Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

birds

தொலை தூரத்தில் இருந்து வலசை வரும் பறவைகள் வானில் கூட்டமாக பறப்பதை பார்த்திருப்போம். அவை பெரும்பாலும் ஆங்கில 'V'வடிவில் பறப்பதை காணலாம்.. அது ஏன் அவ்வாறு பறக்கின்றன.. அவ்வாறு 'V' வடிவில் பறப்பதால் அவை ஆற்றலை சேமிக்கின்றன..தனியாக பறக்கும் பறவை காற்றால் பின்னுக்கு இழுக்கப்படும் விசையிலிருந்து, இவ்வாறு கூட்டமாக 'V' வடிவில் பறக்கும் போது அது தடுக்கப்படுகிறது... இதனால் அவற்றால் வெகு தொலைவுக்கும், இலகுவாகவும் பறக்க முடிகிறது.. மேலும் சக பறவைகளை எந்த நிலையிலும் பார்க்க முடிவதால் பாதுகாப்பாகவும் பின்தொடர முடிகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஸ்டார் ஹோட்டல்களில் விளையாடப்படும் பவுலிங்

சில பொம்மை போன்ற பின் என்ற ஏழெட்டு வடிவங்களை சற்று தொலைவிலிருந்து ஒரு பந்து மூலம் வீசி பள்ளத்துக்குள் தள்ளச் செய்யும் விளையாட்டை பவுலிங் என்கின்றனர். பெரும்பாலும் திரைப்படங்களில் ஸ்டார் ஹோட்டல்களில் நாயகிகள் விளையாடுவது போன்ற காட்சிகளை நாம் பார்த்து ரசித்திருப்போம். இந்த பவுலிங் விளையாட்டு எங்கு தோன்றியது தெரியுமா.. கிமுவிலேயே எகிப்தில் இந்த விளையாட்டு விளையாடியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆசியா மைனரில் லிடியா மக்களால் அறிமுகப்படுத்தப்பட்டதாக ஹெரோடோட்டஸ் குறிப்பிடுகிறார். கிபி 300 இல் ஜெர்மனியில் விளையாடியிருக்கிறார்கள். தனது படைவீரர்கள் இதை விளையாட கூடாது என இங்கிலாந்து மன்னர் 3 ஆம் எட்வர்டு தடை விதித்துள்ளான். அதன் பின்னர் உலகம் முழுவதும் இது பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

எரிமலை, volcano, lava

உலகத்துல மொத்தம் சுமார், 1,500 எரிமலைகள் தொடர்ந்து (பல வருடங்களாக) தீக்குழம்பைக் கக்கிக்கிட்டே இருக்குதாம். எரிமலையின் பியூமீஸ் என்னும் பாறை மட்டுமே தண்ணீரில் மிதக்கும் தன்மை கொண்டது. சூப்பர் எரிமலைகள் எனப்படுபவை வெடித்துச் சிதறும்போது,பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலும் தீமழை பொழிவதோடு, பருவநிலை மாற்றங்களையும் உருவாக்கும் தன்மை கொண்டவையாம். இத்தகைய ஒரு எரிமலை, அமெரிக்காவின் யெல்லோ ஸ்டோன் தேசிய பூங்காவில் இருக்கிறதாம். இது வெடிப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். உலகின் மிகப் பயங்கரமான எரிமலை, இந்தோனேஷியாவின் சும்பாவா (Sumbava)தீவில் உள்ள, டாம்போரா(Tambora) மலையில்தான் வெடித்ததாம். 1815 ஆம் ஆண்டு வெடித்துச் சிதறிய இந்த எரிமலைக்கு, ஒரு லட்சம் மக்கள் பலியானார்களாம்! அந்நாட்டில் சுமார் 76  எரிமலைகள் இருக்கின்றன என்கிறது ஒருஆய்வு. ஐஸ்லாந்து நாடு, எரிமலைகளின் மேலேதான் உட்கார்ந்து இருக்கிறதாம். எரிமலைகள் வளரும் தன்மையுடையனவாம்!  உலகின் மிகப்பெரிய எரிமலை ஹவாயின் “மாய்னா லோவா (Mauna Loa)”.

