முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

எளிய பயிற்சிஎளிய பயிற்சி

இதயம், எலும்புகள் பலப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்கும் சிறந்த மற்றும் எளிய பயிற்சியான நடை பயிற்சி உடல் உறுப்புகள் அனை்ததுக்கும் பயனளித்து, கொழுப்பைக் கரைத்து, உடலை கட்டுகோப்பாக வைக்கிறது. நடைபயிற்சியை நாம் தொடர்ந்து தடையில்லாமல் மேற்கொள்ள காலை பொழுதில், பூங்காக்களில் நண்பர் அல்லது உறவினரோடு நடப்பதை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும்.

கோவிட் மரணத்தை காட்டிலும் சுற்றுசூழல் மாசால் இறந்தவர்கள் அதிகம்

கோவிட் பெருந்தொற்று உலகம் முழுவதும் 59 லட்சம் பேர் கடந்தாண்டில் இறந்தனர். ஆனால் அதை காட்டிலும் அதிகமானோர் சுற்றுச்சூழல் மாசால் உயிரிழப்பதாக ஐநா எச்சரித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் சுமார் 90 லட்சம் சிசுக்கள் குறைபிரசவத்தில் இறந்து போவதாக தெரியவந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் பூதாகரமெடுத்து வருவதாக ஐநா அலறுகிறது. நீரில் பாதிப்பு, காற்று பாதிப்பு, ரசாயன உரங்கள், பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அது தொடர்பான ரசாயனங்கள் என சுற்றுச்சூழலுக்கான அச்சுறுத்தல் நீண்ட சங்கிலி தொடர் போல நீண்டு செல்வதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இது குறித்து உலக நாடுகள் விரைவில் நடவடிக்கை எடுக்க தவறினால் விளைவுகள் விபரீதமாகும் என்றும் எச்சரித்துள்ளது.

வெகு தொலைவில் இல்லை

முன்பு ஒரு இடத்துக்கு செல்ல வேண்டும் என்றால், வாயில் இருக்கு வழி என்ற பழமொழிக்கு ஏற்ப கேட்டுகேட்டுதான் செல்ல வேண்டியிருந்தது. பின்னர் திசை காட்டி பலகைகள் வந்தன. அவையும் கால போக்கில் டிஜிட்டல் போர்டுகளாக மாறினவே ஒழிய பலகைகள் இருந்து கொண்டுதான் இருந்தன. கணணி உலகம் அதையும் மாற்றி ஜிபிஎஸ் கருவியை அறிமுகம் செய்தது. இருந்தாலும் ஜிபிஎஸ் கருவியில் நாம் பார்க்கும் படத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தன. தற்போது அதையும் களையும் வகையில் புதிய ஆக்மென்ட் ரியாலிட்டி தொழில் நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன.  அதென்ன ஆக்மென்ட் ரியாலிட்டி... வெர்ச்சுவல் ரியாலிட்டியில் செயற்கையான உலகை நிஜம் போல பார்ப்போம்.  ஆனால் ஆக்மென்ட் ரியாலிட்டியில் நிஜ உலகின் மீது டிஜிட்டல் இமெஜ்கள் பரவி இருக்கும். இதன் மூலம் இடத்தின் பெயர், செல்லும் பாதை, செல்ல வேண்டிய திசை, அடைய வேண்டிய முகவரியின் தொலைவு அனைத்தும் நிஜ காட்சிகள் மீது பரவியிருக்கும். இதற்கான சோதனை ஓட்டம் இப்போதே அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் வெள்ளோட்டம் பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் முதல் சினிமா

இந்தியாவின் முதல் சினிமா "ராஜா ஹரிச்சந்திரா" என்ற படம் 1913ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி கருப்பு வெள்ளையில் வெளியானது. இது ஒரு மெளனப் படம். 40 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்தவர் தாதா சாகிப் பால்கே. முதன் முதலில் மும்பையில் கோரோனேசன் சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் பேசும் படம் "ஆலம் ஆரா:. இப்படம் இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி இயக்கி அவரது இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்திருந்தது.   தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆர். நடராஜ முதலியார் என்பவரால் தயாரிக்கப்பட்ட "கீசக வதம்" என்ற மெளனப்படம், அவரது புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் 1916 இல் வெளியிடப்பட்டது.  தமிழில் முதல் பேசும் படம் "காளிதாஸ்". இதுவும் 1931 இல் வெளியானது. எச்.எம் ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியிருந்தார். இதன் மூலம் முதல் தமிழ் படத்தின் பாடலாசிரியர் என்ற பெருமைக்குரியவரானார்.

வாழ்நாளை கூட்ட...

நாம், பயம் என்ற சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டால் நம் மூளை போர்கால அடிப்படையில் வேலை செய்யும். தொடர்ந்து பயந்து கொண்டே இருந்தால்,  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கும், இருதய பாதிப்பு, குடல் பாதிப்பு, முதுமை கூடும். மேலும், சிறிய வயதிலேயே இறப்பு ஏற்படும். எனவே பயத்தை தவிர்த்து, தைரியமாய் வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

ஒரே சமயத்தில் 9 பெண்களை திருமணம் செய்த மன்மத ராசா

பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ. மொடலாக உள்ளார். கடந்த ஆண்டு ஒன்பது பெண்களை கூட்டாக திருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.இவருக்கு லுவானா கசாகி என்ற பெண்ணுடன் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. என்றாலும், ஒரு தார மணத்தை எதிர்த்து புரட்சி செய்யவுள்ளதாக அறிவித்து, கடந்த ஆண்டு மேலும் 8 பெண்களை மணந்தார். அந்த மண நிகழ்வில் மனவி லுவானா கசாகியும் இருந்தார். பிரேசிலில் பலதார மணம் சட்டவிரோதமானது. எனவே மற்றைய 8 மனைவிகளுடன் சட்டபூர்வமாக திருமணம் நடக்கவில்லை. திருமணமாகி சில மாதங்களிலேயே மனைவிகளில் ஒருவரான அகதா என்பவர் விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். பல மனைவிகளில் ஒருவராக வாழ விரும்பவில்லையென இப்பொழுது காரணம் கூறியுள்ளார். தற்போதைக்கு புதிதாக யாரையும் திருமணம் செய்து கொள்வதில்லையென ஆர்தர் கூறினாலும், விரைவில் இன்னும் 2 பெண்களை திருமணம் செய்து, மனைவிகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்த விரும்புகிறார். அவர் மேலும் கூறியதாவது: என் ஒவ்வொரு மனைவியுடனும் ஒரு குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago