முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுச் செயலாளராக முதல்வர் தேர்வு: சரத்குமார் வாழ்த்து

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2014      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.31 - அ.தி.மு.க. பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார் .

:இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக முதல்-அமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அ.தி.மு.க. தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவில் தனிப்பெரும் சக்தியாக உருமாறும் விதமாக, திறம்பட திட்டங்கள் வகுத்து அதனை சரியாக நடைமுறைப் படுத்தியிருக்கும் ஆற்றல், முதல்-அமைச்சரின் தனிச்சிறப்பு. அதன் காரணமாகத்தான் இவரே மீண்டும் கழகத்தின் பொதுச் செயலாளராக அமர வேண்டும் என்பதை வலியுறுத்தி சுமார் 3 ஆயிரம் அ.தி.மு.க. நிர்வாகிகள் இவர் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்து ஏகமனதாக தேர்வு செய்திருக்கிறார்கள். முதல்-அமைச்சரின் தலைமையில் அ.தி.மு.க. மேலும் பல வெற்றிகளை குவித்து சாதனைகள் படைக்க வேண்டும் என்ற என் நல்லெண்ணத்தையும், பாராட்டுகளையும் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதேபோல், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவன தலைவர் டாக்டர் ந.சேதுராமனும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்