எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, ஜூலை 28 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லைக்கு அப்பால் இந்தியாவில் நாச வேலைகளை நடத்தும் சதித் திட்டத்தோடு 200 பாக். தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றால் அந்த ஊடுருவலை முறியடிக்க இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தையும் மீறி பாகிஸ்தான் ராணுவத்தினரும் சரி, பாகிஸ்தான் தீவிரவாதிகளும் சரி. நமது எல்லை பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு கார்கில் பகுதியில் ஊடுருவிய இவர்களை இந்திய ராணுவம் ஓட ஓட விரட்டியடித்தது. அந்த போரில் பாகிஸ்தானுக்கு படுதோல்வி ஏற்பட்டது. ஆனாலும் கூட பாகிஸ்தானுக்கு இன்னமும் புத்தி வரவில்லை. அவ்வப்போது எல்லை பகுதியில் ஊடுருவல் முயற்சிகளை நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப் சில மாதங்களுக்கு முன் பதவியேற்றார். அப்போது இந்தியாவுடன் நட்புறவை விரும்புவதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்தார். இப்போதும் அதைத்தான் அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் ராணுவமும் சரி, தீவிரவாதிகளும் சரி, இந்தியாவுக்கு தொல்லை கொடுப்பதையும், தாக்குதல் நடத்துவதையும் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அங்கு தாஜ் ஓட்டல், நாரிமன் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களை கொடூரமான முறையில் தாக்கினார்கள். இதில் அதிகாரிகள், பொதுமக்கள் என 160க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அப்போது நடந்த கடும் சண்டையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 9 பேர் கொல்லப்பட்டார்கள். ஒரே ஒருவன் மட்டும் பிடிபட்டான். அவன்தான் அஜ்மல் கசாப். இப்படி மும்பையில் கொடூர தாக்குதலை நடத்தியவர்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகள். அப்படிப்பட்ட இவர்களுக்கு இன்னமும் ரத்த வெறி அடங்கவில்லை போலும். இந்தியாவில் நாச வேலை நடத்தும் திட்டத்தோடு சுமார் 200 தீவிரவாதிகள் காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கு அப்பால் பதுங்கி இருப்பதாக தற்போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. இவர்கள் ஆயுதங்களுடன் எல்லைக்கு அப்பால் சுற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகிறது. ஒருவேளை இவர்கள் இந்தியாவுக்குள் ஊடுருவினால் அந்த ஊடுருவலை முறியடித்து வெற்றி காண்போம் என்று இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கவிருப்பதாகவும் சில தகவல்கள் கூறுகின்றன. ஒரு பக்கம் பேச்சு நடத்த துடிக்கும் பாகிஸ்தான், மறுபக்கம் நாசவேலைகளை நடத்தவும் திட்டமிடுவதுதான் வேதனைக்குரிய விஷயம். தீவிரவாதத்தை ஒழித்தால்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று இந்தியா பலமுறை எச்சரித்து விட்டது. ஆனால் அவை அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல்தான் உள்ளது. தீவிரவாதிகளை ஒழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தும் கூட அமைதி பாதையில் அந்த நாடு இன்னமும் செல்லவில்லை. தீவிரவாதிகளை ஒடுக்கவும் பாகிஸ்தான் அரசு தயாராக இல்லை போலும். அதனால்தான் அவர்கள் இந்திய எல்லை பகுதியில் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் சரி, இவர்கள் எத்தனை முறை ஊடுருவினாலும் சரி அவர்களுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகத்தான் உள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது: