இயற்கை எப்போதும் விந்தைகளால் ஆனது. அதன் புதிர்கள் முடிவற்றதும் கூட. புளோரிடா மற்றும் கரீபியன் கடல் பிரதேசங்களில் காணப்படும் ஒரு வகை ஆப்பிள் மரம் தான் உலகிலேயே மிகக் கொடிய நச்சு மரம் என அறியப்படுகிறது. இம் மரத்தின் ஒவ்வொரு பகுதியும் மிகவும் ஆபத்தானது.மன்சிநீல் என்ற இந்த மரத்துக்கு பீச் ஆப்பிள் என்ற பெயரும் உள்ளது. இதன் ஏதேனும் ஒரு பகுதி நம் உடலில் பட்டால் அரிப்பு, சொறி, வீக்கம் ஏற்படும். கண்ணில் பட்டால் அவ்வளவுதான் கண் அவுட். பார்க்க கவர்ச்சியாக இருக்கும் இதன் அழகிய பழத்தை சாப்பிட்டால், சாப்பிட்டவுடனேயே நேரடியாக மேல் உலக பயணம்தான்.அழகுக்கு பின்தான் ஆபத்து என்பது போல பார்க்க அழகாக காட்சியளிக்கும் இந்த மரம் சுமார் 50 அடி வரை கூட வளரக் கூடியது. இதை பற்றி கொலம்பஸ் கூட தனது குறிப்புகளில் சாவின் சிறிய ஆப்பிள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
பெரும்பாலும், மின்னல் தாக்குதலுக்கு பலியானவர்கள் மரங்களின் அடியில் தஞ்சம் புகுந்தவர்கள்தான். இது ‘சைட் ஃபிளாஷ்' என்று அழைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவருக்கு அருகில் ஒரு உயரமான பொருளை மின்னல் தாக்கும்போது, அங்கே இருக்கும் பாதிக்கப்பட்டவருக்கு தாக்குதல் பரவுகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். மின்னல் தாக்குதலினால் 2019 ஜூலை 25 முதல் 31 வரை அதிகபட்ச உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும், அந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் நடந்ததாகவும் . வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் சோட்டா நாக்பூர் பீடபூமி பகுதிகளில் அதிகப்படியாக மின்னல் தாக்குதல்கள் நடந்தன என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்டார்டிகா எனப்படும் பூமியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பனிப்படர்ந்த துருவ பிரதேசம். இங்கு பயணம் மேற்கொள்வது மிகப் பெரிய சாகசம். ஏறக்குறைய உயிரை பணயம் வைத்து மேற்கொள்ளப்படும் பயணம் என்று கூட சொல்லலாம். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்து அந்நாட்டில் ராணுவத்தில் கேப்டனாக பணியாற்றும் இந்திய வம்சாவளி பெண்ணான ஹர்பிரீத் சான்டி முதன்முறையாக துருவ பிரதேசத்தில் தனியாக பயணம் மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார். 40 நாட்கள் அப்பகுதியில் அவர் மேற்கொண்டு திரும்பிய சாகச பயண செய்தி தற்போது ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது துணிச்சலுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
நாயின் மூளையில் உள்ள மோப்ப சக்தி, மனிதனின் மோப்ப சக்தியை விட 40 மடங்கு அதிகம். எனவே நாய்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் மனித நோயை கண்டறிவதற்கான முழுத் திறனும் நாய்களுக்கு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மருத்துவர்களுக்கு உதவும் வகையில், பார்கின்ஸன்ஸ் நோய் ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களை கண்டுபிடிக்க நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நாய்களின் மூக்கில் உள்ள துவாரத்தில் இருந்து வெளிப்படும் மெல்லிய ஆற்றலைப் பயன்படுத்தி நாய்களால் நோய்களைக் கண்டுபிடிக்க முடியும் என ஆய்வில் கண்டறியபட்டுள்ளது. இதனால் நோய் கண்டறிவதற்கு நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன. புற்றுநோயை கண்டுபிடிப்பதற்கும் கடந்த காலத்தில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
நமது பூமியில் நில நடுக்கம் ஏற்படும் என்பது நமக்கு தெரியும். பூமிக்கடியில் இருக்கும் டெக்டானிக் பிளேட் என்று அழைக்கப்படக் கூடிய பாறைத் திட்டுகள் நகரும் போது இது போன்ற நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இதே போல, சந்திரனின் மேற்பரப்பிலும் புவி அடுக்குகள் போல தட்டுகள் அமைந்திருப்பதும், அவை நகர்கின்ற போது நிலநடுக்கம் ஏற்படுவதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதில் குறிப்பாக இந்தியா அனுப்பிய சந்திரயான் இது தொடர்பான படங்களை எடுத்து அனுப்பியுள்ளது என்றால் ஆச்சரியம் தானே...
பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில், உயிரினங்கள் வாழ தகுதியுள்ள பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் பகுதியில் திரவ நிலையில் தண்ணீர் உள்ளது. இது பூமியை விட 2 அல்லது 3 மடங்கு பெரியது. இதன் ஓரத்தில் ‘ஜிஜே 625’ என்ற நட்சத்திரமும் உள்ளது. இந்த கிரகத்தை கனாரி தீவுகளில் உள்ள ‘இன்ஸ்டிடியூட் டி ஆஸ்ட்ரோ பிசியா டி கனாரீஸ்’ நிறுவன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
மேலும் ஒரு வழக்கில் பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 17 ஆண்டுகள் சிறை - ரூ.1.64 கோடி அபராதம்
20 Dec 2025இஸ்லமபாத், தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகிய இருவருக்கும் அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை வ
-
குடியுரிமையை பறிக்க பா.ஜ.க.வினர் முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு
20 Dec 2025கோவை, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் மூலம் வாக்குரிமையை பறித்து பின்னர் குடியுரிமையை பறிக்க முயற்சிக்கின்றனர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
-
எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் ஏவப்படுவதால் பழவேற்காடு மீனவர்கள் வரும் 24-ம் தேதி கடலுக்கு செல்ல தடை
20 Dec 2025திருவள்ளூர், ஸ்ரீஹரிகோட்டாவில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளதால் பழவேற்காடு மீனவர்கள் 24-ந்தேதி கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-12-2025.
20 Dec 2025 -
த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார்?
20 Dec 2025புதுச்சேரி, த.வெ.க.வில் அடுத்து இணைய போகும் அரசியல் பிரமுகர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.
-
தங்கள் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி: சிரியாவில் பயங்கரவாதிகள் மீது அமெரிக்க படைகள் திடீர் தாக்குல்
20 Dec 2025டிரிபோலி, இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ்.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
20 Dec 2025இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை
20 Dec 2025பாரீஸ், பிரான்சில் 12 பேரை விஷ ஊசி செலுத்தி கொன்ற மருத்துவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை: அமைச்சர் சேகர்பாபு
20 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கின்ற வரையில் தமிழ்நாட்டில் பிரிவினைவாதத்திற்கு இடமே இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தைவான் நடந்த கத்திக்குத்து சம்பவம்: 3 பேர் உயிரிழப்பு
20 Dec 2025தைபேய், ஆசிய நாடான தாய்வானின் தலைநகர் தைபேயில் நேற்று மாலை நடந்த கத்திக் குத்து தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
-
அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழப்பு
20 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அப்டேட் இல்லாமல் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சர் விமர்சனம்
20 Dec 2025திருச்சி, த.வெ.க. தலைவர் விஜய் அப்டேட் இல்லாமல் இருக்கிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகைக்கு பிறகு த.வெ.க.வை பார்த்து நாடே வியக்கும்: செங்கோட்டையன்
20 Dec 2025கோவை, பொங்கலுக்குப் பிறகு எங்களை பார்த்து நாடே வியக்கும் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
2026 சட்டசபை தேர்தல்: த.வெ.க. தலைமையில் கூட்டணியை அமைக்கும் பணியில் விஜய் தீவிரம்
20 Dec 2025சென்னை, த.வெ.க. தரப்பில் கூட்டணிக்கு கட்சிகளை அழைத்து வரவும், அவர்களிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவும் குழு அமைக்கப்பட உள்ளது.
-
கலைஞர் பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
20 Dec 2025சென்னை, கலைஞர் பொற்கிழி விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த ஆஸ்திரேலியா கதாநாயகனின் சிகிச்சைக்கு குவிந்த நன்கொடை
20 Dec 2025கான்பெரா, ஆஸ்திரேலியாவின் நியுசவுத் வேல்ஸ் மாகாணத்தின் சிட்னி நகரில் போண்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை மிக பிரபலமானது.
-
தமிழகம் மதநல்லிணத்துக்கு எடுத்துகாட்டான மாநிலம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
20 Dec 2025நாகப்பட்டினம், சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை; வெள்ளி விலை புதிய உச்சம்
20 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது. அதன்படி ஒரு சவரன் ரூ.99,200-க்கு விற்பனையானது.
-
தமிழருவி மணியன் கட்சி த.மா.கா.வில் இணைந்தது
20 Dec 2025சென்னை, தமிழருவி மணியன் தனது கட்சியை ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
-
த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
20 Dec 2025சென்னை, த.வெ.க. நிர்வாகிகளுடன் விஜய் நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.
-
தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் சரண்
20 Dec 2025ஐதராபாத், தெலுங்கானாவில் 41 மாவோயிஸ்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.
-
தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் 62 கோடி ரூபாய் மதிப்பிலான பொருநை அருங்காட்சியகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
20 Dec 2025நெல்லை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நேற்று திறந்து வைத்து பார்வையிட
-
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லையில் உற்சாக வரவேற்பு
20 Dec 2025சென்னை, 2 நாள் பயணமாக நெல்லை சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்ரீனிவாசன் நல்ல நண்பர்: நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
20 Dec 2025சென்னை, ஸ்ரீனிவாசன் எனது நல்ல நண்பர் என்று நடிகர் ரஜினிகாந்த் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
மேற்கு வங்கத்தில் பா.ஜ.வுக்கு வாய்ப்பு ஒன்றை தாருங்கள்: பிரதமர் மோடி வேண்டுகோள்
20 Dec 2025கொல்கத்தா, பீகார் தேர்தல் முடிவுகள் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. கூட்டணி வெற்றிக்கான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறினார்.


