எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,மார்ச்.- 5 - தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை தள்ளிவைக்க வாய்ப்பே இல்லை என்று தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரேஷி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழகம்,புதுவை, கேரளம், மேற்குவங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை காலம் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதனால் இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கும் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதில் தமிழகம், புதுவை, கேரளம் ஆகிய 3 மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அசாம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் முடிந்த பின்னர் இந்த 5 மாநிலங்களிலும் வரும் மே மாதம் 13-ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடத்தப்படுவதற்கு மாநிலத்தில் உள்ள முக்கிய கட்சியான அ.தி.மு.க. உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு ஏப்ரல் மாதம் வரை நடைபெறுகிறது. அதனையடுத்து பத்தாம் வகுப்பு தேர்வும் ஆரம்பமாகிறது. பத்தாம் வகுப்பு தேர்வு அடுத்து கல்லூரி தேர்வும் நடக்கவுள்ளது. அதனால் லட்சக்கணக்கான மாணவ-மாணவிகள் இரவும் பகலும் தேர்வுக்காக படித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் தேர்தல் பிரசாரம் நடக்கவுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது மோட்டார் வாகனங்களில் ஒலிபெருக்கிகளை கட்டி பிரசாரம் செய்ய வேண்டும். அப்போது ஏற்படும் சத்தத்தால் மாணவர்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு அவர்கள் படிப்புக்கு தடையை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் 14-ம் தேதி தமிழ்புத்தாண்டு தினமாகும். அன்றைய தினத்தை கொண்டாட உறவினர்கள் ஒன்று கூடுவார்கள். இதனையொட்டி இடம் பெயரும்போது தேர்தலின்போது மக்கள் சரியானபடி வாக்களிக்க முடியாமல் போய்விடும். இதை பயன்படுத்தி வாக்குச்சாவடிகளில் கள்ள ஓட்டு போடுதல் மற்றும் தில்லுமுள்ளு நடக்க வாய்ப்பு உள்ளது. அதனால் தமிழக்த்தில் தேர்தல் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா மேலும் கூறியுள்ளார். ஏப்ரல் மாதம் 13-ம் தேதி தேர்தல் நடத்தப்படுவதற்கு தி.மு.க. தலைவரும் முதல்வருமான கருணாநிதியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சட்டசபை காலம் மே 15-ம் தேதியுடன் முடிவடைகிறது. மே மாதம் 13-ம் தேதிதான் ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. மே.16-ம் தேதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இடைவெளி இருப்பதோ வெறும் இரண்டு நாட்கள்தான். இந்த இரண்டு நாட்களுக்குள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு புதிய எம்.எல்.ஏ.க்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு அவர்கள் முதல்வரை தேர்ந்தெடுத்து, கவர்னரையும் சந்திக்க வேண்டும். இதற்கு போதிய காலவகாசம் இருக்காது. அதனால் தேர்தல் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு கருணாநிதி கோரியுள்ளார்.
இடது கம்யூனிஸ்ட், ம.தி.மு.க., பா,ஜ. தலைவர்களும் தேர்தல் தேதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனை கேட்டுக்கொண்டுள்ளனர். இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில் அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்த பின்னரே தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஒரே கட்சி ஆட்சி செய்கிறது. இதையும் பரிசீலைனை செய்துதான் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்தநிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்,ஒய். குரேஷி நேற்று டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் தேர்தல் தேதியை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அனைத்து விஷயங்கள் குறித்தும் விரிவான முறையில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் பின்னர்தான் தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது என்று குரேஷி கூறினார். தேர்தல் நடக்கவிருக்கும் தமிழகம், புதுவை, கேரளா, அசாம், மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களிலும் நிலவும் சூழ்நிலை குறித்து தேர்தல் கமிஷன் பலமுறை விரிவான முறையில் ஆராய்ந்தது. அதன் பின்னர்தான் கடந்த செவ்வாய்கிழமை தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் நடத்துவதுதான் சரியானதாக இருக்கும். தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் ஒவ்வொன்றையும் பல முறை உட்கார்ந்து தெளிவாக ஆய்வு செய்து கணக்கில் கொண்டோம். அதேமாதிரி இதர மாநிலங்களான அசாம், மேற்குவங்காளம், புதுவை,கேரளம் ஆகிய மாநிலங்களிலும் அனைத்தையும் ஆய்வு செய்து கணக்கில் எடுத்துக்கொண்டோம். அதன் பின்னர்தான் தேர்தல் நடத்தப்படும் தேதியை அறிவித்தோம். அதனால் முதலில் அறிவித்த தேதியிலேயே தேர்தல் நடத்துவதுதான் சரியானதாக இருக்கும் என்று குரேஷி தெரிவித்தார்.
தேர்தல் தேதியை தள்ளிப்போடுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்டதற்கு பதில் அளித்த குரேஷி தேர்தலை தள்ளிப்போடுவதற்கான வாய்ப்பே இல்லை என்று சட்டென்று பதில் அளித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.