முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல்-லில் தடை: டோனியுடன் சி.எஸ்.கே அணி நிர்வாகம் பேச்சு நடத்த முடிவு

வியாழக்கிழமை, 16 ஜூலை 2015      விளையாட்டு
Image Unavailable

சென்னை - ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக கேப்டன் டோனியை சந்தித்து ஆலோசனை நடத்த அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  அதே நேரத்தில் ஐ.பி.எல். போட்டிகளில் வேறு அணிகளில் டோனி விளையாடுவதை தடுக்கவும் மாட்டோம் எனவும் சென்னை அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

தற்போது சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த 2 தொடர்களிலும் டோனி விளையாடாமல் ஒதுங்கி இருப்பாரா? அல்லது வேறு அணியில் விளையாடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் டோனியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தவும் சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அனேகமாக ஓரிருநாட்களில் டோனியை நேரில் சந்தித்து இது குறித்து ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் டோனி எந்த முடிவையும் எடுக்கலாம்; அவருக்கு நெருக்கடி எதுவும் கொடுக்கமாட்டோம் என்றும் சென்னை அணி நிர்வாகம் கூறிவருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து