உலகிலேயே கடலுக்கு நடுவே மிகவும் அபாயகரமான முறையில் அமைந்துள்ள ஏர்போர்ட் எங்குள்ளது தெரியுமா.. அது வேறெங்கும் இல்லை. இந்தியாவில்தான்.. அகத்தி விமான நிலையம் - லட்சத் தீவுகள்- விமான ஓடுதளத்தை சுற்றிலும் கடல் இது தான் அகத்தி விமான தளத்தின் பிரம்மாண்டம். இந்தியாவின் லட்ச தீவுகளில் அமைந்துள்ளது அகத்தி விமான தளம். விமானத்தில் இருந்து பார்க்கும் போது ரன்வே கடலில் மிதப்பது போல காட்சி அளிக்கும் அனுபவம் மிகப் பெரிய அனுபவம். 1988 முதல் இந்த விமான தளம் செயல்பட்டு வருகிறது. டோர்னியர் 228 ரக விமானங்களை இயக்குவதற்காகவே விமான தளம் முதலில் உருவாக்கப்பட்டது.பின்னர் அருகிலுள்ள கல்பட்டி தீவையும் இணைத்து பாலத்தில் நெடிய விமான ஓடுபாதையை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் சூழலியல் காரணங்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. உலகின் அபாயகரமான விமான ஓடுதளங்களில் இதுவும் ஒன்று.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
தற்காலத்தில் மன அழுத்தம், குழப்பம் போன்றவற்றால் சிக்கி தவிப்பர்வர்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீண்டுவர உட்டியாணா ஆசனம் பெரிதும் உதவுகிறது. இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வருபவர்களின் முகம் மிகவும் பொலிவாக காணப்படும். சுறுசுறுப்பு வந்தடையும். இனவிருத்தி உறுப்புகள் ஆரோக்கியமடைந்து ஆண்மை மிகுதிப்படும். குறிப்பாக ஆண்மை நமது கட்டுப்பாட்டுக்குள் வரும்.
இன்றைக்கு வெகு வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் 3D பிரிண்டர் துறையும் ஒன்று. ஒரு பொருளை தொழில் நுட்பத்தின் உதவியுடன் அப்படியே ஒட்டு மொத்தமாக உருவாக்க உதவும் கருவியை 3டி பிரிண்டர் என்று சுருக்கமாக சொல்லலாம். இந்த 3டி பிரிண்டர் மூலம் பல்வேறு வளர்ச்சிகள் ஏற்பட்டு வரும் வேளையில் முக்கியமாக ஜப்பானைச் சோ்ந்த ஒசாகா பல்கலைக் கழக விஞ்ஞானிகள் செயற்கையாக எருது இறைச்சியை உருவாக்கி அசத்தியுள்ளனர். செயற்கை ரத்தம், தசை, திசு, போன்ற சிக்கலான அமைப்புடன் கூடிய இந்த இறைச்சி உருவாக்கம் ஒரு முன்னோடி கண்டுபிடிப்பாக நிகழ்ந்துள்ளது. Wagyu cows என்று அழைக்கப்படும் பசுமாடுகளின் ஸ்டெம் செல்லிலிருந்து இது போன்ற செயற்கை இறைச்சியை அவர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயற்கை இறைச்சி 5 மீமி அகலம் 10 மிமீ நீளம் கொண்டதாக உள்ளது. இதில் 72 பைபர்களை இணைத்து 42 திசுக்களாக உருமாற்றி, மேலும் 28 கொழுப்பு கொண்ட திசுக்களையும், 2 ரத்த தமனிகளையும் உருவாக்கியுள்ளனர். இவை அப்படியே இயற்கை இறைச்சியை போலவே காட்சியளிக்கின்றன. இது குறித்து இக்குழுவின் தலைவர் டாங் ஹீ கங் கூறுகையில், வாக்யூ மாட்டிறைச்சியின் திசுக்களின் கூட்டமைப்பை வரைபடமாகக் கொண்டு தசைநார்கள், கொழுப்பு மற்றும் ரத்த நாளங்கள் கொண்ட சிக்கலான வடிவமைப்பை 3டி பிரிண்டரை கொண்டு உருவாக்கியுள்ளோம் என்றார். இவ்வகை மாட்டிறைச்சிக்கு உலக சந்தையில் உணவு பிரியர்களிடம் ஏக கிராக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா என்றாலே எல்லோருக்கும் வானளாவிய கட்டிடங்கள், மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வசதிகள், செழிப்பு மிக்க நாடு என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால் அங்கும் கூட சற்று கூட வளர்ச்சியடையாத கிராமம் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா... நம்பித்தான் ஆக வேண்டும். அரிசோனா மாகாணத்தில் கிராண்ட் கேன்யோன் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் அமைந்துள்ள சுபாய் என்ற கிராமம்தான் இன்னும் வளர்ச்சியடையாத கிராமம். வளர்ச்சியடையாத என்றால் அந்த கிராமத்துக்கு சாலை வசதி, ரயில் போக்குவரத்து வசதி கூட கிடையாது. சுமார் 300 பேர் மக்கள் தொகை கொண்ட அந்த கிராமத்துக்கு நடந்தோ அல்லது 2 பேர் செல்லக் கூடிய சிறிய விமானத்திலோதான் செல்ல முடியும். அங்கு முழுக்க முழுக்க அமெரிக்காவின் அசலான பழங்குடி மக்கள் வசிக்கின்றனர். இருந்த போதிலும் அந்த சின்னஞ்சிறிய கிராமத்தில் 2 சர்ச்சுகள், விடுதிகள், ஆரம்ப பள்ளிகள், பலசரக்கு கடை மற்றும் தபால் நிலையம் உள்ளது. அங்குள்ள மக்கள் ஹவாசுபாய் மொழியை பேசுகின்றனர். விவசாயம்தான் பிரதான தொழில். விவசாய பணிகளை கழுதை அல்லது குதிரையை வைத்து மேற்கொள்கின்றனர். விவசாய பொருள்களை அருகில் உள்ள நகரங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இந்த அதிசய கிராமத்தை பார்வையிட வருடந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்களுக்காகத்தான் அங்கு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. அங்கு செல்வதற்கு பழங்குடியின பாதுகாப்பு சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பது கூடுதல் தகவல். அமெரிக்கா என்பது ஒரு கனவுதான் என்பது இப்போதாவது புரிந்தால் சரி..
