சுவிட்சர்லாந்தின் ஷூரிச் நகரை சேர்ந்தவர் டிம்ஸ்டெய்னர், இவர் பலவிதமான பச்சை குத்திக் கொண்ட தனது முதுகு தோலை 2008-ம் ஆண்டில் ஜெர்மனி கண்காட்சி அமைப்பாளர் ஒருவரிடம் விற்பனை செய்து விட்டார். தற்போது கண்காட்சிகளில் தன்னை காட்சி பொருளாக்கி வரும் அவர், மறைவுக்கு பின்னும் அவருடைய தோல் நிரந்தரமான காட்சி பொருளாக உள்ளதாம்.
சில சுவாரிஸ்யமான தகவல்கள்
நிலவில் பெரிய அளவில் தண்ணீர் இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அப்பல்லோ விண்களத்தில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவிற்கு சென்றபோது அங்கிருந்து எடுத்துவரப்பட்ட மாதிரிகளின் மூலம் அங்கு நீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நிலவில் உள்ள நீர் வருங்காலத்தில் விண்வெளி ஆய்வாளர்களின் தாகத்தை தணிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மதுவில் உள்ள ஆல்கஹால் மனிதர்களின் நினைவாற்றலை அதிகரிக்கிறதாம். இங்கிலாந்தில் இதுதொடர்பாக, 88 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக அளவு மது குடித்தவர்களை விட சிறிதளவு மது குடித்தவர்களுக்கு நினைவாற்றல் சக்தி அதிகரித்திருந்தது. மேலும் அதிக அளவு மது குடித்தவர்களின் உடல் நலம், மனநலம் மற்றும் நினைவாற்றல் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
வெற்றிலையை அரைத்து சாறு எடுத்து, அதனுடன் கிராம்பை தூள் செய்து கலந்து பேஸ்ட் போல் செய்து, நெற்றியில் தடவினால், தலைவலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். பசலைக்கீரையை அரைத்து நெற்றியில் தடவினாலும் தலைவலி நீங்கும். துளசி இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து குடித்தால், தலைவலி குணமாகும்.
வைபை இணைப்புக்களுக்கு பதிலாக ஒளியினை அடிப்படையாகக் கொண்டு இணைய இணைப்பினை உருவாக்கப்படுவதே லைபை.இத்தொழில் நுட்பமானது வைபையைப் போல பன்மடங்கு வேகத்தினைக் கொண்டதாக இருக்கிறது. தற்போது பயன்பாட்டில் உள்ள இணைப்புகளை விட 100 மடங்கு வேகமாக இருக்குமாம். லைபை தொழில்நுட்பத்தில் எல்.இ.டி மின்விளக்குகளே பயன்படுத்தப்பட்டிருந்தன. இந்த லைபை வசதியின் மூலம் 40 Gbps வேகத்தில் தரவுப்பரிமாற்றம் மேற்கொள்ளமுடியும். அகச்சிவப்பு கதிர்களை பயன்படுத்தி இந்தப் புதிய லைபை உருவாக்கப்பட்டுள்ளது. வீடுகள், அலுவலகங்களில் லைபை சாத்தியம் என்று கூறப்படுகிறது. பரிசோதனை முயற்சியில் இருக்கும் இத் தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தால் இணைய உலகில் திருப்புமுனையாக இருக்கும் .
பெரும் பாலும் ரயில் பயணங்களின் போது தேநீர் விரும்பிகளுக்கு கிடைக்கக் கூடிய அனுபவம்தான் இன்ஸ்டன்ட் டீ பேக். உடனடி தேயிலை பொட்டலம். சூடான நீரில் அல்லது பாலில் அதை அமிழ்த்தியவுடன் சுடச்சுட தேநீர் தயார். இது எப்போது யாரால் கண்டு பிடிக்கப்பட்டது தெரியுமா... அதுவும் மிகவும் தற்செயலாகத் தான் இது வடிவமைக்கப்பட்டது என்றால் ஆச்சரியம் தானே..1908 இல் நியூயார்க் நகரைச் சேர்ந்த தேயிலை வியாபாரி தாமஸ் சுல்லிவன் என்பவர் தனது வாடிக்கையாளர்கள் சிலருக்கு சிறிய சிலிக்கன் பைகளில் தேநீரை பார்சலாக அனுப்பி வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அதை பெற்ற வாடிக்கையாளர்கள் அதை பிரிக்காமல் அப்படியே சூடான நீர் அல்லது பாலில் கலக்க வேண்டும் என்று கருதி அதையும் சேர்த்து போட்டு கொதிக்க வைத்து பருகியுள்ளனர். இது சிறப்பாக இருப்பதாகவும் அவருக்கு கடிதமும் எழுதினர். பிறகென்ன அவரது பிசினஸ் மூளை இதை சிக்கென பிடித்துக் கொண்டு குட்டி குட்டி இன்ஸ்டன்ட் டீ பேக்குகளை வடிவமைத்து பேடன்ட் உரிமை பெற்று விற்கத் தொடங்கி... தற்போது நம்மூர் ரயில் நிலையம் வரையிலும் வந்து விட்டது என்றால் ஆச்சரியம் தானே..
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


