எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூலை 28 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லைக்கு அப்பால் இந்தியாவில் நாச வேலைகளை நடத்தும் சதித் திட்டத்தோடு 200 பாக். தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றால் அந்த ஊடுருவலை முறியடிக்க இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தையும் மீறி பாகிஸ்தான் ராணுவத்தினரும் சரி, பாகிஸ்தான் தீவிரவாதிகளும் சரி. நமது எல்லை பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கார்கில் பகுதியில் ஊடுருவிய இவர்களை இந்திய ராணுவம் ஓட ஓட விரட்டியடித்தது. அந்த போரில் பாகிஸ்தானுக்கு படுதோல்வி ஏற்பட்டது. ஆனாலும் கூட பாகிஸ்தானுக்கு இன்னமும் புத்தி வரவில்லை. அவ்வப்போது எல்லை பகுதியில் ஊடுருவல் முயற்சிகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் சில மாதங்களுக்கு முன் பதவியேற்றார். அப்போது இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். இப்போதும் அதைத்தான் அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் ராணுவமும் சரி, தீவிரவாதிகளும் சரி, இந்தியாவுக்கு தொல்லை கொடுப்பதையும், தாக்குதல் நடத்துவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அங்கு தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களை கொடூரமான முறையில் தாக்கினார்கள். இதில் அதிகாரிகள், பொதுமக்கள் என 160க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது நடந்த கடும் சண்டையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 9 பேர் கொல்லப்பட்டார்கள். ஒரே ஒருவன் மட்டும் பிடிபட்டான். அவன்தான் அஜ்மல் கசாப். இப்படி மும்பையில் கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள். அப்படிப்பட்ட இவர்களுக்கு இன்னமும் ரத்த வெறி அடங்கவில்லை போலும். இந்தியாவில் நாச வேலை நடத்தும் திட்டத்தோடு சுமார் 200 தீவிரவாதிகள் காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கு அப்பால் பதுங்கி இருப்பதாக தற்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. இவர்கள் ஆயுதங்களுடன் எல்லைக்கு அப்பால் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது. ஒருவேளை இவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவினால் அந்த ஊடுருவலை முறியடித்து வெற்றி காண்போம் என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. ஒரு பக்கம் பேச்சு நடத்த துடிக்கும் பாகிஸ்தான், மறுபக்கம் நாசவேலைகளை நடத்தவும் திட்டமிடுவதுதான் வேதனைக்குரிய விஷயம். தீவிரவாதத்தை ஒழித்தால்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று இந்தியா பலமுறை எச்சரித்து விட்டது. ஆனால் அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல்தான் உள்ளது. தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தும் கூட அமைதி பாதையில் அந்த நாடு இன்னமும் செல்லவில்லை. தீவிரவாதிகளை ஒடுக்கவும் பாகிஸ்தான் அரசு தயாராக இல்லை போலும். அதனால்தான் அவர்கள் இந்திய எல்லை பகுதியில் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் சரி, இவர்கள் எத்தனை முறை ஊடுருவினாலும் சரி அவர்களுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகத்தான் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
ஜெயலலிதா ஆட்சி தமிழகத்தில் அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும்: டி.டி.வி. தினகரன்
27 Jan 2026மதுரை: ஜெயலலிதா ஆட்சி அமைய ஓ.பி.எஸ். எங்களுடன் இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம் என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கும்பகோணத்தில் இன்று நடைபெறும் இ.யூ.மு.லீக் மாநாட்டில்பங்கேற்று முதல்வா் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
27 Jan 2026சென்னை, கும்பகோணத்தில் இன்று (ஜன.28) நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறாா்.
-
சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு: முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
27 Jan 2026சென்னை, வரும் 02.02.2026 மற்றும் 03.02.2026 அன்று நடைபெறவுள்ள "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு-2026" தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் துவக்கி வைக்கப்படவுள்ளத
-
ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் தொடர் இன்று ஆரம்பம்
27 Jan 2026டெல்லி, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகிறது.
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் போராட்டம்; 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை
27 Jan 2026மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக 12 பேருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
-
சென்னை, கிண்டியில் ரூ.417 கோடி மதிப்பில் குழந்தைகளுக்கான மருத்துவமனை: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
27 Jan 2026சென்னை: சென்னை கிண்டியில் ரூ.417.07 கோடி செலவில் அமையவுள்ள குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டிடத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
கதாநாயகியாக இருக்கும்: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை குறித்து தஞ்சையில் கனிமொழி எம்.பி. பேச்சு
27 Jan 2026தஞ்சாவூர், தி.மு.க.
-
இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
27 Jan 2026சென்னை, இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று (ஜன.
-
தே.ஜ.க. கூட்டணியில் டி.டி.வி.தினகரன்: த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் விளக்கம்
27 Jan 2026சென்னை: த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கத்தான் டி.டி.வி.தினகரன் விரும்பினார் என்று த.வெ.க. தலைமை நிர்வாகி செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடகா மாநிலத்தில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: சித்தராமையா, சிவக்குமார் கைது
27 Jan 2026பெங்களூரு: கர்நாடகாவில் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற சித்தராமையா, சிவக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி, இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
18 ஆண்டுகால பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், கையெழுத்தானதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
-
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Jan 2026சென்னை, பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு என்று உலக மகளிர் உச்சி மாநாட்டை துவக்கி வைத்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் முன்னேறாது என்ற
-
தென்தமிழகத்தில் ஐந்து நாட்கள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
27 Jan 2026சென்னை: தென்தமிழகத்தின் வரும் பிப்.1 வரை 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ‘அனைத்து ஒப்பந்தங்களின் தாய்’ வர்த்தக ஒப்பந்தம் முடிவானது: பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு
27 Jan 2026புதுடெல்லி, இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான ஒப்பந்தங்களின் தாய் வர்த்தக ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
-
தொடர்ந்து 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய வரலாறு படைக்கிறார் நிர்மலா
27 Jan 2026புதுடெல்லி: இந்திய பாராளுமன்றத்தில் வருகிற 1-ந்தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார்.
-
ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்: பட்ஜெட் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்கும்படி கோரிக்கை
27 Jan 2026டெல்லி, பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது.
-
த.வெ.க.வுடன் ராமதாஸ் கூட்டணியா?
27 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தரப்பு தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
27 Jan 2026- நெல்லை நகரம் லட்சுபி நரசிங்க பெருமாள் வருசாபிசேகம்
- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் தந்த பல்லக்கு, மாலை தங்க குதிரை வாகனம், அம்பாள் தங்க பல்லக்கு
-
இன்றைய ராசிபலன்
27 Jan 2026 -
இன்றைய நாள் எப்படி?
27 Jan 2026


