2000 ஆண்டுகளுக்கு முன் சீனாவை ஆண்டு வந்த ஹூவான் ஹெங் என்ற அரசன் உலகின் முதல் காற்றாடியை பறக்கவிட்டார். பின்னர் மூங்கில், மெல்லிய பட்டுத்துணி, நூலுடன் நல்ல பட்டங்களை உருவாக்கினார்கள். ஒவ்வொரு ஆண்டும் சீனர்கள் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை பட்டங்கள் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
அமெரிக்காவின் ஆறாவது ஜனாதிபதியாக பதவி வகித்தவர் John Quincy Adams இவர் 1825 முதல் 1829 வரை அதிபராக இருந்தார் அப்போது அவருக்கு பிரெஞ்சு தூதர் முதலை ஒன்றை செல்லப்பிராணியாக பரிசாக வழங்கினார் அந்த முதலையை ஜான் குவின்சி வெள்ளை மாளிகையில் உள்ள நீச்சல் குளத்தில் வளர்த்து வந்தார் அங்கு அது ஜாலியாக நீந்தி விளையாடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார் இவர் முற்றிலும் வித்தியாசமான அதிபர் தானே.
பார்ப்பதற்கு கட்டை விரல் ரேகை போல காட்சியளிக்கும் இந்த படத்தில் உள்ளது ஒரு தீவு என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. நம்பித்தான் ஆக வேண்டும். இப்படி ஒரு தீவு குரோஷியா நாட்டில் உள்ள அட்லாண்டிக் கடல் பிராந்தியத்தில் உள்ளது. இந்த தீவு முழுவதும் நிறைந்திருக்கும் உலர்ந்த பாறைகளின் குவியல் தான் இதற்கு கைரேகை போன்ற ஒரு தோற்றத்தை அளிக்கிறது. Baljenac என்று அழைக்கப்படும் இந்த குட்டி தீவில் 23 கிமீ பரப்பு அளவுக்கு இது போன்ற பாறைகள், கற்கள் பரந்து விரிந்து நீண்ட சுவர்களை போல காணக் கிடக்கின்றன. தற்போதைய இணைய யுகத்தில் இந்த புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். இதை ஐநா பாரம்பரிய பட்டியலில் சேர்த்து பாதுகாக்க வேண்டும் என குரோஷிய அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறைந்த அளவு இணைய வேகத்திலும் சிறப்பாக இயங்கும் வகையிலான ஸ்கைப் லைட் செயலியை இந்திய பயனாளர்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பிரத்யேகமாக வடிவமைத்து அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் இயங்கும் இந்த செயலி, குறைவான இணைய வேகம் கொண்ட மொபைல் போன்களிலும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளிலும் ஸ்கைப் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஸ்கைப் லைட் செயலியின் செட்டிங்ஸ் உள்ளிட்டவைகளை ஆங்கிலம் தெரிந்திருந்தால்தான் கையாள முடியும் என்ற நிலை மாறி, பிராந்திய மொழிகளிலேயே அந்த செயலியைக் கையாள முடியும். இந்த செயலியை கூகுள் ப்ளேஸ்டோரில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கடல்கள் பூமியின் 71 சதவீத பரப்பை ஆக்கிரமித்துள்ளது மட்டுமல்லாமல், உயிர்களின் சுவாசத்திற்குத் தேவையான 70 சதவீத பிராண வாயுவையும் கடல்களே உற்பத்தி செய்கின்றன. கடல்நீர் பசிபிக் , அட்லாண்டிக் , இந்தியப் , ஆர்டிக் , அண்டார்டிக் பெருங்கடல் என 5 வகைப்படும். பசிபிக் பெருங்கடல், உலக கடல்களில் எல்லாம் பெரியது. பூமியின் 30 சதவீத பரப்பை இது ஆக்கிரமித்துள்ளது.
இந்தியாவின் முதல் மிதக்கும் சந்தை கொல்கத்தாவின் மேற்கு வங்கத்தில் உள்ள பட்டூலியில் கடந்த 2018 இல் திறக்கப்பட்டது. இந்தச் சந்தையில் 200 கடைகளுக்கு மேல் உள்ளது. கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையம் கட்டமைத்துள்ள இந்தச் சந்தையில் படகுகள் மூலமாகப் பட்டூலியில் உள்ள ஏரியில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குக் கடைக்காரர்கள் பழம், காய்கறிகள், மீன் போன்றவை கிடைக்கும். படகுகள் மூலமாகக் கடைக்காரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களது கடைகளைத் திறக்க மற்றும் பிற கட்டுமான வசதிகளை ஏற்பாடு செய்ய 10 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். அருகில் பிற சந்தைகள் இருந்தாலும் இங்கு வந்து பொருட்களை வாங்குவது என்பது புதிய அனுபவமாக உள்ளது என்று வாடிக்கையாளர்களும் வணிகர்களும் கூறுகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