நமது உடலில் பத்து நொடிகளில் புற்று நோய் இருப்பதை கண்டறியும் புதிய வகை பேனா ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்கு 'மாஸ்பெக் பேனா' என்று பெயரிட்டுள்ளனர். இதன் மூலம் புற்றுநோய் கட்டி கண்டறியப்படுவதுடன், அதனை அகற்றவும் முடியும் என்கின்றனர். பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அறுவை சிகிச்சை செய்த பின்னரும் சில புற்று நோய் அணுக்கள் உடலில் தேங்கியிருக்கும். இந்த பாதிப்பை மாஸ்பெக் பேனா மூலம் சரி செய்ய முடியுமாம். அறுவை சிகிச்சையின்போது புற்றுநோய் அணுக்கள் இருப்பதாகச் சந்தேகிக்கப்படும் இடத்தில் இந்தப் பேனாவால் ஒரு துளி நீர் செலுத்தப்படும். அதன்பின் அங்கிருக்கும் திசுக்கள் புற்றுநோய் கட்டியா அல்லது சாதாரண கட்டியா என்பது 96 சதவிகிதம் தெரிந்துவிடும்.
இன்றைய போர்ப்படை ஆயுதங்களில் ஏ கே 47 வகைத் துப்பாக்கியும் ஒன்றாகும். இந்த ஆயுதம் தற்போது எல்லா நாடுகளிலும் கிடைக்கிறது. இதன் பயன்பாட்டைப் பற்றிச் சிறுவர்கள் உட்பட அனைவரும் அறிந்து வைத்துள்ளனர் எனில் அது மிகையன்று. தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சமூக விரோதிகள் ஆகியோரிடம் இதன் புழக்கம் மிகவும் அதிகம் எனலாம். சோவியத் நாட்டைச் சார்ந்த போர்ப்படை அதிகாரி மிகைல் கலாஷ் நிகாவ் என்பவர் 1947இல் இதனைக் கண்டுபிடித்தார். ரஷ்யா தன்னைச் சுற்றியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளிடம் இருந்து நாட்டைக் காபாற்றத் தகுதி வாய்ந்த ஆயுதம் ஒன்றைக் கண்டுபிடிக்க முனைந்தது. அப்போது தானியங்கித் துப்பாக்கி ஒன்றைக் கண்டறிவதில் கலாஷ்நிகாவ் ஈடுபட்டார். தேவையான இலக்கை நோக்கிச் சுடுவதில் அப்போதிருந்த கைத்துப்பாக்கி வெற்றிகரமாக அமையவில்லை. இதன் காரணமாக உருவானதுதான் ஏ.கே.47 வகைத் துப்பாக்கி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஊட்டி மலை ரயில் கட்டணம் உயர்வு
21 Feb 2026நீலகிரி, ஊட்டி மலை ரயில் கட்டணம் 5 சதவீதம் உயர்வால் சுற்றுலா பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: தி.மு.க. - இ.யூ.மு.லீக் இன்று பேச்சுவார்த்தை
21 Feb 2026சென்னை, தி.மு.க. - இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி சார்பில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது.தி.மு.க.
