இத்தாலி நாட்டிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அந்நகரத்தின் மேயர் முடிவு செய்தார் இதனை அடுத்து லாஸியோ நகரத்தின் மேயர் நிகோலா ஜிங்காரெட்டி என்பவர் இத்தாலியிலுள்ள லாஸியோ என்ற நகரத்தில் திருமணம் செய்துகொண்டு திருமணத்திற்கான ஆதாரத்தை காட்டினால் ரூபாய் 1.67 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பரிசை பெறுவதற்காகவே பலர் திருமணம் செய்ய முன்வந்துள்ளனர் கூறப்படுகிறது. இதே நகரத்தில் தான் பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோலி - நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
கடலில் அரியவகை உயிரினங்கள் வாழ உதவுவது பவளப்பாறைகள். அதேநேரம், கடல்பகுதியின் தட்ப வெட்பத்தைப் பேணுவதிலும் பவளப்பாறைகளுக்கு மிக முக்கிய பங்குண்டு. பவளப் பாறைகளில் காணப்படும் பாலிப்ஸ் உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன. இந்த பாலிப்ஸ் உயிரிழந்து விட்டால் பவளப்பாறைகளும் உயிரிழந்து விடும். உலகின் ஒரு சில கடல் பகுதிகளிலேயே பவளப்பாறைகள் உருவாகின்றன. இவை வளர கடல் அலை குறைவாக இருக்க வேண்டும்; இந்த பாலிப்ஸ் உயிரினம் சாதாரணமாக ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. இந்து மகா சமுத்திரத்தில் மட்டும் 200 வகைகள் காணப்படுகின்றன. இவற்றை கடினமானவை, மிருதுவானவை என 2 ஆக பிரிக்கலாம். பவளப் பாறைகளை சார்ந்து தான் பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள் மற்றும் முள்தோல் பிராணிகளும் அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. மிகப்பெரிய கடல்வளங்களை உள்ளடக்கியதாக இருக்கும் பவளப் பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன் ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது. தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, பவளப் பாறைகளை பலரும் வெட்டி எடுப்பது, கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் இவை பெரிதும் பாதிக்கின்றன.
அலுவலகத்திலோ, கல்விக் கூடங்களிலோ தூங்குபவர்களை நாம் கேலி செய்வதுண்டு. பகல் கனவு பழிக்காது என்பது நமது பழமொழி. ஆனால் அண்மையில் வல்லுநர்கள் மேற்கொண்ட ஆய்வில் பகலில் குட்டி தூக்கம் போட்டால் உடலுக்கும் மனதுக்கும் நல்லது என்கின்றனர். புத்துணர்ச்சி, படைப்பாற்றல், கற்பனைத் திறன், உற்சாகம், நினைவாற்றல், புதுமையான சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், ஆராயும் திறன் கிடைக்கும் என்கின்றனர். கணினியில் இருப்பது போல நமது ஆற்றல் குறையும்போது ஒரு 'ரீஸ்டார்ட் பட்டனை' அழுத்தி மீண்டும் 'சார்ஜ்' செய்து கொண்டால் எப்படியிருக்கும்? இம்மாதிரியான ஒரு ரீஸ்டார்ட் பட்டனாக 'நாப்' எனப்படும் 'குட்டித்தூக்கம்' இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். தூக்கத்திலிருந்து விழித்து கொள்ளும் நேரம் முதல் நமது மூளையில் 'அடினோசின்' எனும் ரசாயனம் அதிகரித்து கொண்டே செல்லும். எனவே நீங்கள் அதிக நேரம் விழித்து கொண்டிருக்கும்போது உங்கள் மூளையில் அடினோசின் அதிகமாகும். அது தூக்க உணர்வை அதிகரிக்கும். குறைந்தது 90 நிமிடங்கள் தூங்க வேண்டும் என்கின்றனர் வல்லுநர்கள். இதெல்லாம் நடக்கிற காரியமா என நினைக்கிறவர்களுக்கு இருக்கவே இருக்கிறது யோகா..தியானம்.. இத்யாதி..
தற்போதைய வைஃபை இணைய இணைப்பை விட நூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் புதிய தொழில்நுட்பம் கண்டறியப்பட்டுள்ளது. அகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விநாடிக்கு 40 ஜிபிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினைப் பெற முடியுமாம்.
