எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கார்த்திகைப் பட்ட நிலக்கடலை சாகுபடி செய்யும் போது கடைப்பிடிக்க வேண்டிய நவீன தொழில் நுட்ப முறைகளை பற்றி நம்பியூர், வேளாண் உதவி இயக்குநர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் எண்ணெய் வித்து பயிர்களில் ஒரு முக்கியமான பயிராக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நிலக்கடலை எண்ணெய் உற்பத்தியில் 94 சதவீதம் உணவிற்காகவும், 4 சதவீதம் தொழில்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது.
இந்தியா முதலிடம்: இதில் 54 சதவீதம் எண்ணெய் சத்து உள்ளது. நிலக்கடலை உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. நிலக்கடலைப் பருப்பில் அதிக அளவில் புரதச்சத்து உள்ளது. மேலும், இது ஒரு சிறந்த தீவனப் பயிராகப் பயன்படுகிறது. நிலக்கடலை பருப்பிலிருந்து எண்ணெய் எடுத்தபின் எஞ்சிய புண்ணாக்கில் 51.75 சதவீதம் புரோட்டினும், 0.22 சதவீதம் கொழுப்பும், 26.94 சதவீதம் கார்போஹைட்ரேட்டும் 5.7 சதவீதம் தாதும் உள்ளது. எனவே கால்நடைகளுக்கு ஊட்ட உணவாக இதைப் பயன்படுத்தலாம். இதில் 7 சதவீதம் தழைச்சத்தும் உள்ளதால் ஊட்டமிகு இயற்கை எருவாகவும் பயன்படுகிறது.
இரண்டு மடங்கு மகசூல்: இப்படிப்பட்ட பெருமைகள் அடங்கிய நிலக்கடலை சராசரியாக இறவையில் ஏக்கருக்கு 2 டன்களும் மானாவாரியில் ஒரு டன்னும் மகசூல் கொடுத்து வருகிறது சில முதன்மையான நவீன தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த மகசூலை இரண்டு மடங்காக்க இயலும்.
பருவம் மற்றும் மண் வகை: இறவை நிலக்கடலையைப் பொருத்தவரை ஏப்ரல், மே (சித்திரைப்பட்டம்) ஜூன், ஜூலை (ஆடிப்பட்டம்) டிசம்பர், ஜனவரி (கார்த்திகைப் பட்டம்) ஆகிய மாதங்களில் நிலக்கடலை சாகுபடி செய்ய ஏற்றது. பொதுவாக கார்த்திகைப் பட்டம் என்பது கார்த்திகை மற்றும் மார்கழி மாதத்தில் (நவம்பர், டிசம்பர்) விதைப்பு செய்யப்படுகிறது. கார்த்திகை மாதத்திற்குள் விதைப்புச் செய்வது அதிக மகசூலுக்கு வாய்ப்பை அதிகரிக்கிறது.
மண்: மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் நிலக்கடலைக்கு ஏற்றதாகும்.
உழவு: சட்டிக் கலப்பை பயன்படுத்தி உழுதபின் 3 அல்லது 4 முறை இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக் கலப்பைக் கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை (புழுதி ஆகும் வரை) உழ வேண்டும்.
ரகங்கள்: டி.எம்.வி-7, டி.எம்.வி-13, கோ- 3, கோ-4, வி.ஆர்.ஐ-2, வி.ஆர்.ஐ-3, வி.ஆர்.ஐ -5 , வி.ஆர்.ஐ -6 , ஏ.எல்.ஆர்-3 ஆகியவை ஏற்ற இரகங்களாகும்.
விதை நேர்த்தி: விதைகளை திரம் அல்லது மாங்கோசெப் மருந்து - 4 கிராம் - கிலோ விதைக்கு அல்லது கார்பென்டசிம்-2 கிராம்ஃகிலோ என்ற அளவில் விதையுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவும். இதை விதைப்புக்கு ஒரு நாள்முன்பு, செய்ய வேண்டும். இரசாயன மருந்துக்குப் பதிலாக ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மா அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் என்ற நன்மை செய்யும் உயிரியல் மருந்துகளைக் கலந்தும் விதைக்கலாம். மேலும், டிரைகோடெர்மா விரிடி… உயிரியல் பூஞ்சாணத்தை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் விதைப்பின் போது சிறிது தொழு உரத்துடன் கலந்து இடலாம். இதன் மூலம் தண்டு அழுகல், கழுத்தழுகல்,வேரழுகல் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. நிலக்கடலைப் பயிரில் போதுமான பயிர் எண்ணிக்கை இல்லாதது மகசூல் குறைவுக்கு முக்கியமான காரணமாதலால், விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியமாகும்.