-
மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
21 Feb 2026மதுரை, மதுரை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
அவதூறு வழக்கில் ராகுலுக்கு நீதிமன்றம் ஜாமீன்
21 Feb 2026பிவாண்டி, ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு காரணமாக ராகுல் காந்தி, மகாராஷ்டிராவின் பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
-
த.வெ.க.வில் சட்டசபை தேர்தல் கண்காணிப்பாளர்கள் நியமனம்: விஜய் உத்தரவு
21 Feb 2026சென்னை, த.வெ.க. சார்பில் சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள தேர்தல் கண்காணிப்பாளர்களை நியமித்து அந்தக் கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
-
டித்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி: பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் நன்றி
21 Feb 2026புதுடெல்லி, டித்வா புயல் பாதிப்புக்கு இந்தியா நிதி உதவி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு இலங்கை அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பிரேசில் அதிபர் பேச்சு
21 Feb 2026புதுடெல்லி, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பிரேசில் அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
-
டெல்லி ஏ.ஐ. மாநாட்டில் காங்., போராட்டம் ஒரு திட்டமிட்ட சதி: அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றஞ்சாட்டு
21 Feb 2026டெல்லி, காங்கிரஸ் இளைஞர் பிரிவினர் ஏ.ஐ. மாநாட்டில் நடத்திய போராட்டம் தவறாக நடத்தப்பட்டது அல்ல. நன்றாக திட்டமிட்ட சதி.
-
கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு: பேச்சுவார்த்தை நடத்த 7 பேர் குழுவை அமைத்தது தி.மு.க.!
21 Feb 2026சென்னை, கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திட 7 பேர் கொண்ட குழு அமைத்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
-
தலைநகர் டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்த பாகிஸ்தான தீவிரவாதிகள் திட்டம்: உளவு துறை எச்சரிக்கை - தீவிர கண்காணிப்பு
21 Feb 2026புதுடெல்லி, டெல்லியில் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுதுறை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத
-
எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும் அதனை வீழ்த்துவோம்: துணை முதல்வர் உதயநிதி உறுதி
21 Feb 2026சென்னை, எந்த வடிவில் மொழித் திணிப்பு வந்தாலும் அதனை வீழ்த்துவோம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சங்பரிவார் சேவகராகவே மாறிய இ.பி.எஸ்: கனிமொழி விமர்சனம்
21 Feb 2026சென்னை, சங்பரிவார் சேவகராகவே மாறிய எடப்பாடி பழனிசாமி என்று கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
-
ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
21 Feb 2026மதுரை, மதுரையில் 867 ஊரகக் குடியிருப்புகளுக்கு ரூ.1536.31 கோடி செலவிலான கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை முதல்வர் ம
-
சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்.1 முதல் பாஸ்டேக், யு.பி.ஐ. மூலம் மட்டும் கட்டணம் வசூல்
21 Feb 2026புதுடெல்லி, வரும் ஏப்ரல் 1சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக், யு.பி.ஐ. கட்டணம் மட்டுமே ஏற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தியா வரி செலுத்தும்; அமெரிக்கா செலுத்தாது: தீர்ப்பிற்கு பிறகு ட்ரம்ப் விளக்கம்
21 Feb 2026நியூயார்க், அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் எதுவும் மாறவில்லை, இந்தியா வரி செலுத்தும், அமெரிக்கா வரி செலுத்தாது, பிரதமர் மோடி ஒரு சிறந்த மனிதர் என்று அந்நா
-
கொரோனா காலத்தில் பணியாற்றிய 668 செவிலியர்களுக்கு பணிநியமனம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்
21 Feb 2026சென்னை, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ்.
-
அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு: அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீதம் வரியை விதித்த ட்ரம்ப்
21 Feb 2026நியூயார்க், உலக நாடுகளின் பொருள்கள் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர இறக்குமதி வரி உள்பட அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், அமெரிக்க அதிபா் ட்ரம்ப் விதித்த வரிகள் செல்லாது என்ற
-
தமிழருக்கு அ.தி.மு.க. அரணாக விளங்கும்: எடப்பாடி பழனிசாமி
21 Feb 2026சென்னை, அ.தி.மு.க. என்றென்றும் மக்களுக்கு அரணாக விளங்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
21 Feb 2026மதுரை, மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம் தி.மு.க., இந்த இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும் என்று நேற்று மதுரையில் நடைபெற்ற தென்மண்டல தி.மு.க.
-
வரிகளை ரத்து செய்து அமெரிக்க உச்ச நீதிமன்ற வழங்கிய தீர்ப்பு அவமானத்துக்குரியது: ட்ரம்ப்
21 Feb 2026நியூயார்க், அமெரிக்க அரசு பிறப்பித்த வரி விதிப்புகளை செல்லாது என்று அவற்றை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு அவமானத்துக்குரியது, அபத்தமானது என்று மாகாண ஆளுநா்கள்
-
தாய்மொழி உடலுக்கு உயிர்: உலக தாய்மொழி தினத்தில் கமல் பதிவு
21 Feb 2026சென்னை, தாய்மொழி உடலுக்கு உயிர் என்று உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
-
வார ராசிபலன்
21 Feb 2026 -
இன்றைய நாள் எப்படி?
21 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
21 Feb 2026- திருக்கோஷ்டியூர் செளமிய நாராயணப் பெருமாள் உற்சவாரம்பம்.
- மதுரை கூடலழகர் ஆண்டாள் திருக்கோலம், இரவு அனுமார் வாகனத்தில் ராமாவதாரக் காட்சி.
- காங்கேயம் முருகர் மயில் வாகனம்.


