முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு

siddha-1

பித்தம்  தெளிந்து ஆயுள் பெருக ;-- இஞ்சி துண்டுகளை தேனில் ஊற வைத்து 48 நாட்கள் சாப்பிட வேண்டும்.

பித்த மயக்கம் தீர ;-- இஞ்சி சாறு மற்றும் வெங்காய  சாறுடன் தேன் கலந்து குடிக்கலாம்.

தாகம்,பித்தம் குறைய ;-- நல்ல பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்த சாறை அடுப்பில் சூடேற்றி பின் ஆற வைத்து சாப்பிட்டால் தாகம்,பித்தம் குறையும்.

பித்தத்தை தணிக்க ;-- எலுமிச்சை சாதத்தை வாரத்தில் மூன்று நாட்கள் காலையில் சாப்பிடலாம்.

பித்த நீர் மலத்துடன் வெளியேற ;-- ரோஜாப்பூ கஷாயம் செய்து பால்,சர்க்கரையை கூட்டி சாப்பிடலாம்.

பித்தபாண்டு தீர ;-- பொன்னாவிரை வேர் ,சுக்கு, மிளகு,சீரகம் போட்டு கஷாயம் செய்து குடிக்கவும்.

பித்த கிறுகிறுப்புக்கு ;-- கறிவேப்பிலை துவையல் அல்லது விளக்கெண்ணைய் கலந்து காய்ச்சி ஆற வைத்து அந்த தைலத்தை கரும் படையில் தடவலாம்.

பித்தத்தை குறைக்க ;-- விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வரலாம்.

பித்த கோளாறுகள் அகல ;-- அகத்திக்கீரையை சாப்பிட்டு வரலாம்.

பித்தம் நீங்கி உடல் பலம் பெருக ;-- பனங்கிழங்கு சாப்பிடலாம்.

உடல் உஷ்ணத்தை தணிக்க ;-- கமலாபழம் சாப்பிடலாம்.

கல்லடைப்பு ;-- நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர தீரும்.

பித்த சூடு தணிய ;-- எலுமிச்சை இலையை மோரில் ஊற வைத்து,அந்த மோரை உணவில் பயன்படுத்தலாம்.

பித்தம் குறைய ;-- அரச மரத்தின் குச்சியை சிறுதுண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆற வைத்து அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

பித்த நீர் நீங்க ;-- சீதேவி செங்கழுநீர் கஷாயம் சாப்பிட பித்த நீர் நீங்கும்.

பித்த நீர் வெளியேற ;-- ரோஜாப்பூ கஷாயம் செய்து பால்,சர்க்கரையை கூட்டி சாப்பிட பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.

பித்தபாண்டு தீர ;-- பொன்னாவிரை வேர் ,சுக்கு, மிளகு,சீரகம் போட்டு கஷாயம் செய்து குடிக்க பித்தபாண்டு தீரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்