முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகன் மீது புகார் கூறியது யார்? பதிலளிக்க ராஜ்நாத் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 29 ஆகஸ்ட் 2014      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஆக.30 - காவல் துறை அதிகாரியிடம் லஞ்சம் வாங்கியதாக, தனது மகன் மீது புகார் கூறியது யார்? என்பதைத் தெரிவிப்பதற்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம், உங்கள் மகன் மீதான முறைகேடுப் புகாரின் பின்னணியில் யார் மீதாவது உங்களுக்கு சந்தேகம் இருக்கா என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது, நீங்கள் அனைவரும் புலனாய்வு செய்தியாளர்கள். எனது மகனைப் பற்றி வதந்தியைப் பரப்பியவர்களை, நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும், என்று மட்டும் ராஜ்நாத் சிங் பதிலளித்தார்.

ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ், காவல் துறை அதிகாரியிடம் இருந்து லஞ்சம் வாங்கியதாகவும், அதனால் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜ்நாத் சிங், தனது குடும்பத்தினர் முறைகேடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரம் இருந்தால், தான் அரசியலை விட்டே விலகுவதாக கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்