இந்தியாவின் முதல் சினிமா "ராஜா ஹரிச்சந்திரா" என்ற படம் 1913ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி கருப்பு வெள்ளையில் வெளியானது. இது ஒரு மெளனப் படம். 40 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்தவர் தாதா சாகிப் பால்கே. முதன் முதலில் மும்பையில் கோரோனேசன் சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் பேசும் படம் "ஆலம் ஆரா:. இப்படம் இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி இயக்கி அவரது இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்திருந்தது. தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆர். நடராஜ முதலியார் என்பவரால் தயாரிக்கப்பட்ட "கீசக வதம்" என்ற மெளனப்படம், அவரது புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் 1916 இல் வெளியிடப்பட்டது. தமிழில் முதல் பேசும் படம் "காளிதாஸ்". இதுவும் 1931 இல் வெளியானது. எச்.எம் ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியிருந்தார். இதன் மூலம் முதல் தமிழ் படத்தின் பாடலாசிரியர் என்ற பெருமைக்குரியவரானார்.
உலக அளவில் ஆண்ட்ராய்டு ஃபோன் பயன்படுத்தும் 10 மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. கடந்த மே மாதம் இந்தியாவில் ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள் ஒவ்வொரு நாளும் 4 மணி நேரத்திற்கும் மேலாக ஏதாவது ஒரு செயலியை பயன்படுத்துவதில் நேரத்தைச் செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ஷாப்பிங் ஆப்ஸ், டிராவல் ஆப்ஸ், கேம்ஸ் ஆப்ஸ் ஆகியவற்றையே இந்தியர்கள் அதிகமாகப் பயன்படுகின்றனராம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 weeks ago |
-
சேலத்தில் அன்புமணி தலைமையில் இன்று கட்சி கூட்டம்: பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி : எம்.எல்.ஏ. அருளும் சிகிச்சைக்காக அனுமதி
18 Jun 2025சென்னை : அன்புமணி தலைமையில் சேலத்தில் இன்று கட்சிக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், பா.ம.க., முக்கிய தலைவர்கள் ஜி.கே.மணி, எம்.எல்.ஏ.
-
கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
18 Jun 2025சென்னை : கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழ்நாடு அரசு, அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளது
-
சென்னை, மெரினா கடற்கரையில் 50 குடிநீர் ஏ.டி.எம்.களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
18 Jun 2025சென்னை : சென்னை மெரினா கடற்கரையில் முதற்கட்டமாக 50 குடிநீர் ஏ.டி.எம்.களை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
கீழடி விவகாரம்: மு.க.ஸ்டாலினின் முகக்கவசம் அணிந்து மதுரையில் தி.மு.க. மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
18 Jun 2025கீழே படத்துடன்....
-
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நான்கு துறைகளின் ஆய்வுக்கூட்டம் : துணை முதல்வர் - அமைச்சர்கள் பங்கேற்பு
18 Jun 2025சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை உள்ளிட்ட 4 துறைகளின் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
-
உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள்: 'டாப் 10'-ல் ஆஸ்திரேலியாயை சேர்ந்த 3 நகரங்கள்
18 Jun 2025புதுடில்லி : 2025ம் ஆண்டில், உலகில் உயிர் வாழ மிகவும் தகுதியான நகரங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் முதல் இடத்தை டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன் பிடித்துள்ளது.
-
வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
18 Jun 2025புதுடில்லி : தென்மேற்கு வங்கதேசம், அதை ஒட்டிய மேற்கு வங்கத்தில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்றது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் க
-
சிறிய நாடுகளுக்கான டெஸ்ட் போட்டி 4 நாட்களாக குறைப்பு : ஐ.சி.சி. தலைவா் ஜெய்ஷா ஆதரவு
18 Jun 2025லண்டன் : டெஸ்ட் போட்டிகளை நடத்த செலவு அதிகமாவதாக டெஸ்டை நடத்தும் சிறிய நாடுகள் தயக்கம் காட்டும் நிலையில், சிறிய நாடுகளுக்கான டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களாக குறைக்க ஐ.சி.சி
-
தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வி.சி.க. வெளியேறும்: திருமாவளவன்
18 Jun 2025சென்னை : தி.மு.க., உடன் பா.ம.க., இணைந்தால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.
-
‘சமரசத்துக்கு வாய்ப்பில்லை - போர் தொடங்கியது’ : அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானின் உச்சத் தலைவர் கமேனி எச்சரிக்கை
18 Jun 2025தெஹ்ரான் : ஈரான் - இஸ்ரேல் போர் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், “போர் தொடங்குகிறது. இனி ஸயோனிஸ்ட்டுகளுக்கு (யூதர்களின் தேசிய இயக்கத்துக்கு) இரக்கம் காட்ட முடியாது.
-
கிருஷ்ணகிரியில் 'மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க. சார்பாக நாளை உண்ணாவிரத போராட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
18 Jun 2025சென்னை, 'மா' சாகுபடி விவசாயிகளின் துயரங்களைப் போக்குவதற்கு முன்வராத திமுக ஆட்சியாளர்களைக் கண்டித்து, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்டக் கழகங்களின் சார்பில், வரும் வெள்ளி
-
இந்தியா, கனடா உறவுகள் முக்கியமானவை: பிரதமர்
18 Jun 2025ஒட்டாவா : இந்தியா, கனடா உறவுகள் மிக முக்கியமானவை. ஜனநாயகத்தை வலுப்படுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் 2 ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து
18 Jun 2025சென்னை : சிங்கப்பூர் செல்ல இருந்த 2 ஏர் இந்தியா விமானங்கள் சென்னையில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
-
அதர்வா நடிக்கும் டி என் ஏ.
18 Jun 2025ஒலிம்பியா மூவிஸ் அம்பேத்குமார் தயாரிப்பில் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் டி என் ஏ' ( DNA) இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு வி
-
ஆக்சியம் 4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பு: மேலும் தள்ளிப்போன சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம்
18 Jun 2025புதுடெல்லி : ஆக்சியம் 4 திட்டம் மீண்டும் ஒத்திவைப்பால் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் பயணம் மேலும் தள்ளிப்போகியுள்ளது.
-
‘வாட்ஸ்அப் செயலியை நீக்குங்கள்: குடிமக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு
18 Jun 2025தெஹ்ரான், வாட்ஸ்அப் செயலியை நீக்க வேண்டும் என்று ஈரான் மக்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
படப்பிடிப்பை தொடங்கி வைத்த புதுச்சேரி முதலமைச்சர்
18 Jun 2025விதா ஸ்டுடியோ P.R விஜய் தயாரிக்கும் படம் பிட்பாக்கெட் இப்படத்தில் P. R.
-
தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் 585 பேர் பலி
18 Jun 2025தெஹ்ரான், இஸ்ரேலிய தாக்குதல்கள் காரணமாக ஈரான் முழுவதும் 585 பேர் உயிரிழந்ததாகவும், 1,326 பேர் காயமடைந்ததாகவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு தனது அறிக்கையில் தெரிவித
-
பாகிஸ்தான் பிரச்சனையில் இந்தியாவிற்கு ஒருபோதும் மத்தியஸ்தம் தேவையில்லை : அதிபர் டிரம்பிடம் பிரதமர் மோடி உறுதி
18 Jun 2025புதுடெல்லி : பாகிஸ்தானுடனான பிரச்சினைகளில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதில்லை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது, தேவையில்லை என்ற செய்தியை அமெரிக்க அதிபர் டொனால
-
டெல்லி, மதராசி கேம்ப் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்ட 360 தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் நிவாரணம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவை அடுத்து நடவடிக்கை
18 Jun 2025சென்னை : டெல்லி, மதராசி கேம்ப் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்ட 360 தமிழர் குடும்பங்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் நிவாரணம் அவர்களது வங்கி கணக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவ
-
நன்றி அறிவிப்பு சொன்ன மெட்ராஸ் மேட்னி படக்குழு
18 Jun 2025குடும்பஸ்தன்’, ‘டூரிஸ்ட் பேமிலி’ வரிசையில் மிகச்சாதாரணமான மனிதர்களையும் குடும்ப அமைப்பின் வலிமையையும் வெளிக்காட்டுகிற இன்னொரு வெற்றிப்படமாக மாறியிருக்கிறது ‘மெட்ராஸ் மே
-
தொடரை வென்ற தென் ஆப்பிரிக்கா
18 Jun 2025தென் ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.
-
கனடா பயணத்தை நிறைவு செய்து குரோஷியா சென்றார் பிரதமர் மோடி
18 Jun 2025ஒட்டாவா : கனடா பயணத்தை நிறைவு செய்து குரோஷியா சென்றார் பிரதமர் மோடி. அங்கு ஜனாதிபதி சோரன் மிலனொவ் மற்றும் பிரதமர் பென்கொவிக்கை சந்திக்கிறார்.
-
மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தொட்டது தங்கம் விலை
18 Jun 2025சென்னை : சென்னையில் நேற்று (புதன்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு பவுன் ரூ.74,000-க்கு விற்பனையானது.
-
நாசா- இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை ஜூலை 14-ல் ஏவ திட்டம்
18 Jun 2025பெங்களூர் : நாசா- இஸ்ரோ இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைக்கோளை அடுத்த மாதம் 14-ம் தேதி ஏவ திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.