முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மயக்கம் என்ன படத்தை முடக்க கூடாது: செல்வராகவன் மனு

வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, டிச.15 - சென்னை சாலிகிரமத்தைச் சேர்ந்த ஷிலா சினி ஆர்டஸ் பட நிறுவணம் ஜெமினி பிச்சர்ஸ் சர்க்கியூட் பட நிறுவனத்திற்கு எதிராக சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர்த்தது. அதில் ஜெமினி பிக்சர்ஸ் சர்க்கியூட் பட நிறுவனம் தர வேண்டிய 70 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டிற்காக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள மயக்கம் என்ன படத்தை முடக்க உத்தரவிட வேண்டும் என கூறப்படிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதி மன்ற மாஸ்டர் கோர்ட் நீதிபதி அருள். ஜெமினி பிக்சர்ஸ் சர்கியூட் பட நிறுவணம் வெளியிட்டுள்ள மயக்கம் என்ன படத்தை முடக்க உத்தரவிட்டர்.

இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான செல்வராகவன் உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இப்படத்தை தான் தயாரித்தாகவும், தற்போது அப்படம் வெற்றிகரமாக ஒடிக் கொண்டிருப்பதாகாவும். இந்த சூழ்நிலையில் படத்தை முடக்கினால் தான் பெரும் நஷ்டத்திற்கு ஆளாக நேரிடும். எனவே படத்தை முடக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்