யுரேகா, யுரேகா என சொன்னவர் யார் தெரியுமா?- ஏன் சொன்னார்

ஆர்கிமிடிஸ்    என்பவர்    கிரேக்க நாட்டைச் சேர்ந்த  ஒரு  கணித  மேதை;  இவர் வாழ்ந்த  காலம் கி.பி.287-212  ஆகும்.  ஆர்கிமிடிஸ்  தமது  கோட்பாடுகளை   நிரூபிப்பதற்கு, உரிய   சோதனைகளை நடத்திப்  பார்ப்பதில்  பெரும்  நம்பிக்கை கொண்டிருந்தார்.   அவர் கண்டுபிடித்த  ஆர்கிமிடியன்  திருகாணி தொழில் நுட்பம் நீரேற்றும்   பயன்பாட்டிற்கு  உரியதாக  இன்றும்  வேளாண் பாசனத்  துறையில்  விளங்கி  வருகிறது. நெம்புகோல்கள் மற்றும்  கப்பிகள் (pulleys) பயன்பாட்டிற்கு உரிய விதிகளை,  ஆர்கிமிடிஸ்தான்  அறிவியல்  உலகிற்கு  அளித்தார். ஆர்கிமிடிசின்  வாழ்க்கையில்  நடந்ததாகக்  கூற்ப்படும்  ஒரு  நிகழ்வு   இன்றும் அறிவியல்   உலகில்   நினைவு  கூறப்படுவதாக  விளங்கி  வருகிறது.  குளியலறையில் நிர்வாணமாகக்  குளித்துக்  கொண்டிருந்த நிலையில்,  அவர் ஓர் அறிவியல் உண்மையைக்  கண்டறிந்தார்; உடனே, "கண்டுகொண்டேன், நான் கண்டு கொண்டேன்" என்னும் பொருள்படும் ‘யுரேகா! யுரேகா! (Eureka!)’ எனக் கூறியவாறே தெருவில் இறங்கி நிர்வாணமாக ஓடினார் என்பதே அந்நிகழ்வு. இந்நிகழ்ச்சி நடந்ததோ அல்லது கற்பனையோ, ஆனால் அவர் கண்டுபிடித்த உண்மை இன்றும் போற்றப்பட்டு வருகிறது; அவ்வுண்மை இதுதான்: "ஒரு பொருள் நீரில் மிதந்தால் அல்லது மூழ்கினால், அது தன் எடைக்கு சமமான நீரை வெளியேற்றுகிறது".

மருத்துவம் ஆயிரம்

உங்கள் அக்குள் பகுதியில் கருப்பாக மடிப்புகள் இருந்தால் அவை சர்க்கரை வியாதியின்அறிகுறியாகும். இது ஒரு சரும கோளாறு. அக்குள் பகுதியில் உருவாகும். அக்குள் பகுதியில் உள்ள அந்த கருப்பு மடிப்பு வெல்வெட் போல் மிருதுவாகவும், கெட்டியாகவும் இருக்கும். சிலருக்கு கோதுமையிலுள்ள குளுடன் அலர்ஜியை உண்டாக்கும். அவர்களுக்கு சர்க்கரை வியாதி வருவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

மரக்கிளையில் வீடுகள்

மரக்கிளையில் பறவைகள்தான் கூடு கட்டும். இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் பறவைகள் மத்தியில் மரக்கிளையில் வீடுகள் கட்டினால் எப்படி இருக்கும்.  அப்படியானால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் வடக்கு கர்நாடாகா. அங்கே தண்டேலி என்பது கோவா எல்லையை ஒட்டியுள்ள கர்நாடகாவின் வடக்கு முனையில் அமைந்துள்ள ஒரு வெப்பமண்டல மழைக்காடு ஆகும். இங்கு  தரையில் இருந்து 40 அடி உயரத்தில் ஹார்ன்பில் ரிவர் ரிசார்ட் அமைந்துள்ளது. இது ஒரு ஆற்றங்கரையில் அமைந்துள்ள ரிசார்ட் ஆகும். இது தண்டேலியின் கணேஷ்குடி பகுதியில் காளி நதி மற்றும் தடிமனான காடுகளுக்கு நடுவே அடர்ந்த மரங்களில் கிளைகளுக்கு மத்தியில் கனமான மூங்கில்களால் கட்டப்பட்ட குடிசை பாணியில் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் தேனிலவுக்கு வரும் தம்பதிகளுக்கு ஹார்ன்பில் ரிவர் ரிசார்ட் ஒரு சொர்க்கமான இடமாக திகழ்கிறது. என்ன தண்டேலிக்கு செல்ல ரெடியா...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago