தற்காலத்தில் மன அழுத்தம், குழப்பம் போன்றவற்றால் சிக்கி தவிப்பர்வர்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீண்டுவர உட்டியாணா ஆசனம் பெரிதும் உதவுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வருபவர்களின் முகம் மிகவும் பொலிவாக காணப்படும். சுறுசுறுப்பு வந்தடையும். இனவிருத்தி உறுப்புகள் ஆரோக்கியமடைந்து ஆண்மை மிகுதிப்படும். குறிப்பாக ஆண்மை நமது கட்டுப்பாட்டுக்குள் வரும்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
இத்தாலியில் 42 மீட்டர் ஆழம் கொண்ட நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. வெந்நீர் ஊற்றுக்கு பெயர் போன இத்தாலியின் கொல்லி இகானி பகுதியில் இந்த நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. 10 மீட்டர் மற்றும் 20 மீட்டர் ஆழத்தில் குகைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீச்சல் குளத்தின் சிறப்பம்சத்தை கேள்விப்பட்ட பல நீச்சல் வீரர்கள் இங்கு நீத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
76 ஆண்டுகளாக ஒலிபரப்பாகி வந்த பிபிசி தமிழோசையின் சிற்றலை வானொலி சேவையை நிறுத்துவதாக பிபிசி அறிவித்துள்ளது. தொலைக்காட்சி மற்றும் இணையம் போன்ற புதிய ஊடகங்களின் தாக்கத்தால் வானொலி சேவைகள் ஆதரவை இழந்து வருவதே இந்த முடிவுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுக்காய், மாசிக்காய், சுக்கு, பூண்டு போன்றவை பல் வலி, ஈறுவீக்கம் பிரச்னைகளுக்கு மருந்தாகிறது. கடுக்காய் அற்புதமான மருந்தாக விளங்குகிறது. துவர்ப்பு சுவை நிறைந்த இது பற்களில் ஏற்படும் பிரச்னையை குணப்படுத்துகிறது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை போக்கும் தன்மை உடையது. சுக்கு பற்களில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்கிறது. மாசிக்காய் பொடி மிகுந்த துவர்ப்பு சுவை உடையது. பல் வலியை சரிசெய்ய கூடியது. பூண்டு, இந்துப்பு ஆகியவையும் பல் நோய்களுக்கு மருந்தாகிறது.
கடலுக்கு அடியில் மிகவும் பிரமாண்டமான ஏசு சிலை உள்ளது. அதை ஆண்டுதோறும் ஏராளமானோர் பார்த்து செல்கின்றனர் என்றால் நம்ப முடிகிறதா..கிறிஸ்ட் ஆஃப் தி அபிஸ் என்பது இயேசு கிறிஸ்துவின் நீரில் மூழ்கிய வெண்கலச் சிலை ஆகும், முதலாவது மத்தியதரைக் கடலில், சான் ஃப்ரூட்டூசோவுக்கு அப்பால், இத்தாலிய ரிவியராவில் உள்ள காமோக்லி மற்றும் போர்டோஃபினோவிற்கு இடையே அமைந்துள்ளது. கிறிஸ்துவின் சிலை 25 அடி நீரில் நிற்கிறது. நீட்டிய கைகள் மேற்பரப்பில் இருந்து 10 அடிக்கும் குறைவாக உள்ளது. அங்கு நீங்கள் சிலையை மேற்பரப்பிலிருந்து பார்க்க முடியும் அல்லது சிலையை நெருக்கமாகப் பார்க்க கீழே டைவ் செய்து சென்றும் பார்க்கலாம். உலகின் மிகவும் அரிதான இடங்களில் இந்த கடலுக்கு அடியில் ஏசு சிலையும் ஒன்றாகும் ஏன் கடலுக்கு அடியில் சிலை... பிரபல கடல் மூழ்கி வீரர் Duilio Marcante என்பவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இத்தாலி சிற்பி Guido Galletti என்பவர் இந்த பிரமாண்ட சிலையை உருவாக்கி கடலுக்கு அடியில் நிறுவினார். கடலில் உயிரிகளுக்கும், கடலில் உயிரிழந்தவர்களுக்கும் நினைவு சின்னமாகவும், கடலின் அடியிலிருந்து ஏசு உலகை காப்பார் என்று கருதியும் இது அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இஸ்ரேலில் உள்ள யூதர் வழிபாட்டுத் தலத்தின் நுழைவாயிலில் கி.பி. 300-ஆம் ஆண்டு முதல் கி.பி. 500-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் யூத மத அடையாளமான ‘பத்து கட்டளைகள்’ செதுக்கப்பட்ட கல்வெட்டு 8.5 லட்சம் டாலர்களுக்கு அமெரிக்காவில் ஏலம் போனது. இக்கல்வெட்டை ஏலம் எடுத்தவர் அருங்காட்சியகம் வைக்கவுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


