முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அம்மாபேட்டை அருகே செக்கானூர் கதவணை மின் நிலையத்தில் திடீரென மதகு உடைந்தது.

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      ஈரோடு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர் திருச்சி கல்லணையை சென்றடைகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே செக்கானூர், நெரிஞ்சிபேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை, பவானி, தக்கலை-1, தக்கலை-2 ஆகிய 7 இடங்களில் கதவணை மின்நிலையங்கள் அமைந்துள்ளன.இந்த மின்நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேறும் போது, தலா 30 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேட்டூரை அடுத்த செக்கானூரில் அமைக்கப்பட்டுள்ள கதவணை மின் நிலையத்தில் மொத்தம் 18 மதகுகள் உள்ளன. இங்கு நேற்று மாலை 4 மணியளவில் 7-வது மதகு(கதவு) தண்ணீரின் அழுத்தம் காரணமாக உடைந்தது.இதையடுத்து அந்த உடைந்த கதவின் வழியாக தண்ணீர் பீறிட்டு காவிரி ஆற்றில் செல்கிறது.இதனால் இந்த மின்நிலையத்தில் நடைபெற்று வந்த மின் உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. மேலும் இங்கு கதவு உடைந்த பகுதியில் அவசர கால மதகு அமைப்பதற்காக மின் நிலையத்தில் தேக்கி வைக்கப்பட்டு இருந்த 0.45 டி.எம்.சி. தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இது முழுமையாக வெளியேற்றப்பட்டவுடன் அவசர கால மதகு பொருத்தப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி நடைபெறும்.

குடிநீர் திட்டங்கள்

 இந்த மின் நிலையத்தில் முழுக்கொள்ளளவு தண்ணீர் தேக்கி வைக்கப்படும் போது, மேட்டூர் அணையின் காவிரி பாலம் வரை தண்ணீர் தேங்கி நின்று கடல் போல் காட்சி அளிக்கும். மேட்டூரை அடுத்த தொட்டில்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள சேலம், வேலூர் மாநகராட்சிகளுக்கான தனி குடிநீர் திட்டங்கள், காடையாம்பட்டி குடிநீர் திட்டம் உள்பட பல்வேறு குடிநீர் திட்டங்களுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் ராட்சத மோட்டார்கள் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டு பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறது.தற்போது இந்த மின் நிலையத்தில் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்படுவதால், இந்த குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் உறிஞ்சி எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே மீண்டும் இந்த மின் நிலையத்தில் முழுமையான அளவு தண்ணீர் தேக்கி வைத்தால் மட்டுமே இந்த குடிநீர் திட்டங்களுக்கு தட்டுப்பாடு இன்றி தண்ணீர் கிடைக்கும்.

 

கலெக்டர் நேரில் ஆய்வு

 

 இது குறித்து தகவல் அறிந்தவுடன் சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் மின்நிலையத்தில் மதகு உடைந்த பகுதிக்கு வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாதரெட்டி, பொதுப்பணித்துறையின் நிர்வாக பொறியாளர் சுப்பிரமணி, மேட்டூர் தாசில்தார் கிருஷ்ணன் ஆகியோர் சென்றனர்.மேலும் நாமக்கல், ஈரோடு மாவட்ட கலெக்டர்களுக்கும் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் செக்கானூர் கதவணை மின்நிலையத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். அதன்பின்னர் அவர் ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளான சின்னப்பள்ளம், நெரிஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி ஆகிய இடங்களுக்கு சென்று நேரில் பார்வையிட்டார். நெரிஞ்சிப்பேட்டை கட்டளை கதவணையை பார்வையிட்ட கலெக்டர் பிரபாகர் காவிரி ஆற்றில் தண்ணீர் செல்லும் அளவு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago