முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

உலகின் முதன் எஸ்எம்எஸ்

உலகிலேயே முதன் முதலில் அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ் எதுவென்று பலருக்கும் தெரியாது. வோடோபோன் நிறுவனம்தான் முதன் முதலில் தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த எஸ்.எம்.எஸ் வசதியை அறிமுகம் செய்தது. அதாவது நெயில் பப்புவோர்த் என்பவர் தனது கணினி வழியாக ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவருக்கு ‘மேர்ரி கிறிஸ்துமஸ்’ (‘Merry Christmas’) என்கிற எஸ்.எம்.எஸ்-யை முதன்முதலில் அனுப்பினார். வோடோபோன் நிறுவனத்தின் அப்போதைய தலைமை அதிகாரிதான் இந்த ரிச்சர்ட் ஜார்விஸ் என்பவர் ஆவார். ஆர்பிட்டல் 901 மொபைலுக்கு இந்த எஸ்.எம்.எஸ்-யை அனுப்பி உள்ளார். இது சுமார் 14 கேரக்டர்களை கொண்டது. இந்த எஸ்.எம்.எஸ் 1992 ஆம் வருடம் முதன் முதலில் அனுப்பப்பட்டது. இதில் இன்னொரு சுவாரசியம் என்ன தெரியும் தற்போது இந்த எஸ்எம்எஸ் சுமார் 1.70 லட்சம் யூரோவுக்கு ஏலத்துக்கு வருகிறது என்பதுதான்.

பால் உற்பத்தியை அதிகரிக்க செய்ய பசுக்களுக்கு சிறப்பு விஆர் கண்ணாடிகள்

தொழில் நுட்ப வளர்ச்சி இன்றைய கால கட்டத்தில் கன்னாபின்னாவென தறிகெட்டு போய் கொண்டிருக்கிறது. எதெதற்கு கருவிகள் வரும் அது எப்படி வரும் என்று கற்பனை செய்ய முடியாத அளவுக்கு சகலும் சாதனம் மயம் என்றாகி விட்டது. அண்மையில் பசு மாடுகள் அதிக பாலை தர வேண்டும் என்பதற்காக வெர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. துருக்கி நாட்டைச் சேர்ந்த İzzet Koçak என்ற விவசாயிதான் இந்த புதுமையான கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். எங்களிடம் உள்ள பசுக்களில் 2 பசுக்களை தேர்வு செய்து அவற்றுக்கு விஆர் கண்ணாடிகளை அணிவித்தோம். அதில் பசுமையான சூழலை படம் பிடித்து காட்டினோம். தற்போது அவை கூடுதலாக 27 லிட்டர் பால் கறக்கின்றன என்கிறார். என்ன கொடும சார் இது என்றுதான் நமக்கு சொல்லத் தோன்றுகிறது. எல்லாம் கலி காலம் சாரி..டிஜிட்டல் காலம்.

காட்டன் சட்டை தயாரிக்க எவ்வளவு நீர் வேண்டும் தெரியுமா?

இன்றைய நவீன யுகத்தில் காட்டன் சர்ட்தான் இளைஞர்களின் மோஸ்தராக உள்ளது. ஆனால் இதை தயாரிப்பது அத்தனை சுலபம் கிடையாது. காட்டன் துணிகளை உருவாக்க ஏராளமான நீர் தேவைப்படும். உதாரணமாக சொன்னால் ஒரு காட்டன் டீ சர்ட் தயாரிக்க பயன்படும் நீரை ஒரு மனிதன் 900 நாட்களுக்கு பருகலாம். அதாவது ஒரு காட்டன் சர்ட் தயாரிக்க 2800 லிட்டர் தேவைப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்க புல்வெளியில் 9 மணி நேரம் தேங்க விடுவதற்கு இணையான அளவுக்கு நீர் தேவைப்படும்.

எதிரியா நண்பனா என கண்டு பிடிக்கும் நீர்யானைகள்

காட்டில் வளரும் நீர் யானைகள் அதிகம் ஒலி எழுப்பக் கூடியவை. அதன் சத்தம் ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீண்ட தூரத்துக்கு எதிரொலிக்கும். 'வீஸ் ஹாங்க்ஸ்' என்று அழைக்கப்படும் ஒரு வித ஒலியை, நீர்யானைகள் எதற்கு எழுப்புகின்றன என்று இதுவரை தெரியாமல் இருந்தது. ஆப்ரிக்காவில் நீர்யானைகள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், அந்த தனித்துவமான ஒலி, தன் நண்பர்கள் முதல் எதிரிகள் வரை பிரித்துக் கூற பயன்படுவதாகக் கூறுகின்றனர். மேலும் நீர்யானைகள் தங்கள் கூட்டத்தில் உள்ள மற்ற நீர்யானைகளின் குரலைக் கொண்டு, தனித்துவமாக அடையாளம் கண்டு கொள்ளும் எனவும் கூறியுள்ளனர். நீர் யானைகளால் தன் நண்பர்கள், உறவினர்கள், அறிமுகமில்லாத நீர்யானைகளை அதன் குரலோசையைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்கின்றன.

நினைவாற்றல் அதிகம்

யானைகள் எதையும் மறக்காது. ஆனால், பெரும்பாலும் தூங்குவதே இல்லை. நல்ல நினைவாற்றலுக்கு தூக்கம் மிக அவசியம். ஆனால் போட்ஸ்வானா வகை யானைகளை ஆராய்ந்ததில், அவை சராசரியாக ஒரு நாளைக்கு 2 மணி நேரமே தூங்குவதாகவும் சிலநாட்கள் அவை தூங்குவதே இல்லை, எனினும் அவற்றின் நினைவாற்றல் அதிகமாக உள்ளது.

ஸ்மார்ட் போன் தண்ணீரில் விழுந்து விட்டால்..

உங்கள் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டப்படாமல் உடனே ஸ்மார்ட்போனை தண்ணீரிலிருந்து எடுக்க வேண்டும். தண்ணீரிலிருந்து எடுத்த ஸ்மார்ட்போனை ஆன் செய்யாமல், முதலில் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். அதற்கு மேல் உங்கள் ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப்-ஆகவில்லை என்றால் பவர் பட்டனை அழுத்திப் பிடித்தால் போதும் உடனே சுவிட்ச் ஆப்-ஆகிவிடும்.குறிப்பிட்ட நேரம் வரை உங்கள் ஸ்மார்ட்போன் ஆன் செய்யாமல் இருப்பது நல்லது. ஸ்மார்ட்போன் சுவிட்ச் ஆப் நிலையில் இருக்கும் போது சார்ஜ் செய்தல் கூடாது, ஒருவேலை நீங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்தால் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும்.சிலர் ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க மைக்ரோவேவ் ஓவன் சாதனம், அல்லது நெருப்பு போன்றவற்றை பயன்படுத்துவார்கள், அவ்வாறு செய்யக்கூடாது இதுவும் வெடிக்கும் நிலைக்கு தள்ளப்படும். அடுத்து போனில் இருக்கும் எஸ்டி கார்டு, பேட்டரி, சிம் போன்றவற்றை எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை எடுக்க முதலில் சூரியஒளியைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது, சூரியஒளி வெப்பத்தால் உடனே ஸ்மார்ட்போனில் இருக்கும் தண்ணீரை உலர்த்த முடியும். எப்படியிருந்தாலும் உங்கள் செல்போனை ஆன் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் உடனடியாக அதற்கான சர்வீஸ் செண்டரில் கொடுத்துவிடுவது சிறந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago