முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

இங்கிலாந்துக்கு ஆங்கிலம் எப்போது வந்தது தெரியுமா?

ஆங்கிலத்தின் தாயகம் இங்கிலாந்து என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் சுமார் 300 ஆண்டு காலம் இங்கிலாந்தை ஆட்சி செய்தது பிரெஞ்சு மொழிதான். 1066 க்கும் 1362 க்கும் இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்தில் ஆட்சி மொழியாக பிரெஞ்சுதான் இருந்தது. 1066 இல் வில்லியம் தலைமையிலான நார்மன் ஆட்சி வந்த போது, ஆங்கிலோ- நார்மன் பிரெஞ்சு மொழியை அறிமுகப்படுத்தினார். இந்த மொழியை பிரபுக்கள், அரசு உயர் அதிகாரிகள், செல்வந்தர்கள் ஆகியோர் பேசி வந்தனர். அவர்களில் ஒரு சிலருக்கு ஆங்கிலம் பேசக் கூட தெரியாது. பின்னர் 1362 இல் நாடாளுமன்றத்தில் ஆங்கிலத்தை ஆட்சி மொழி ஆக்கும் சட்டம் இயற்றப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக நார்மன் பிரெஞ்சு பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் சாமானிய மக்களுக்கு நீதி மன்றத்தில் என்ன நடக்கிறது என்றே தெரியாது.

கோடையை சமாளிக்க

கோடை காலம் தொடங்கிவிட்டதால் நீர்சத்து இழப்பை தவிர்க்க அதிகளவு நாம் நீர் பருக வேண்டும்.  6 - 10 வயதுக்கு உட்பட்ட வளரும் சிறார் தினமும் ஒன்றரை லிட்டர் தண்ணீரும், பணியில் ஈடுபடும் 20 - 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தினமும் 2 லிட்டரும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முதியோர் தினமும் 2 லி தண்ணீரும், நடனக் கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் வரை குடிக்க வேண்டுமாம். மேலும், உடல் வெப்பத்தை, உடல் வெப்பத்தை தணிக்க இளநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய், போன்றவைகளை எடுத்துக்கொள்வது நல்லது. மோர் பருகுவதும் நல்ல பலனை அளிக்குமாம்.

மரக்கிளையில் வீடுகள்

மரக்கிளையில் பறவைகள்தான் கூடு கட்டும். இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் பறவைகள் மத்தியில் மரக்கிளையில் வீடுகள் கட்டினால் எப்படி இருக்கும்.  அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் வடக்கு கர்நாடாகா. அங்கே தண்டேலி என்பது கோவா எல்லையை ஒட்டியுள்ள கர்நாடகாவின் வடக்கு முனையில் அமைந்துள்ள ஒரு வெப்பமண்டல மழைக்காடு ஆகும். இங்கு  தரையில் இருந்து 40 அடி உயரத்தில் ஹார்ன்பில் ரிவர் ரிசார்ட் அமைந்துள்ளது. இது ஒரு ஆற்றங்கரையில் அமைந்துள்ள ரிசார்ட் ஆகும். இது தண்டேலியின் கணேஷ்குடி பகுதியில் காளி நதி மற்றும் தடிமனான காடுகளுக்கு நடுவே அடர்ந்த மரங்களில் கிளைகளுக்கு மத்தியில் கனமான மூங்கில்களால் கட்டப்பட்ட குடிசை பாணியில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் தேனிலவுக்கு வரும் தம்பதிகளுக்கு ஹார்ன்பில் ரிவர் ரிசார்ட் ஒரு சொர்க்கமான இடமாக திகழ்கிறது. என்ன தண்டேலிக்கு செல்ல ரெடியா...

VoIP

நமது ஸ்மார்ட் போன்களில் உள்ள சிம் கார்டில் நெட்வொர்க் கவரேஜ் முற்றிலும் இல்லாத நேரங்களிலும், குறைவாக உள்ள நேரங்களிலும்  WiFi காலிங் அம்சத்தை பயன்படுத்தி சிரமமின்றி பேசலாம்.  எப்படி தெரியுமா... நாம் பயன்படுத்துகின்ற சிம் கார்டின் மூலமாகவே குரல் வழி (Voice Call) அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கு தேவை WiFi இணைப்பு மட்டுமே.  ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடாபோன் ஐடியா என இந்தியாவின் மூன்று டெலிகாம் நிறுவனங்கள் இந்த WiFi காலிங் அம்சத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது.  VoLTE-க்கு மாற்றாக VoIP (voice over Internet protocol) மூலம் இந்த WiFi காலிங் வசதியை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் இயங்கு தளம் கொண்ட போன்களில் இந்த வசதியை பயன்படுத்தலாம். சந்தையில் பெரும்பாலான புதிய ஸ்மார்ட் போன்களில் இந்த வசதி உள்ளது. பழைய போனை பயன்படுத்துபவர்கள் செட்டிங்ஸ் சென்று இந்த சேவையை Enable செய்து கொள்ளலாம். 

ஆலமரம் ஆச்சரியம்

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் இருக்கும் மாவட்டம் லண்டி கோட்டல். லண்டி கோட்டலில் இருக்கும் ஒரு இராணுவ முகாமில் தான் ஒரு ஆலமரம் நூறாண்டுகளுக்கு மேலாக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. பிரிட்டிஷ் இராணுவ அதிகாரி ஒருவர்  மரம் தன்னை நோக்கி வந்ததாக கூறியதை அடுத்து இந்த மரத்தை சிறை வைத்தார்களாம்.  இன்றளவும் அந்த மரம் சங்கலிகளால் கட்டுப்பட்டு தான் வைத்திருக்கிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில், இந்த மரத்தை ஆணையை மீறி யாரேனும் செயற்பட்டால், அவர்களுக்கும் இதே தண்டனை என பிரிட்டிஷ் அதிகாரி கண்டித்தும் இருந்தாராம்.

மைக்ரோசிப்

அமெரிக்காவில் ஒரு நிறுவனம் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உடலில் ஒரு ஊழியருக்கு 300 டாலர் செலவு செய்து மைக்ரோ சிப்களை பொருத்தியுள்ளது. இந்த சிப் அக்சஸ் கார்டு போன்று செயல்படுகிறது. அதாவது அலுவலகம் வரும்போது கதவுகளை திறப்பது, பன்ச் செய்வது, அவர்களுக்கான கணினியை பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு பயன்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago