முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செயற்கை சூரியன்

149 சக்தி வாய்ந்த செனான் ஆர்க் மின்விளக்குகளைப் பயன்படுத்தி, உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை ஜெர்மனி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ஒளி அமைப்பு, சைன் லைட் என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் சூரியனை விட 10,000 மடங்கு கதிர்வீச்சு வெளிவருமாம். ஆராய்ச்சியாளர்கள் ஒரு 8x8 அங்குல (20x20cm) உலோகத் தாள் மீது 350 கிலோவாட் தேன்கூடு வடிவ வரிசையில் விளக்குகளை பொருத்தி செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். இது 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தரும் எனவும் கூறப்படுகிறது. சோதனை முயற்சியில் இருக்கும் இந்தப் புதிய கண்டுபிடிப்பு சூற்றுச்சூழலை பாதிக்காத ஓர் ஆற்றல் உற்பத்தி மையமாகவும், ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் முயற்சி என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களோடு ஏலியன்கள் பேசினரா? நீடிக்கும் ரேடியோ சிக்னல் புதிர்கள்

வேற்று கிரகங்களில் இருந்து ரேடியோ சிக்னல்கள் வந்தால் அவற்றை ரீசீவ் செய்வதற்கான ஆய்வுகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. அதில் முக்கியமான ஒன்றுதான் ஓஹேயோ பல்கலை கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ரேடியோ அப்சர்வேட்டரி ஆய்வகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிக் இயர் ரேடியோ டெலஸ்கோப் என்ற அமைப்பாகும். பிரபஞ்சத்துக்கு வெளியிலிருந்து வரும் ரேடியோ அலைகளை உள்வாங்கி அதை ஆய்வு செய்வதற்காகவே உருவாக்கப்பட்டது இந்த அமைப்பு. இதில் சுவாரசியமான விஷயம் ஏலியன்களை குறிவைத்தே இந்த ஆய்வகம் செயல்பட்டது. அது போன்ற தகவல் ஒன்றையும் இந்த ரேடியோ டெலஸ்கோப் ரீசீவ் செய்தது என்பதுதான் ஆச்சரியம்.பிரபஞ்சம் முழுவதும் ஹைட்ரஜன் வாயு நிரம்பியுள்ளது என்றும், அதன் ரேடியோ அதிர்வெண் 1420 மெகா ஹெர்ட்ஸ் என்பதும் நம் அனைவருக்கும் தெரியும். இந்த சூழலில்தான் 1977 இல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரு அதிசயம் நடந்தது. ஜெர்ரி இகாமென் என்ற ஆய்வாளர் பணியில் இருந்த போது பிரபஞ்சத்துக்கு வெளியில் இருந்து வந்த வித்தியாசமான ரேடியோ அலை ஒன்றை பதிவு செய்துள்ளார். அது வெறும் 72 விநாடிகள் மட்டுமே நீடித்துள்ளது. அதை டீகோட் செய்த போதுதான் உலகுக்கே மிகப் பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. அது ஆங்கிலத்தில் 'வாவ்' என அது குறிப்பிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியானால் பூமியை, மனிதனை பார்த்து வாவ் என்று கூறியது யார் என்ற மர்மம் இன்னும் விலகாத புதிராகவே நீடித்து வருகிறது. இது குறித்த ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன. ஏலியன்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட அமைப்புகளில் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் என்ற கின்னஸ் சாதனையையும் 1995 இல் இது படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் 98 இல் இந்த அப்சர்வேட்டரி கலைக்கப்பட்டு விட்டது.

குடிநீருக்காக ....

அண்டார்டிகாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு குடிநீர் எடுக்கும் திட்டத்தை 2019-ம் ஆண்டிற்குள் தொடங்க, அமீரக நாடுகள் திட்டமிட்டுள்ளன. குடிநீர் பிரச்சனையை தீர்க்க அண்டார்டிகாவிலிருந்து பனிப்பாறைகளை வெட்டி எடுத்து, கடல்மார்க்கமாக 9,200 கி.மீ கொண்டு வந்து, பின்னர் அதை தண்ணீராக்கி விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு சுமார் 500 மில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.

முதல் தலைமுறை கண்ணாடிகள் எதனால் செய்யப்பட்டவை தெரியுமா?

முதல் தலைமுறை கண்ணாடிகள் எதனால் செய்யப்பட்டவை தெரியுமா... முதலில் கலனில் நிரப்பிய நீரால் முகம் பார்த்த மனிதன் பின்னர் கிமு 6 ஆயிரம் வாக்கில் நன்றாக பளபளப்பூட்டப்பட்ட எரிமலை குழம்பு உறைந்த கற்களையே முகம் பார்க்கும் கண்ணாடியாக பயன்படுத்தி வந்தான். இது பயன்பாட்டுக்கு வந்ததும் நீர் கண்ணாடி விடை பெற்றது. கல் கண்ணாடி ஆட்சி புரிந்தது. அதன் பின்னர் மெசபடோமியா பகுதிகளில் பாலீஸ் செய்யப்பட்ட செப்பு தகடுகள் கண்ணாடிகளாக பயன்படுத்திய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

தொடக்க கால வேக்குவம் கிளீனரை குதிரைகள் இழுத்து சென்றது தெரியுமா?

இன்றைக்கு அனைத்து வீடுகளிலும் அன்றாட வீட்டு உபயோக பொருள்களில் ஒன்றாக வேக்குவம் கிளீனரும் மாறி நீண்ட காலமாகி விட்டது. ஆனால் தொடக்க காலத்தில் அவற்றை குதிரையில் பூட்டி இழுத்து சென்றனர் என்றால் நம்ப முடிகிறதா..நம்மூர் கழிவுநீர் லாரிகளை போல மிகப் பெரிய குழாய்கள் பொருத்தப்பட்ட டேங்கரை குதிரைகள் தெருக்களில் இழுத்து செல்லும்.  அந்த குழாய்களை ஜன்னல் வழியாக வீடுகளுக்குள் கொண்டு சென்று பெட்ரோல் மூலம் இயக்கப்படும் மோட்டார்கள் மூலம்  தூசுகளும், குப்பைகளும் உறிஞ்சப்பட்டு டேங்கர்களில் சேமிக்கப்படும். அதுதான் இன்றைக்கு கையடக்க வேக்குவம் கிளீனரின் மூதாதை என்றால் ஆச்சரியம் தானே.

முகப்பருவை குறைக்க

கொழுப்பு நீக்கப்பட்ட உணவுப் பொருட்களும் பிம்பிளை உண்டாக்கும். கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் அதிகமாக குடிப்பதாலும், குறிப்பாக கொழுப்பு குறைவான தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது, அந்த சர்க்கரை கொலாஜன் இழைகளைப் பாதிப்பதோடு, பாதிக்கப்பட்ட சரும செல்களை புதுப்பிக்க முடியாமலும் செய்யும். இதனால் முகப்பரு ஏற்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago