முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை வழக்கில் திமுக மு.அமைச்சர் மகளிடம் விசாரணை

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, செப் 24:

மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் நிலம் வாங்கியது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமி மகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமது என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொடைக்கானல் பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் கணேசன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் 1.64 ஏக்கர் இடத்தை திமுக முன்னாள் அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகள் இந்திராவுக்கு விற்பனை செய்ததாக கூறினார். இதையடுத்து ஐ. பெரியசாமி மகள் இந்திராவை தல்லாகுளம் போலீசார் விசாரணைக்காக அழைத்தனர். இதையடுத்து இந்திரா நேற்று தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் ஜமால் முகமதுவின் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்