புதுச்சேரியில் உள்ள வாதானூர் கிராமத்தில் பசு ஒன்று அதிசய கன்றை ஈன்றுள்ளது. இதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர். வாதானூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஜெயப்பிரகாஷ். அவர் தனது வீட்டில் 5 க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார். அதில் பசு மாடு ஒன்று அண்மையில் காளை கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இந்த கன்று வழக்கத்துக்கு மாறாக 6 கால்களுடன் பிறந்துள்ளது. இதையடுத்து சுற்று வட்டார கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து இந்த அதிசய கன்றை வந்து பார்த்து ஆச்சரியமடைந்து வருகின்றனர். -
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
செல்போன் போன்ற கையடக்கக் கருவிகளில், தொடுதிரையைத் தாங்கி வெளியான முதல் செல்போன் என்ற பெருமையுடன் ஸ்டீவ் ஜாப்ஸால் ஆப்பிள் ஐபோன் 2007ம் ஆண்டு அறிமுகமானது. ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மூலம் உலகையே மாற்ற முடியும் என்று பத்தே ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் நிரூபித்துள்ளது
உலகிலேயே கடலுக்கு நடுவே மிகவும் அபாயகரமான முறையில் அமைந்துள்ள ஏர்போர்ட் எங்குள்ளது தெரியுமா.. அது வேறெங்கும் இல்லை. இந்தியாவில்தான்.. அகத்தி விமான நிலையம் - லட்சத் தீவுகள்- விமான ஓடுதளத்தை சுற்றிலும் கடல் இது தான் அகத்தி விமான தளத்தின் பிரம்மாண்டம். இந்தியாவின் லட்ச தீவுகளில் அமைந்துள்ளது அகத்தி விமான தளம். விமானத்தில் இருந்து பார்க்கும் போது ரன்வே கடலில் மிதப்பது போல காட்சி அளிக்கும் அனுபவம் மிகப் பெரிய அனுபவம். 1988 முதல் இந்த விமான தளம் செயல்பட்டு வருகிறது. டோர்னியர் 228 ரக விமானங்களை இயக்குவதற்காகவே விமான தளம் முதலில் உருவாக்கப்பட்டது.பின்னர் அருகிலுள்ள கல்பட்டி தீவையும் இணைத்து பாலத்தில் நெடிய விமான ஓடுபாதையை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சூழலியல் காரணங்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. உலகின் அபாயகரமான விமான ஓடுதளங்களில் இதுவும் ஒன்று.
மார்ட்டின் கார்னர் எனும் புகழ் பெற்ற அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர் எழுதிய மிக சிறிய திகில் கதை "உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்து இருந்தான். கதவு தட்டப்பட்டது."
இன்றைக்கு தொழில் நுட்பம் எங்கோ சென்று விட்டது. கணிப்பொறியின் வருகை தொழில் நுட்ப யுகத்தின் புதிய புரட்சி என்று கூட வர்ணிக்கலாம். இதுவரை இருந்து வந்த அனைத்து கைவினை கலைகளையும் மூட்டை கட்ட வைத்து கணிணி வரை கலை மூலம் புதிய கற்பனா உலகை கணிப்பொறி திறந்து விட்டுள்ளது.. அது சரி அதே நேரத்தில் கணிப்பொறி துறையும் தன்னை அதோடு இணையாக வளர்த்துக் கொண்டுள்ளது. உதாரணமாக கணிப்பொறி என்றால் முன்பெல்லாம் பொதி மூட்டை போல பிக்சர் டியூப் மானிட்டர், மிகப் பெரிய மேசை சைசுக்கு சிபியு, தட்டச்சு எந்திரம் மாதிரியான விசைப்பலகை என்ற காலம் மலையேறி விட்டது. தற்போது தொட்டால் உணரும் திரையுடன் மாடலிங் பெண்ணைப் போல மிகவும் ஸ்லிம்மாக மாறிவிட்டது. அதே போல வயர்லெஸ் மவுஸ், கீ போர்டு என அடுத்தடுத்த வரவுகள் அசத்தி வருகின்றன. இதில் மேலும் ஒரு படி முன்னேற்றமாக ஒளியுணர் விசைப்பலகைகள் (லேசர் கீ போர்டுகள்) வந்து விட்டன. ஒரு சிறிய ஒளியை டேபிளில் பாய்ச்சினால் கீ போர்டு வடிவில் தெரியும் வெளிச்சத்தில் தொட்டால் திரையில் தானாகவே செயல்பாடுகள் நடக்கும் வகையில் இந்த புதிய லேசர் விசைப்பலகை வந்து விட்டது. இனி எங்கு சென்றாலும் கீபோர்டை சுமந்து செல்ல வேண்டியதில்லை.. நம்மூர் பொடிடப்பா அளவுக்கு உள்ள அந்த லேசர் விளக்கு போதும்.. விலையும் மலிவுதான்.. ஆன்லைன் ஸ்டோரில் வகைவகையாக அள்ளலாம்..
எலெக்ட்ரானிக் உலகில் உள்ள பொருள்களுக்கு மிகவும் முக்கியமானது பிரிண்டட் சர்க்யூட் போர்டு ஆகும். ஒவ்வொரு எலெக்டாரானிக் பொருள்களின் உட்புறமும் பச்சை நிறத்தில் இருக்குமே அதுதான். இதை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த பவுல் எய்ஸ்லெர். 1936 ஆம் ஆண்டு ரேடியோ என்ற வானொலி பெட்டியை இயங்கச் செய்வதற்காக இந்த பிசிபி எனப்படும் பிரிண்டட் சர்க்யூட் போர்டை கண்டுபிடித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


