முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

ஏப்.1 ஏன் முட்டாள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது

ஏப்ரல் 1-ம் தேதி உலகம் முழுவதும் உள்ளவர்கள் முட்டாள்கள் தினமாக கொண்டாடுகின்றனர். அப்போது சின்ன ஏமாற்றுகள், நகைச்சுவைகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வழக்கம் எப்போதிருந்து தொடங்கியது. 1381-ல் இங்கிலாந்து அரசர் 2-வது ரிச்சர்டுக்கும், ராணி பொகிமியாவின் ஆனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் மார்ச் 32-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதை கேள்விபட்டதும் மக்கள் அதை கொண்டாட தயாராகினர். அப்போதுதான் இடையிலேயே மார்ச்சில் 32 தேதி இல்லையே என தெரிய வந்தது. உடனே கொண்டாடத்தை நிறுத்தினர். அதுவே பின்னர் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. மற்றொரு காரணம் 1582-ல் பிரான்சில் பயன்பாட்டில் இருந்த பழைய காலண்டரை நீக்கி விட்டு சார்லஸ் போப் புதிய ரோமானிய காலண்டரை அறிமுகப்படுத்தினார். இருந்த போதிலும் பலரும் பழைய காலண்டரையே பயன்படுத்தினர். இதை குறிப்பிடும் வகையிலும் ஏப்ரல் 1 முட்டாள்கள் தினமாக அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆட்சியின் போது, 19-ம் நூற்றாண்டிலிருந்து இது தொடங்கியது.

அமெரிக்க பெண்களை அச்சுறுத்தும் இருதய நோய்

அமெரிக்கா்களிடம் கடந்த சில ஆண்டுகளாக இருதய நோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக புரோக்கன் ஹார்ட் சின்ட்ரோம் எனப்படும் நோய் மாரடைப்பு நிகரானதாக மருத்துவ நிபுணர்களால் கணிக்கப்பட்டுள்ளது.  இது கடந்த 15 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளது.அதிலும் இதனால் பாதிக்கப்படுபவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்பது கவலைக்குறிய அம்சமாகும். இந்த பாதிப்பானது 50 முதல் 74 வயதினரை தாக்கும் போது நிலைமை இன்னும் விபரீதமாகிறது என்கின்றனர் மருத்துவர்கள். பெருகி வரும் விவாகரத்துகள், வேலைப்பளு, மாறி வரும் சமூக சூழல் ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தம், சோரவு போன்றவையே இது ஏற்பட காரணம் என்கின்றனர்மருத்துவ வல்லுநர்கள். கடந்த 2006 லிருந்து 2017 வரை இருதய கோளாறு தொடர்பாக இந்த வயது பிரிவினர்கள் சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர் என்கிறது அந்நாட்டு புள்ளிவிபரம். அதில் பெரும்பாலோனோர் 50 வயதை கடந்த பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தொழில்நுட்பம்

ஜெர்மனியை சேர்ந்த கார் தயாரிக்கும் நிறுவனமான வோக்ஸ்வாகன் ஸ்டேரிங் மற்றும் சாவி இல்லாமல் முழுவதுமாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலமாக வீடியோ கேம் விளையாடும் போது காரை எப்படி ஓட்டுவோமோ அப்படியே இனி நிஜ வாழ்க்கையிலும் ஓட்ட முடியுமாம். சந்தையில் விரைவில் வரும் இந்த காரின் விலை சற்று அதிகம்

திப்பு சுல்தான் ஒரு ராக்கெட் விஞ்ஞானி

இன்றைக்கு செயற்கை கோள்களை சுமந்த படி விண்ணில் பறக்கும் ராக்கெட்டுகளை நாம் தொலைகாட்சிகளில் பார்த்திருப்போம். அதே போல ராணுவத்தினரின் போர் பயிற்சியின் போதும் ராக்கெட் வடிவிலான ஏவுகணைகளை கண்டிருப்போம். ராக்கெட், ஏவுகணை இரண்டும் ஒரே தொழில்நுட்பத்தில் செயல்படக் கூடியவைதான். இதில் என்ன ஆச்சரியம் என்றால் 18 ஆம் நூற்றாண்டுவரை அனைத்து நாடுகளிலும் ராக்கெட்டுகள் மரம் அல்லது மூங்கிலை கொண்டே தயாரிக்கப்பட்டன. உலகிலேயே முதன் முதலாக உலோகத்தினாலான ராக்கெட்டை செய்தவன் திப்பு சுல்தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். குண்டூர் யுத்தத்தின் போது ஆங்கில படைகளை உலோக ராக்கெட்டுகளை பயன்படுத்தி தெறிக்க விட்டான். அவன் உருவாக்கிய ராக்கெட்டுகள் 20 செமீ நீளம் 8 செமீ விட்டமும் கொண்டவையாக சுமார் 3 கிமீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டவையாக விளங்கின. அன்றைய கால கட்டத்தில் மிக தொலை தூரம் சென்று தாக்கும் ராக்கெட் திப்புவினுடையது மட்டும்தான் என்பது ஒரு வரலாற்று ஆச்சரியம் தானே..

ஆண்களின் குணம்

ஆண்கள் தைரியமான மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களை அதிகம் விரும்புவார்கள். இதன்மூலம், தனக்கு துணையாக வரும் பெண் எப்பொழுதும் தன்னை சார்ந்து இல்லாமல் இருக்க முடியும் என நம்புகின்றனர். எப்போதும் நச்சரித்துக் கொண்டே இருக்கும் பெண்களைக் கண்டால், ஆண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. புத்திசாலித்தனத்துடன் இருக்கும் பெண்களை பெரிதும் விரும்புவர்.

பிறந்த குழந்தைகள் கண்ணீர் விடுவதில்லை

பிறந்த குழந்தைள் வீறிட்டு அழுவதை நாம் கேட்டிருப்போம். பசியின் போதும், தாயின் துணை தேடியும் பிறந்த குழந்தைகள் அழுவது வழக்கம். ஆனால் நமக்கு இதுவரை தெரியாத ஒன்று என்ன தெரியுமா.. அவ்வாறு அழுதாலும் அவர்களுக்கு கண்ணீர் வருவதில்லை என்பதுதான். ஏன் தெரியுமா.. பிறந்த குழந்தையின் கண்களில் கண்ணீர் சுரப்பிகள் இருக்காது. கண்ணீர் சுரப்பிகள் 4 முதல் 12 வாரங்களுக்கு பிறகே வளரத் தொடங்கும். பிறகென்ன அதற்கு பிறகு கண்ணீர் மழைதான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago