எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி. அக்.7 - உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் தற்போது முதல்வர் மாயாவதி தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட அரசியல் கட்சிகள் இப்போதே தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி இப்போதே துவக்கி விட்டது.
என்றாலும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்த தேர்தலுக்கு பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று கருதப்படுகிறது.
சமீபத்தில் சோனியா காந்தி அமெரிக்காவில் ஆபரேஷன் செய்து கொண்டு டெல்லி திரும்பியிருக்கிறார்.
அவருக்கு பூரண ஓய்வு தேவை என்பதால் உ.பி. தேர்தலில் பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைப்பதில்லை என்ற முடிவுக்கு உ.பி. காங்கிரஸ் வந்து விட்டதாக தெரிகிறது.
என்றாலும் உ.பி. தேர்தலில் சோனியாவின் மகனும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தை செய்வார் என்று உ.பி. காங்கிரஸ் கூறியுள்ளன.
உத்தர பிரதேசத்தில் இந்த முறை எப்படியாவது காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை கொண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி வேலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


