முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

புதிய இனம்

அமெரிக்காவின் வடக்கு மொன்டானா மாகாணத்தில் சுமார் 75 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த டைனோசரின் புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு டாஸ்பிளட்டோசரஸ் ஹார்னரி என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதியவகை டைனோசரின் உடலமைப்பு, முதலைகள் போன்று இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

முதல் சினிமா

இந்தியாவின் முதல் சினிமா "ராஜா ஹரிச்சந்திரா" என்ற படம் 1913ஆம் ஆண்டு மே 3 ஆம் தேதி கருப்பு வெள்ளையில் வெளியானது. இது ஒரு மெளனப் படம். 40 நிமிடங்கள் ஓடக் கூடிய இப்படத்தை எழுதி இயக்கி தயாரித்தவர் தாதா சாகிப் பால்கே. முதன் முதலில் மும்பையில் கோரோனேசன் சினிமா என்ற அரங்கில் வெளியிடப்பட்டது. இந்தியாவின் முதல் பேசும் படம் "ஆலம் ஆரா:. இப்படம் இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி இயக்கி அவரது இம்பீரியல் ஃபிலிம் கம்பெனி தயாரித்திருந்தது.   தென்னிந்தியாவில் முதல் முறையாக ஆர். நடராஜ முதலியார் என்பவரால் தயாரிக்கப்பட்ட "கீசக வதம்" என்ற மெளனப்படம், அவரது புரசைவாக்கம் மில்லர்ஸ் வீதியில் கட்டிய திரையரங்கில் 1916 இல் வெளியிடப்பட்டது.  தமிழில் முதல் பேசும் படம் "காளிதாஸ்". இதுவும் 1931 இல் வெளியானது. எச்.எம் ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களை மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதியிருந்தார். இதன் மூலம் முதல் தமிழ் படத்தின் பாடலாசிரியர் என்ற பெருமைக்குரியவரானார்.

குறிப்பிட்ட நாள் நேரத்தில் மெயில் அனுப்ப...

எதிர்கால இமெயில் அனுப்பும் வசதிகளை தருவதில் LetterMeLater என்ற இந்த வசதிதான் சிறப்பாக செயல் படுவதுடன், கூடுதல் வசதிகளையும் அளிக்கிறது. http://www.lettermelater.com/ என்ற முகவரியுள்ள தளத்தில் இந்த வசதி அளிக்கப்படுகிறது. இங்கு சென்று உங்கள் மின்னஞ்சல் முகவரியினைக் கொடுக்க வேண்டும்.உங்களைப் பதிந்து கொள்ள வேண்டும். பின் மின்னஞ்சல் கடிதத்தினைத் தயார் செய்து, அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் நாளினையும் பதிந்து வைக்க வேண்டும். உடனேயே உங்களின் பதிவு செய்த மின்னஞ்சல் முகவரிக்கு நீங்கள் பதிந்து வைத்த எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய இமெயில் குறித்த செய்தி அனுப்பப்படும்.பின் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் நீங்கள் பதிந்த இமெயில் அனுப்பப்படும். பதிந்த நாளுக்குப் பின், தயாரித்த இமெயில் செய்தியில் ஏதேனும் எடிட் செய்திட வேண்டுமானால் இந்த தளம் சென்று, பாஸ்வேர்ட் கொடுத்து, மெயிலைத் திறந்து சேர்க்கலாம். பைல்களை அட்டாச் செய்திடலாம்

பேட்டா பைட் என்றால் என்னவென்று தெரியுமா

கணினி யுகம் வளர வளர அதன் பயன்பாடுகளும் கற்பனைக்கெட்டாத அளவுக்கு மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஒரு காலத்தில் வெறும் 3 அல்லது 3 எம்பி கொண்ட பிளாப்பி டிஸ்க் சேமிப்பகமே மிகப் பெரியதாக கருதப்பட்டது. காலப் போக்கில் 1 ஜிபி வந்து தற்போது டெர்ரா பைட் அளவுக்கு சேமிப்பகங்களும், ஹார்ட் டிரைவ்களும் வந்து சந்தையை கலக்கி வருகின்றன. 1 ஜிபி என்பது 1024 எம்பி. அதேபோல 1 டெர்ரா பைட் என்பது 1024 ஜிபி. அதேபோல தற்போது புதிதாக வந்துள்ள பேட்டா பைட் என்பது 1 பிபி அதாவது ஒரு பேட்டா பைட் என்பது 1024 ஜிபிக்கு இணையானது. இதன் அளவை சுட்டிக்காட்ட வேண்டும் என்றால் 13.3 ஆண்டுகள் ஓடக் கூடிய உயர்தர ஹெச்டி வீடியோக்களை இதில் சேமிக்கலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதன் பிரம்மாண்டத்தை புரிந்து கொள்ள வேறு ஒரு வழியும் உள்ளது. அதாவது வரலாறு தோன்றிய காலம் முதல் இன்று வரையிலும் மனிதனால் அனைத்து மொழிகளிலும் எழுதப்பட்ட அனைத்து நூல்களையும் 50 பிபி டிரைவில் அடக்கி விடலாம் என்றால் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதாவது மனித வரலாறு என்பது 50 பிபி. அம்மாடியோவ்.

ஐன்ஸ்டீன் தனது கையால் எழுதியசார்பியல் கோட்பாடு ரூ.9 கோடிக்கு ஏலம்

உலகின் தலைசிறந்த அறிவியல் விஞ்ஞானி ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன், தனது சார்பியல் கோட்பாடுகள் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர். அவரது சார்பியல் கோட்பாடு 1915 இல் வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் உள்ள போஸ்டானில் இயங்கி வரும் ஏல நிறுவனம், ஐன்ஸ்டீன் கைப்பட எழுதிய பிரதியை கடந்த ஆண்டு நவம்பரில் ஏலத்திற்கு விட்டது. அதில், ஐன்ஸ்டீன் தனது கையால் எழுதிய சார்பியல் கோட்பாட்டின் ஒரு பக்க கையெழுத்துப் பிரதி,  அன்று நடைபெற்ற ஏலத்தில் ரூ.9 கோடிக்கு (1.3 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு) ஏலம் போனது. அந்த கடிதம் போலந்து அமெரிக்கரான மற்றொரு இயற்பியலாளர் Bobby Livingston என்பவருக்கு ஜெர்மனியில் எழுதப்பட்டதாகும். இந்த பிரதி 40 மில்லியன் டாலருக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 1.3 மில்லியன் டாலருக்கே ஏலம் போனதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, அவர் கையெழுத்தில் வெளியான கடிதம் (பிரபலமான E=mc² சமன்பாடு) அமெரிக்காவில் ரூ.8.4 கோடிக்கு ஏலம் போயிருந்தது குறிப்பிடத்தக்கது.

மிருதுவான பாதங்களுக்கு

பாதம் மிருதுவாக, மென்மையாக இருக்க லிஸ்டெரின் கால் கப் மவுத் வாஷ், வினிகர் சம அளவு எடுத்து கலந்து, ஒரு டப்பில் பாதம் நனையும் வரை சுடுநீரை நிரப்பி, பின் அதில் மவுத் வாஷ் கலவையை கலக்கி பாதத்தை மூழ்க வைக்க வேண்டும்.. 20 நிமிடம் கழித்து பாத்தை ஸ்க்ரப் செய்தால் பாதங்கள் மென்மையாக இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago