எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
							
						சென்னை, நவ.- 24 - சென்னை மாநகராட்சியின் முதல் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கும் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்தார். தீர்மானத்தின் மீது அ.தி.மு.க, காங்கிரஸ், தே.மு.தி.க, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பேசியபின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தீர்மானத்தின் விபரம் வருமாறு-தமிழக முதலமைச்சர் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தவுடன் பதவியேற்ற நாள் அன்றே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வண்ணமாக, ஏழை மக்களுக்கு 20 கிலோ விளையில்லா அரிசி, தாலிக்குத் தங்கம், பட்டம் மற்றும் பட்டயம் படித்து ஏழைப்பெண்களுக்குத் திருமண உதவித் தொகை ரூ.50,000/. வழங்குதல் போன்ற மக்கள் நலத் திட்டங்களை அறிவித்து அதனைச் சிறப்பாக மேலும் செயல்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, நிர்வாகத்தை சிறப்பாக,திறமையாக நடத்துவதற்கு முன்னுரிமை அளித்து நேர்மையான, திறமையான, பொறுப்பான, வெளிப்படையான,நிர்வாகத்தில் உறுதிபூண்டு அதை செயல்படுத்தி வருகிறார்கள்.சென்னை குப்பையில்லா, சுகாதாரமான, தூய்மையான, எழில்மிகு சென்னையாக உருவாக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழக மக்கள் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து, அவர்கள் சிறப்பாக வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார்.இத்தகைய பணிகளை மேற்கொண்டு வரும் முதல்வர் தமிழ்நாட்டின் பழமைவாய்ந்த சிறப்புமிக்க சென்னை மாநகராட்சியின் தேர்தலில் அன்று சென்னப்பநாயக்கர் பட்டினம் என்றழைக்கப்பட்ட இன்றைய சென்னையின் அழகுக்கும், அளவில்லா வளர்த்திக்கும், அழகிய பொலிவிற்கும், மாசற்ற மாநகரம் என்ற பெருமைக்கும், வாகனத்தில் பயணிக்கும்போதே ஆவணத்தில் கையெழுத்து அழகுறவே இடும் வண்ணம் அலுங்காத, குலுங்காத அழகுமிகு சாலைகள், எக்காலத்திலும் முழுமையான பாதுகாப்பு என்னும் இலக்கணம் தவறாத மாநகராட்சியாக இந்தியாவில் இதுவே தலைசிறந்த மாநகராட்சி என்னும் பெருமையை எட்டுவதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படும் என்றும், பொது மக்களிடத்திக் சுத்தமான சென்னை, கைசுத்தமான நிர்வாகம் என்கின்ற உறுதியினை கொடுத்தும், மாபெரும் வெற்றிக்கு தமிழக முதல்வர் காரணமாக இருந்ததையும்,மேலும் சென்னை மாநகராட்சியின்,மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு தனது இடைவிடா பணிச்சுமைக்கிடையே நவ.25 அன்று வருகைபுரிந்து, கலந்துகொண்டு, சிறப்பித்தமைக்கும், இம்மண்ணும், இம்மாநிலமும், இம்மண்வாழ் மக்களும் எல்லையில்லா பயன்கள் பெற்று, இன்பமுற்று வாழதன்னை மெய்வருத்தி உழைக்கின்ற முதல்வர்க்கும் மற்றும் அமைச்சர் பெருமக்களுக்கும் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதில் இம்மாமன்றம் பெருமிதம் கொள்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
| கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்  1 year 1 month ago | வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்  1 year 1 month ago | மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.  1 year 1 month ago | 
-   
          இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-10-2025.25 Oct 2025
-   
          ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ‘யாத்ரி சுவிதா கேந்திரா' என்ற சிறப்பு திட்டம் விரைவில் அமல்25 Oct 2025சென்னை: ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு திட்டம் தொடங்கப்பட உள்ளது. 
-   
          சென்னையில் இருந்து 970 கி.மீ. தொலைவில் புயல் சின்னம்25 Oct 2025சென்னை: புயல் சின்னம் 7 கி.மீ. வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் இருந்து 970 கி.மீ. 
-   
          திருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டி.ஐ.ஜி., எஸ்.பி. நேரில ஆய்வு25 Oct 2025திருச்செந்தூர்: ருச்செந்தூர் கோவில் கந்தசஷ்டி திருவிழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடு பணிகளை டி.ஐ.ஜி., எஸ்.பி. ஆய்வு செய்தார். 
-   
          அசாமில் மாவோயிஸ்டு தளபதி சுட்டுக்கொலை25 Oct 2025கவுகாத்தி: சாம் என்கவுன்டரில் மாவோயிஸ்டு முக்கிய தளபதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். 
-   
          வேகமாக நிரம்பும் கொடுமுடியாறு அணை: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை25 Oct 2025நெல்லை: கொடுமுடியாறு அணை வேகமாக நிரம்பி வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
-   
          10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ.4-ல் வெளியீடு அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு25 Oct 2025சென்னை: 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அடுத்த மாதம் 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 
-   
          ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூர் இளைஞர் பலி25 Oct 2025தெலுங்கானா: ஆம்னி பஸ் தீ விபத்தில் திருப்பூரை சேர்ந்த வாலிபர் உயிரிழந்தார். 
-   
          அடையாறு ஆற்றின் முகதுவாரத்தினை அகலப்படுத்தும் பணி மேலும் தீவிரம்25 Oct 2025சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தினை அமல்படுத்தும் பணியை விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அந்த பணிகள் மேலும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
-   
          திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை: நிர்வாகம்25 Oct 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் பெயரில் கந்தசஷ்டி தகடுகள் விற்க அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது. 
-   
          தமிழகம் முழுவதும் 407 முகாம்கள் மூலம் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்25 Oct 2025சென்னை: தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட 407 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்கள் மூலம் 6,37,089 பேர் பயன்பெற்றுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறன் சான்று 2 
-   
          மோன்தா புயல் எதிரொலி: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்25 Oct 2025சென்னை: மோன்தா புயலால் தமிழகம், புதுச்சேரியில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. 
-   
          நீதிபதி குறித்து அவதூறு வழக்கில் ஜாமீன் கோரிய ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனு மீது பதிலளிக்க உத்தரவு25 Oct 2025சென்னை: நீதிபதி அவதூறு வழக்கு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 
-   
          மோன்தா புயல் எதிரொலி: தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் சுகாதாரத்துறை அறிவுறுத்தல்25 Oct 2025சென்னை: புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது. 
-   
          ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம்: புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சி25 Oct 2025கர்னூல்: ஆம்னி பேருந்து தீ விபத்து சம்பவம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 
-   
          சிறையில் கைதியுடன் உல்லாசம்: இங்கிலாந்தில் பெண் அதிகாரிகள் சிக்கினார்25 Oct 2025லண்டன்,: சிறையில் கைதிகளிடம் உல்லாசமாக இருந்த பெண் அதிகாரி சிக்கினார். 
-   
          குஜராத்திற்கு வழங்கியதை பீகாருக்கு வழங்கவில்லை பிரதமர் மீது தேஜஸ்வி குற்றச்சாட்டு25 Oct 2025பாட்னா: பிரதமர் மோடி குஜராத்தில் தொழிற்சாலைகளை அமைத்துவிட்டு பீகாரில் வெற்றியை தேடுவதா? என்று தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டினார். 
-   
          டெல்லி: தங்க கட்டிகளை மறைத்து விமானத்தில் கடத்திய பெண் கைது25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் 6 தங்க கட்டிகளை உள்ளாடையில் மறைத்து விமானத்தில் கடத்தி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். 
-   
          திருநெல்வேலியில் ரூ. 17.82 லட்சம் மதிப்புள்ள 100 செல்போன்கள் மீட்பு25 Oct 2025திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் நேரடி கண்காணிப்பில், சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி. 
-   
          பயணிகள் முன்பதிவு குறைவு எதிரொலி: 6 சிறப்பு ரயில்கள் ரத்து25 Oct 2025சென்னை: பயணிகள் முன்பதிவு குறைவு 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 
-   
          ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கைது25 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர். 
-   
          தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து25 Oct 2025வாஷிங்டன்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்காவில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
-   
          தேவர் ஜெயந்தி- குருபூஜை முன்னிட்டு ராமநாதபுரத்தில் டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் மூடல்25 Oct 2025ராமநாதபுரம்: தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு மூடப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். 
-   
          அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம்25 Oct 2025அயோத்தி: அயோத்தி ராமர் கோவிலில் தரிசன நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
-   
          தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பு25 Oct 2025சென்னை: தென்மாவட்ட ரயில்களில் அரையாண்டு விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பா நடைபெற்று வருகிறது. 
























































