முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

தேங்காய் துருவுவது ஈஸி...

சமையல் செய்யும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தெரியும்.. எது கடினமானது என்றால்... தேங்காயை உடைத்து சில்லை எடுத்து மிக்ஸியில் போட்டு துருவுவது.. அல்லது கேரட் சீவலால் சீவி.. மிக்ஸியில் போட்டு அரைப்பது.. தண்ணீர் ஊற்றவில்லை என்றால் மிக்ஸியில் தேங்காய் சரியாக அரையாது.. இதனால் துருவல் பதத்துக்கு எடுக்க முடியாது.. இனி அந்த கவலை எல்லாம் வேண்டாம்.. சந்தைக்கு வந்துள்ளது table top wet grinder coconut scraper அது என்னங்க.. புதுசா இருக்கு.. அதான்... கிரைண்டரில் பொருத்தி தேங்காயை துருவும் கருவி.. டேபிள் டாப் கிரைண்டரில் அதை பொருத்த வேண்டியது..தேங்காய் மூடியை வைத்து.. சுவிட்சை இயக்கினால்.. பூ மாதிரி தேங்காய் துருவல் ரெடி.. என்ன இல்லத்தரசிகளே.. இல்லத்தரசர்களே.. தேங்காய் துருவ ரெடியா... அனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கிறது..பாருங்க.. வாங்குங்க.. ஜாலியா துருவுங்க... இந்த பண்டிகை காலத்தில் தேங்காய் பர்பி செய்து உண்டு மகிழுங்கள்..

தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் சில சிறப்பு அம்சங்கள்

தஞ்சை மாவட்டத்திலுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் இரண்டாம் இராஜராஜ சோழனால் கி.பி 1167இல் கட்டப்பட்டது. கோயிலில் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் நடனக்காட்சிகள், போர்க்காட்சிகள், மதநிகழ்வுகள், ரிஷிகள், விலங்குகள், கற்பனை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.இக்கோயிலின் சிறப்பானது சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் சிறப்பிக்கப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களைச் சிற்பங்களாகச் செதுக்கி வைத்துள்ளதே ஆகும். அநபாயச்சோழன் என்று அழைக்கப்படும் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் சேக்கிழாரைக் கொண்டு அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பெரியபுராணத்தை இயற்றினார். அவரது மைந்தனான இரண்டாம் இராஜராஜ சோழன் அவர்களைச் சிற்பங்களாக இக்கோயிலில் செதுக்கிவைத்துள்ளார். தமிழகச் சைவக் கோயில்களில் தாராசுரத்தில் மட்டுமே அறுபத்துமூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் முழுத்தொகுப்பாக காணப்படுகின்றன. தாராசுரம் தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாட்டினைப் பறைசாற்றும் எத்தனயோ சின்னங்களில் இதுவும் ஒன்று. 

'செவ்வாய்' போகலாம்

மனிதர்கள், 2030-ல் செவ்வாய் கிரகத்தில், வசிக்கலாம் என அமெரிக்க விண்வெளி அமைப்பான ‘நாசா’ அறிவித்திருந்த நிலையில், அங்கு கியூரியாசிட்டி என்ற விண்கலம் நடத்திய ஆய்வின் முடிவில், செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ அனைத்து வசதிகளும் இருப்பதாக தெரிவித்தது.தற்போது, செவ்வாய் கிரகத்தில் உதோபியா பிளானிசியா என்ற இடத்தில், 80 மீட்டர் ஆழத்திலிருந்து 170 மீட்டர் ஆழம் வரை உள்ள ஒரு மிகப்பெரிய அளவிலான நீர்த்தேக்கம் உறைந்து காணப்படுவதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது. இந்த தகவலின்படி, அங்கு இதற்கு முன் உயிரினங்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது என நாசா தெரிவித்துள்ளது.

ரயிலின் கடைசி பெட்டியில் மஞ்சள் நிற சாய் கோடுகள் ஏன்?

ரயிலில் மஞ்சள் நிற கோடுகள் கோணல் கோணலாக வரையப்பட்டிருக்கும். இது எதற்காக என்று யோசித்தது உண்டா? இந்த கோடுகள் ரயிலில் எல்லா இடத்திலும் குறியிடப்பட்டிருக்காது. இவை ரயிலின் கடைசி ஜன்னலுக்கு மேல் தான் குறியிடப்பட்டிருக்கும். இவை எதற்காக என்றால், இந்த மஞ்சள் நிற கோடுகள் இருந்தால், அவை முன்பதிவு செய்யப்படாத பெட்டி என்று அர்த்தம். மற்றவை எல்லாம் முன்பதிவு செய்யப்பட்ட ஒன்று. பயணிகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை தெரிந்துகொள்ளவே இந்த குறியீடு. முன் பதிவு செய்யாத பெட்டிகள் நம்மூர்களில் மத்திய பகுதியிலும் இணைக்கப்பட்டிருக்கும். அவற்றிலும் இந்த மஞ்சள் நிற சாய் கோடுகளை காணலாம்.

பிரிண்டட் சர்க்யூட் போர்டை கண்டுபிடித்தவர்

எலெக்ட்ரானிக் உலகில் உள்ள பொருள்களுக்கு மிகவும் முக்கியமானது பிரிண்டட் சர்க்யூட் போர்டு ஆகும். ஒவ்வொரு எலெக்டாரானிக் பொருள்களின் உட்புறமும் பச்சை நிறத்தில் இருக்குமே அதுதான். இதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பவுல் எய்ஸ்லெர். 1936 ஆம் ஆண்டு ரேடியோ என்ற வானொலி பெட்டியை இயங்கச் செய்வதற்காக இந்த பிசிபி எனப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டை கண்டுபிடித்தார்.

புலிக்கு ஆதரவு

அமெரிக்காவில் சின் சினாட்டியில் மிருக காட்சி சாலையில்  மலேசிய புலி ஒன்றால் ஒதுக்கப்பட்ட 3 பெண் குட்டிகளை மிருக காட்சி சாலை ஊழியர் தனது வீட்டுக்கு தூக்கி சென்று வளர்த்தார். அவரது வீட்டில் உள்ள 6 வயது ஆஸ்திரேலிய ஷெப்பர்டு நாய் 3 புலிக்குட்டிகளையும் தற்போது அன்புடன் பராமரித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago