கவுள்ளது. அதனால் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் இரவும் பகலும் தேர்வுக்காக படித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் தேர்தல் பிரசாரம் நடக்கவுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது மோட்டார் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை கட்டி பிரசாரம் செய்ய வேண்டும். அப்போது ஏற்படும் சத்தத்தால் மாணவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு அவர்கள் படிப்புக்கு தடையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தமிழ்புத்தாண்டு தினமாகும். அன்றைய தினத்தை கொண்டாட உறவினர்கள் ஒன்று கூடுவார்கள். இதனையொட்டி இடம் பெயரும்போது தேர்தலின்போது மக்கள் சரியானபடி வாக்களிக்க முடியாமல் போய்விடும். இதை பயன்படுத்தி வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடுதல் மற்றும் தில்லுமுள்ளு நடக்க வாய்ப்பு உள்ளது. அதனால் தமிழக்த்தில் தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா மேலும் கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடத்தப்படுவதற்கு தி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சட்டசபை காலம் மே 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. மே மாதம் 13-ம் தேதிதான் ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. மே.16-ம் தேதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இடைவெளி இருப்பதோ வெறும் இரண்டு நாட்கள்தான். இந்த இரண்டு நாட்களுக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு அவர்கள் முதல்வரை தேர்ந்தெடுத்து, கவர்னரையும் சந்திக்க வேண்டும். இதற்கு போதிய காலவகாசம் இருக்காது. அதனால் தேர்தல் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு கருணாநிதி கோரியுள்ளார்.
இடது கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., பா,ஜ. தலைவர்களும் தேர்தல் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில் அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்த பின்னரே தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஒரே கட்சி ஆட்சி செய்கிறது. இதையும் பரிசீலைனை செய்துதான் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்,ஒய். குரேஷி நேற்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் தேர்தல் தேதியை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவான முறையில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்று குரேஷி கூறினார். தேர்தல் நடக்கவிருக்கும் தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் நிலவும் சூழ்நிலை குறித்து தேர்தல் கமிஷன் பலமுறை விரிவான முறையில் ஆராய்ந்தது. அதன் பின்னர்தான் கடந்த செவ்வாய்கிழமை தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் நடத்துவதுதான் சரியானதாக இருக்கும். தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் ஒவ்வொன்றையும் பல முறை உட்கார்ந்து தெளிவாக ஆய்வு செய்து கணக்கில் கொண்டோம். அதேமாதிரி இதர மாநிலங்களான அசாம், மேற்குவங்காளம், புதுவை,கேரளம் ஆகிய மாநிலங்களிலும் அனைத்தையும் ஆய்வு செய்து கணக்கில் எடுத்துக்கொண்டோம். அதன் பின்னர்தான் தேர்தல் நடத்தப்படும் தேதியை அறிவித்தோம். அதனால் முதலில் அறிவித்த தேதியிலேயே தேர்தல் நடத்துவதுதான் சரியானதாக இருக்கும் என்று குரேஷி தெரிவித்தார்.
தேர்தல் தேதியை தள்ளிப்போடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த குரேஷி தேர்தலை தள்ளிப்போடுவதற்கான வாய்ப்பே இல்லை என்று சட்டென்று பதில் அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
ரபேல் போர் விமானத்தில் பறந்தார் ஜனாதிபதி முர்மு
29 Oct 2025சென்னை : ரபேல் போர் விமானத்தில் ஜனாதிபதி திரெளபதி பறந்தார்.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும்: ராகுல்
29 Oct 2025டெல்லி : ட்ரம்ப்புக்கு மோடி தைரியமாக பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் கூறினார்.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை: தமிழக அரசு அறிவிப்பு
29 Oct 2025சென்னை : மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கான முன் சோதனை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மாணவியின் கனவு இல்லத்தை பார்வையிட்ட முதல்வர் ஆய்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் நடந்த கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ நிகழ்ச்சியில், தென்காசி மாவட்டம், கழுநீர்குளத்தைச் சேர்ந்த மாணவி பிரேமாவுக்கு ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ
-
ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை: முதலிடம் பிடித்தார் ரோகித்; சச்சின் சாதனை முறியடிப்பு
29 Oct 2025துபாய் : ஐ.சி.சி. ஒருநாள் பேட்டர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா முதலிடத்தை பிடித்துள்ளார்.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
ஆஸி.க்கு எதிரான டி-20 தொடர்: நிதீஷ் குமார் ரெட்டி விலகல்
29 Oct 2025பெர்த், : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் மூன்று டி20 போட்டிகளில் இருந்து இந்திய ஆல்ரவுண்டர் நிதீஷ்குமார் ரெட்டி விலகியுள்ளார்.
-
கலைஞரின் கனவு இல்ல ஒரு லட்சமாவது பயனாளிக்கு வீட்டிற்கான சாவியை வழங்கினார் : தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Oct 2025சென்னை : கலைஞரின் கனவு இல்லத்தின் 1 லட்சமாவது பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
ஜமைக்காவை புரட்டி போட்ட மெலிசா புயல்
29 Oct 2025வாஷிங்டன் : 300 கி.மீ. வேகத்தில் ஜமைக்காவை புரட்டி போட்ட மெலிசா புயல் குறித்து உசேன் போல்ட் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வி
29 Oct 2025டெல்லி : டெல்லியில் செயற்கை மழை முயற்சி தோல்வியடைந்தது.
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விண்ணப்பிக்கிறார் விஜய்?
29 Oct 2025சென்னை : வரும் 6-ம் தேதி தேர்தல் சின்னம் கோரி விஜய் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.


