எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூலை 22 - நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு தொடர்பான வழக்கில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பொறுப்பேற்க மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்கி உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டது. அரசு தரப்பு வழக்கறிஞராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இது தொடர்பாக தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனையில் பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இந்த வழக்கை கையாள்வதற்கு மாசற்ற நேர்மையான ஆழ்ந்த சட்ட ஞானமுள்ள அரசு வழக்கறிஞர் தேவை. அப்பொறுப்பை ஏற்பவரின் முழு ஒப்புதல் தேவை. புது டெல்லியில் வழக்காடுபவர்கள் பெயரை மட்டும் பரிசீலிக்க கூடாது என்று தலைமை நீதிபதி லோதா குறிப்பிட்டார்.
அப்போது மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தின் பெயரும் பரிசீலனைக்கு வந்தது. நாடாளுமன்ற தாக்குதல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக இவர் வாதாடியுள்ளார். இப்பொறுப்புக்கு பரிசீலிக்கப்பட்டவர்களிடையே இவரே முன்னிலையில் இருந்தார். இந்நிலையில் இப்பொறுப்பை கோபால் சுப்பிரமணியம் ஏற்க முடியாது என்று அவருடைய அலுவலகம் தெரிவித்துள்ளது.
கோபால் சுப்பிரமணியத்துக்கு பல்வேறு முக்கிய அலுவல்கள் இருப்பதால் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேட்டை விசாரிக்கவிருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராக முடியாதென அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான எம்.எல். சர்மா எனும் மூத்த வழக்கறிஞர், கோபால் சுப்பிரமணியத்தின் அலுவளகத்தை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது வேறு பல அலுவல்களை காரணம் காட்டி இவ்வழக்கை எடுத்து கொள்ள மறுத்து விட்டதாக தெரிகிறது. முன்னதாக உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க நால்வர் பெயர்களை நீதிபதிகள் குழு பரிந்துரைத்தது. இதில் கோபால் சுப்பிரமணியம் தவிர மற்ற மூவரை நீதிபதிகளாக்குவது தொடர்பாக மத்திய அரசுக்கு ஆட்சேபம் இருக்கவில்லை. இதையடுத்து நீதிபதி பதவிக்கு தன்னை பரிசீலிக்க வேண்டாம் என்று கோபால் சுப்பிரமணியம் தலைமை நீதிபதி லோதாவுக்கு கடிதம் எழுதினார்.
மேலும் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உத்தேசத்துடன் மத்திய அரசு சிபிஐயை ஏவிவிட்டு ரகசிய விசாரணை நடத்துகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்த விவகாரத்தை தொடர்ந்து இப்போது நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞராக பொறுப்பேற்க அவர் மறுத்துள்ளார். தனது உச்சநீதிமன்ற பதவிக்கு ஆட்சேபம் தெரிவித்த அரசு சார்பாக வழக்கறிஞராக வாதாட அவர் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்
16 Mar 2026சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை
16 Mar 2026சென்னை, தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
-
மகளிா் ஆதரவு இருக்கும் வரை, தி.மு.க. அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர்
16 Mar 2026சென்னை, பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
-
6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனா-வடகொரியா இடையே விமான சேவை தொடக்கம்
16 Mar 2026பெய்ஜிங், சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
-
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள் ஆர்மீனியாவுக்கு ஜெய்சங்கர் நன்றி
16 Mar 2026புதுடெல்லி, ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனத
-
பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்: ஆஸ்கர் விழா மேடையில் ஹாலிவுட் நடிகர் ஜேவியரின் பேச்சால் பரபரப்பு
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