ரைசோபியம் விதை நேர்த்தி: ரைசோபியம் உயிர் உரம்-400 கிராம் (2-பாக்கெட்) என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு உண்டான விதையுடன் அரிசிக் கஞ்சி சேர்த்துக் கலந்து நிழலில் காயவைத்து விதைக்க வேண்டும். மேலும், விதைப்பின் போது ரைசோபியம் 4 பாக்கெட், பாஸ்போ பேக்டர் - 4, பாக்கெட் சிறிது தொழு உரத்துடன் கலந்து வயலில் இட வேண்டும்.
இடைவெளி: 30 ஒ 10 செ.மீ இடைவெளியிலும், 4 செ.மீ ஆழத்திலும் விதைக்க வேண்டும். ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் இருக்க வேண்டும். அதாவது ஒரு சைக்கிள் டயர் அளவுக்குள் 11 செடிகள் இருக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மேலாண்மை: இறவைப் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 7:14:21 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து தரக்கூடிய 15 கிலோ யூரியா, 88 கிலோ சூப்பர் பாஸ்பேட் 35 கிலோ பொட்டாஷ் உரங்களை முழுவதும் அடியுரமாகவே இடவேண்டும். அல்லது டி.ஏ.பி 40 கிலோவுடன் பொட்டாஷ் 35 கிலோ – சேர்த்து அடியுரமாக இடலாம். நிலக்கடலைக்கு அனைத்து உரங்களையும் விதைப்பின் போது அடியுரமாகவே இடவேண்டும் என்பது முக்கியமானதாகும்.
நுண்ணூட்டமிடுதல் : நிலக்கடலை நுண்ணூட்டம் 5 கிலோ-வை 40 கிலோ மணலுடன் கலந்து, விதை விதைத்தவுடன் மேலாகத் தூவ வேண்டும். பயிர் வெளுப்பு, மற்றும் மஞ்சள் நிறமாகி வளர்ச்சி குன்றுவதை இதன் மூலம் தவிர்க்கலாம்.
களைக்கொல்லி: விதை விதைத்து 3 - வது நாளில், வயலில் போதுமான ஈரப்பதம் இருக்கும் போது ஏக்கருக்கு 800 மில்லி ’புளுகுளோரலின்” – என்ற களைக்கொல்லியை 300 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளிக்காத பட்சத்தில் விதைத்த 20 - 25 ம் நாளில் களை முளைத்தபின் தெளிப்பதற்கு ‘இமாசிதாபைர்” என்ற களைக்கொல்லியை ஏக்கருக்கு 300 மில்லி என்ற அளவில் தெளிக்கலாம்.
ஊட்டச் சத்து குறைபாடு: துத்தநாக குறைபாடுள்ள நிலத்திற்கு ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட் இடலாம். மேலும் வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள நுண்ணுட்டக் கலவைகளையும் பயன்படுத்தலாம்.
ஜிப்சம் இடுதல்: நிலக்கடலை உற்பத்தியை அதிகரிக்க பயிருக்கு ஜிப்சம் இடுதல் மிகவும் அவசியம். இதில் 23 சதம் - சுண்ணாம்பு சத்தும், 18 சதம் - கந்தக சத்தும் அடங்கியுள்ளது. இதில் சுண்ணாம்பு சத்தானது காய்கள் திரட்சியாகவும், அதிக எடையுடன் காய் உருவாகவும் வழி செய்கிறது.
கந்தகச் சத்தானது நிலக்கடலையில் எண்ணெய்ச்சத்தை அதிகரிக்கிறது. ஒரு ஏக்கருக்கு 80-கிலோ ஜிப்சத்தை அடியுரமாக விதைக்கும்போது இடவேண்டும், பின்னர் 40-45-ம் நாளில் களை வெட்டும் போது மீண்டும் ஒரு முறை 80-கிலோ ஜிப்சத்தை இட்டு பிறகு மண் அணைக்க வேண்டும்.
பூக்கள் உதிர்வதைத் தடுக்கவும், அதிக காய்கள் பிடிக்கவும் ஏதுவாக’பிளேனோபிக்ஸ்” - என்னும் பயிர் ஊக்கியை ஏக்கருக்கு 140 மில்லி என்ற அளவில் விதைத்த 25 - ம் நாளிலும் 35 - ம் நாளிலும் இரண்டு முறை தெளிக்கலாம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு: சுருள் பூச்சி மற்றும் சிகப்பு கம்பளிப்புழுவை கட்டுபடுத்த துவரை, தட்டை (அ) உளுந்து பயிர்களை ஊடுபயிர் செய்வதால் அவற்றில் இடப்படும் முட்டைகளை எளிதில் சேகரித்து அழித்து விடலாம்.
பொருளாதாரச் சேதநிலையை அறிந்து வேளாண்மைத்துறை பரிந்துரைக்கும் மருந்துகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். இப்படிப் பல்வேறு நவீன உத்திகளைக் கையாண்டு நிலக்கடலை சாகுபடியில் இரட்டிப்பு மகசூல் பெறலாம்.
இவ்வாறு நம்பியூர், வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: தர்காவுக்கு சொந்தமான இடத்தில் தூண் உள்ளது : ஐகோர்ட் கிளையில் வக்பு வாரியம் வாதம்
16 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் தர்காவுக்கு சொந்தமான இடத்தில்தான் தூண் உள்ளது என்று ஐகோர்ட்டில் வக்பு வாரியம் வாதம் முன் வைத்தது.
-
இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்தம்: ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
16 Dec 2025மாஸ்கோ, இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்து
-
தங்கம் விலை சவரனுக்கு 1,320 ரூபாய் குறைந்தது
16 Dec 2025சென்னை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.1,320 குறைந்துள்ளது.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் நானோ தொழில்நுட்ப மாநாடு: போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
16 Dec 2025வேலூர், வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஆகிய
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சம் பேர் விவரங்கள் வெளியீடு: ஜன.15 வரை திருத்தங்களைக் கோர அவகாசம்
16 Dec 2025புதுடெல்லி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் நீக்கப்பட்ட 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர், விவரங்களை தேர்தல்
-
ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்
16 Dec 2025ஈரோடு, ஈரோட்டில் விஜய் பிரசார பொதுகூட்டம் மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் ஏதும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
16 Dec 2025சென்னை, ரேஷன் கடைகளில் நாப்கின்கள் வழங்கும் திட்டம் இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
-
‘பெண்டானில்’ ஒரு பேரழிவு ஆயுதம்: முக்கிய உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து
16 Dec 2025வாஷிங்டன், பெண்டானிலை ஒரு பேரழிவு ஆயுதமாக வகைப்படுத்தும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
-
ஆஷஸ் 3-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
16 Dec 2025அடிலெய்டு, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் 3-வது டெஸ்ட் அடிலெய்டில் இன்று தொடங்குகிறது.
ஆஸ்திரேலியா வெற்றி....
-
ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் காரில் பயணம் செய்த பிரதமர் மோடி
16 Dec 2025புதுடெல்லி, ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு ஒரே காரில் அழைத்து சென்றார்.
-
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: சோனியா, ராகுலுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஏற்க மறுப்பு : விசாரணையை தொடர டெல்லி நீதிமன்றம் அறிவுறுத்தல்
16 Dec 2025புது டெல்லி, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை
-
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவரை நேரில் சென்று விசாரித்தார் ஆஸி., பிரதமர் அப்பனீஸ்
16 Dec 2025சிட்னி, சிட்னியில் யூதர்கள் நிகழ்வில் துப்பாக்கிச்சூடு நடத்தியவரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கியபோது குண்டடிப்பட்ட அகமத்-அல்-அகமதுவை மருத்துவமனையில் சந்தித்து அந்நாட்ட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-12-2025.
17 Dec 2025 -
ஜல்லிக்கட்டு போட்டிகான வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது
17 Dec 2025சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் இணையவழியில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.&
-
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
17 Dec 2025சென்னை, வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலை
-
பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
17 Dec 2025சென்னை, பொதுப் போக்குவரத்தை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை: புதிய உச்சத்தில் வெள்ளி விலை
17 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் உயர்ந்து ஒரு சவரன் ரூ.ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. வெள்ளி விலையோ வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டுள்ளது.
-
எத்தியோப்பியாவின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவம்
17 Dec 2025அடிஸ் அபாபா, பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
-
கடும் பனிமூட்டம் எதிரொலி: சென்னையில் 11 விமானங்கள் ரத்து
17 Dec 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் புறப்பாடு, வருகை என மொத்தம் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
குஜராத்: விபத்தில் 3 பேர் பலி
17 Dec 2025காந்தி நகர், குஜராத்தில் நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள்.
-
சனாதன கும்பலை கண்டித்து டிச. 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் திருமாவளவன் அறிவிப்பு
17 Dec 2025சென்னை, மதவெறி அரசியலைப் பரப்பும் சனாதனக் கும்பலைக் கண்டித்து டிசம்பர் 22 அன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய ஐகோர்ட் அனுமதி மறுப்பு
17 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் மேலும் மனுதாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு அனுமதி மறுத்துள்ளது.
-
இஸ்ரேல் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சு: இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை
17 Dec 2025ஜெருசலேம், 2 நாட்கள் அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கு பிரதமர் நெதன்யாகுவை சந்தித்து பேசினார்.
-
வரி விதிப்பு விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை : மத்திய நிதி அமைச்சர் தகவல்
17 Dec 2025டெல்லி, வரி விதிப்பு விவகாரத்தை கவனமாக கையாண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரி
-
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு: உள்நோக்கத்துடன் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை: ஐகோர்ட் கிளையில் தலைமை செயலாளர் விளக்கம்
17 Dec 2025மதுரை, எந்த உள்நோக்கத்துடனும் நாங்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை என்று திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் வழக்கு தொடர்பாக காணொலி காட்சி மூலம் ஆஜரான தலைமை செயலாளர் ஐக


